ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2023

விஞ்ஞான உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

இன்றைய விஞ்ஞான உலகில்… உலகெங்கிலும் பார்த்தோம் என்றாலும் சிறிய குழந்தைகள் தப்பித்தவறி ஏமாந்து விட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

வயது முதுமையாக இருப்பவர்களில் மிகவும் பண வசதி உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

விஞ்ஞான அறிவு கொண்டு சிறிய குழந்தைகளுடைய மூளையை எடுத்து ஆசிடாக மாற்றுகின்றார்கள். இந்த அமிலத்தை மருந்தாக ஊசியில் ஏற்றி… வயதாகி இறக்கும் தருவாயில் இருக்கக்கூடிய மனிதனுக்கு இதைப் போட்டு அவன் முதுமையை இளமையாக்குகின்றான்.

மீண்டும் இளமையாக வாழ்வதற்கு முயற்சிக்கின்றான். விஞ்ஞானம் அந்த அளவிற்கு இன்று வளர்ந்து விட்டது.

இளம் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் வளர வேண்டும் என்ற தாய் தந்தையர் பாடுபடுகின்றனர். பணம் வசதி வைத்திருப்பவன் விஞ்ஞான அறிவு கொண்டு அவனுக்குச் சாதகமாக்கிச் செயல்படுத்துகின்றான்.

குழந்தைகளைக் கடத்திச் சென்று விடுகின்றார்கள். பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று செயல்பட்டாலும் இப்படி மாற்றி மாற்றி குழந்தைகளை இரக்கமற்றுக் கொன்றிடும் நிலைகள் வந்து விட்டது.

விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் மனிதன் இன்று இவ்வாறு தான் “அசுர குணம் கொண்டு” சென்று கொண்டிருக்கின்றான்.

கொஞ்ச வயசுப் பிள்ளைகள் வெளியிலே சென்றால் போதும்…! அப்பா யார்…? அம்மா யார்…? என்று கேட்டுவிட்டு… “உன் அப்பா தான் இங்கே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்…” என்று ஒரு பொருளைக் கொடுத்து ஏமாற்றி அவனைச் சாப்பிடும்படி செய்து மயங்க வைத்து அலுங்காமல் கூட்டிச் சென்று விடுகின்றார்கள்.

படித்த டாக்டர்கள் நிறைய இருக்கின்றார்கள். மக்களைக் காக்கும் டாக்டர் தொழிலுக்கும் படித்துவிட்டு காசுக்காக வேண்டி இந்தப் பழக்கத்திற்கு என்ன செய்கின்றார்கள்…?

மயக்கிக் கூட்டிக் கொண்டு வந்தவர்களின் கண்களை எடுத்து ஒரு நாட்டிற்கு அனுப்புகின்றார்கள். எலும்பை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… எலும்புக்குள் இருக்கும் ஊனை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… மண்டையில் இருக்கக்கூடிய மூளையை ஒரு நாட்டுக்கு அனுப்புவது… இருதயத்தை ஒரு இடத்திற்கு அனுப்புவது கல்லீரலை ஒரு பக்கம் அனுப்புவது கிட்னியை அனுப்புவது என்று விலை பேசி வியாபாரம் செய்கின்றார்கள்.

கொள்ளையடிப்பதற்கு எதுவும் சிக்கவில்லை என்றால் பிள்ளைகளை இவ்வாறு கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்கள்.

மெக்கானிக் வேலை தெரிந்து கொண்டவர்கள் காரை ஒர்க்ஷாப்பில் வைத்து பார்ட் பார்ட்டாகக் கழட்டி விற்பது போன்று மனித உடல்களைக் கவர்ந்து சென்று பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆகக் கழட்டி விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

விஞ்ஞானம் அந்த அளவில் இருக்கின்றது. அது மட்டுமல்ல…!

டிவி ரேடியோ அனைத்தும் நாம் கேட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அதை வைத்து என்ன செய்கின்றார்கள்…?

கடும் நஞ்சு கொண்ட அலைகளைத் தயார் செய்கின்றனர். டிவி ஸ்டேசனிலிருந்து எந்த அலை வரிசையில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்களோ அந்தக் காந்த அலைகளோடு இந்த விஷத்தைக் கலந்து விடுகின்றார்கள்.

அதன் மூலம் டிவி பார்ப்பவர்களைப் புத்தி இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றது விஞ்ஞான அறிவு. கடைசியில் பைத்தியம் பிடித்தது போல் சிந்தனை இல்லாது போகிறது. இதிலே வளர்ச்சி பெற்று இருக்கின்றது

இதிலிருந்தெல்லாம் காப்பாற்றுவதற்கு யார் இருக்கின்றார்கள்…?

இப்படிப்பட்ட உலகில் தான் இன்று நாம் வாழுகின்றோம் சாமியோ சாமியாரோ ஜோசியமோ வேள்வியோ யாகமோ யாரும் காப்பாற்றப் போவதில்லை.

அதே சமயத்தில் ஆயுள் ஹோமம் செய்கின்றனர் ஹோமம் செய்பவர் வயது ஐம்பது வயது ஐம்பத்தைந்து வயது இருக்கும்.

ஹோமத்தைச் செய்து மந்திரங்களைச் சொல்லி அறுபதாம் கல்யாணம் ஏழுபதாம் கல்யாணம் என்பதாம் கல்யாணம் என்று எல்லாமே செய்கின்றனர்.
1.ஹோமத்தைச் செய்து அவரை ஒரு 200 வயது வரைக்கும் வாழ வைத்தால் பரவாயில்லை
2.ஹோமத்தைச் செய்துவிட்டு அடுத்துப் பணம் இல்லை என்றால் “எங்கே செல்கிறார்…” என்று சொல்ல முடியாது
3.காசைக் கொடுத்துவிட்டு ஏமாற வேண்டியதுதான்.

மந்திரத்தைச் சொல்லி மனித உடலில் விளைய வைத்து உணர்வுகளைப் பிரித்த பின் மந்திரத்தைத் தட்டி விட்டான் என்றால் அலுங்காமல் அவன் பிடித்துக் கொண்டு செல்வான்.

மூளையை எடுத்து அதைப் பார்சல் செய்து முதுமையானவனுக்குள் பாய்ச்சி இளமையாக ஆக்குவது போன்று
1.மந்திரக்காரர்கள் இது போன்ற உணர்வுகளை எடுத்து
2.ஒன்றுமறியாத குழந்தை கருவில் இறந்ததை எடுத்து இழுத்துச் சுற்றித் தட்டினான் என்றால் இதிலே வந்து ஒட்டிக் கொள்ளும்.
3.தன் எண்ணத்தின் அலையைப் பாய்ச்சினான் என்றால் “ரேடியோ கதிரியக்கங்கள்” போன்று பாய்ந்து கொண்டிருக்கும்
4.அப்படிப் பாய்ச்சச் செய்து நல்லது… கெட்டது… மற்ற என்னென்ன புத்தி வேண்டுமா அடுத்தவனை அவ்வாறு ஆக்குவதற்கு இதைச் செய்கின்றனர்.
5.அரச காலங்களில் தவறான வழியில் செயல்படுத்தப்பட்ட நிலை… இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.

மனிதன் இறந்து வெளியே சென்ற பின் அந்த உணர்வைக் கவர்ந்து மந்திரத்தினால் நான் சக்தி பெற்றுள்ளேன்…!
1.உடனடியாக அவனை நான் நிறுத்திக் காட்டுகின்றேன்… கை கால் வராமல் செய்கின்றேன் பார்…!
2.பொருளை வரவழைக்கின்றேன் பார்… விபூதியை வரவழைக்கிறேன் பார்…! என்பார்கள்.

அந்த விபூதியை வாங்கிய பின் நாம் அவரைப் “பெரிய மகான்” என்று போற்றுவோம்.

ஆனால் நாம் உடல் விட்டுச் சென்றால் அவன் கையில் சிக்கிக் கொண்டு “விபூதியாகப் போவோம்…” நீ சொல்கிறதை எல்லாம் நான் கேட்கிறேன்…! என்று அவனுக்கு அடிமையாகப் போக வேண்டியது தான்.

இன்று அவனிடம் விபூதி வாங்கினால் நாளை அவன் என்ன சொல்கிறானோ உடலை விட்டுச் சென்ற பின் “நான் உன்னிடம் வருகிறேன் நீ சொல்வதை நான் கேட்கிறேன்…” என்று போக வேண்டியது தான்.
1.உடல் வெளியிலே போகிறது…
2.ஆனால் உணர்வுகள் அங்கே பேசும்.

இப்படி நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).