ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2023

நினைத்ததும் சக்தி பெற முடியாது.. வாக்காகச் சொல்லித் தான் கொடுக்கின்றோம்... “சும்மா இல்லை…!”

மெய் ஞானிகள் உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதை நுகர்வதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகச் சொல்லி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.சும்மா இல்லை…
2.நீங்கள் நினைத்த உடனே… யாரும் சொன்னவுடனே…
3.இப்படி எடுங்கள்…! என்றால் எடுக்க முடியாது…!

நீங்கள் அதைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி இந்த நினைவுக்குள் உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு),

1.திட்டியவனை எண்ணிய உடனே எப்படி ஜிர்..ர்ர்ர்… என்று வேகம் வருகின்றதோ
2.திட்டியவனைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப்படும் போது… துரோகம் செய்தான் பாவி…! டட்டட்…டட்ட… என்று கோபம் வருகின்றது…”
3.பல்லை எல்லாம் நற…நற… தன்னை அறியாமலே கடிக்க வைக்கும்.
4.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற நிலை வரும்.

அதைப் போன்று தான்
1.உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அந்த நேரத்தில்
2.ஈஸ்வரா…….! என்று “வேகமாக எண்ணுங்கள்…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… என் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அடுத்து எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்..

துன்பத்தைப் போக்கச் செய்து உங்கள் காரியத்தை நல்லதாக ஆக்கிவிடும்.

சில உடல்களிலே ஆவிகள் இருக்கும்... என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் சதா திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் நமக்கு வேதனை அதிகமாகும்.

அதைக் கேட்கக் கேட்க நமக்குக் கை கால் குடைச்சல் வந்துவிடும்
1.பேசுபவர்களுக்குக் கொஞ்சம் குடைச்சலாகும்…
2.ஆனால் அதைக் கேட்பவர்களுக்கு அதிகமான கைகால் குடைச்சல் வரும்.

சண்டை போடுபவர்களை… திட்டுபவர்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அடுத்த நாள் பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்பார்கள்.

முதுகுத் தண்டில் மூன்றாவது எலும்பு… இடுப்பில் இருக்கும் மூன்றாவது எலும்பு… கழுத்தில் இருக்கும் எட்டாவது எலும்பு… தன்னாலே அங்கே வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

டாக்டரிடம் சென்றால் “எலும்பு தேய்மானம்” ஆகிவிட்டது என்பார்கள் அல்லது இடுப்புக்குப் பெல்ட் போட வேண்டும் என்று சொல்வார்கள். இது தான் நடக்கும்.

அடிக்கடி கவலை… வீட்டிலே சண்டை போடுவது போன்ற எரிச்சலான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இது இரண்டும் ஒன்றாகக் குவியும்
2.விரிந்து கொடுக்கும் நிலை வரப்படும் பொழுது அந்த இரண்டு எலும்புகளுக்குள் நீர் புகுந்து விடும்
3.புகுந்த பின் தாங்க முடியாதபடி வலிக்க ஆரம்பிக்கும்
4.நரம்பு செயலற்றதாகி வேதனையாகி (நரம்பு) பிடித்துக் கொள்ளும்.

மூன்றாவது எலும்பு விரிந்து கொண்டே இருக்கும்… எக்ஸ்ரேயில் பார்த்து உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். இப்படி எல்லாம் வரும்.

இது போன்ற நிலையில் இருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்வதற்கு ஆத்ம சுத்தியை அவசியம் செய்து கொள்ளுங்கள். இருளை நீக்கி மெய் ஒளியின் தன்மையை பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.