ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2023

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எல்லாவற்றிலும் முகப்பில் வைத்துக் கொள்ளுங்கள்

சூரியனிலிருந்து வரக்கூடியது “எலக்ட்ரிக்…” அதைக் கடந்து வரப்படும் போது காந்தம் இழுத்து விட்டது என்றால் “நியூட்ரான்…” அது ஓடும் வேகத்தில் இரண்டற இணைந்து அந்த உணர்வின் தன்மையாக மாறும் போது “புரோட்டான்…” சத்தாகின்றது. விஞ்ஞானிகள் வைத்த பெயர்கள்.

மெய் ஞானிகள் சொன்னது…
1.சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகிறது
2.ஒரு செடியின் சத்தைக் கவர்ந்தால் எலெக்ட்ரானிக்
3.அதை நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் நம்மை இயக்குகின்றது.
4.நம் உயிர் எலக்ட்ரிக்…
5.அதிலிருந்து அது உருவாக்கும் உணர்வலைகளைப் பாய்ச்சப்படும் போது சூரியன் எலக்ட்ரானிக்காக அதை மாற்றுகின்றது.
6.அதை இன்னொருவர் நுகர்ந்தால் அதே எலெக்ட்ரானிக்காக இயக்குகிறது.

நமக்குள் இது எப்படி இயக்குகிறதோ அதே மாதிரித்தான் விஞ்ஞான இயக்கங்களும் - எலக்ட்ரானிக் என்பது…!

மனிதனுடைய உணர்வுகளை வைத்துத் தான் விஷத்தன்மை கொண்ட நாடாக்களில் அதைப் பதிவு செய்கின்றார்கள் இந்த உணர்வின் அழுத்தங்கள் வரப்படும் பொழுது இதனுடன் கலந்து அறிவாக அதனுடன் சேர்க்கப்படுகின்றது.

ஆனால் மனிதனுக்கு நோயாகி விட்டால் கம்ப்யூட்டரில் எந்த நாடாவில் இது பதிவானதோ அடுத்தவனுக்கு அந்த நோய் வரும். குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்கள் நாடாவில் இது பதிவாகி அடுத்து அவன் குடும்பத்திலும் இந்தச் சண்டை வரும்.

கம்ப்யூட்டரில் வேலை செய்கின்றார்கள் அல்லவா…
1.தவறான பாதையில் போவது தவறான வழிகளில் திருட்டுத்தனமாக செயல்படுவது
2.இதெல்லாம் இதற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வுகள் எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது இதே உணர்வு எடுத்து அந்த நாடாக்களில் பதிவாகி விடுகின்றது.
1.புதிய நோய்கள் வருவதற்கும்… சில வைரஸ் என்று சொல்வார்கள்
2.இதெல்லாம் மாறுவதற்கும் இது காரணமாகின்றது

கம்ப்யூட்டரில் என்ன செய்கின்றார்கள் முகப்பில் வைத்து விண்வெளியில் கோள்களுக்கு அனுப்புகின்றார்கள். அந்த உணர்வை எடுத்து இங்கிருக்கும் சாதனங்களில் பொருத்துகின்றார்கள்.

அங்கே சென்றவுடன் இதே (கம்ப்யூட்டர்) சாதனத்தை வைத்து முகப்பில் இணைத்து விடுகின்றார்கள். எதைப் பதிவாக்கினார்களோ அந்த முகப்பின் பிரகாரம் அந்த இலக்கை அடைகின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் (மனிதன் நினைப்பது போல்) என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் குறிப்பிட்ட எல்லையை விமானத்திலிருந்து ஈராக்கெட் மூலமாக அனுப்பப்படும் பொழுது கம்ப்யூட்டரில் பதிவு செய்த எல்லையை ஆது அடைகிறது.

அதே போன்றுதான்
1.இப்பொழுது நல்ல குணத்துடன் நாம் இருக்கின்றோம்
2.அந்த இடத்திலே தீய குணம் கொண்ட ஒருவரின் உணர்வுகள் பதிவாகி விட்டால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது
3.அவர் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… இங்கே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றால் அங்கே அழைத்துச் செல்கின்றது

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அதே சமயத்தில் நாம் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வுகளை நம்முடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலும் முகப்பில் இணைத்து விட்டால் இந்த உடலை விட்டு நாம் சென்றால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.

கணவனும் மனைவியும் இது போன்று ஒன்று சேர்ந்து உருவாக்கி விட்டால் இங்கே சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறுகின்றோம்…!

இதை எல்லாம் விஞ்ஞான அறிவு பிரகாரம் உங்களுக்குச் சொல்கிறோம். ஏனென்றால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டிய நிலைகள்…!

விஞ்ஞானிகள் எப்படி செயல்படுத்துகின்றார்கள்…? ஒவ்வொன்றையும் எவ்வாறு அவன் கண்டுபிடிக்கின்றான்…? எதை எதைச் செய்கிறான்…? எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… அது எவ்வாறெல்லாம் உருவாகின்றது என்று…!

1.நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்… ஆனால் ஆங்கில அறிவு எனக்கு இருந்திருந்தால் "தூள் கிளப்பி இருக்கலாம்..."
2.குருநாதர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்
3.அவர் எல்லா பாஷைகளிலும் பேசுவார் ஆனால் அது உனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

பாஷைகள் கற்றவர்கள் எத்தனையோ உண்டு. பற்று கொண்டு வரும் போது அவர்களுக்கு இதை நீ கொண்டு போகலாம். நேரத்தை வீணாக்காதே… நான் சொல்வதைச் செய்…! என்று சொல்லிவிட்டார்.

அதனால்
1,அவர் சொன்ன முறைப்படி உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… முகப்பிலே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.
2.அதன்படி பெருக்கும் போது உங்களுக்குள் வளர்ச்சியாகும்.
3.இதில் ஒன்றும் பெரிய வித்தை இல்லை..!