ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2022

கார்த்திகை நட்சத்திரம்

எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்கு உரைத்து வந்ததில்…
1.மனத்தின் பக்குவம் உலகோதய வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணத் தன்மைகள் அலை அலையாக வந்திட்டாலும்
2.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று… சேருமிடம் சேர்வதைப் போல்
3.நம் நிலையிலும் உணர்வுகளைச் சமன்படுத்திட வேண்டும் என்ற எண்ணம் உந்துதலாக
4.அதன் வழி முறைகளைச் சிந்தையில் இருத்திச் சித்தன் நிலை பெற வேண்டும்.

பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல.

மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது. சரீரத்தில் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர்மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும் மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.

1.நோய் உடலிலா…? எண்ணத்திலா…?
2.சுவாச நிலைகளின் இயல்புத் தன்மையை மாற்றினாலே எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்.
3.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.

கார்த்திகை தீபம் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்திட்டதா…? இன்றைய நடை முறைக்கு அது பெரும் சடங்காகிவிட்டது.

அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் அளித்திடும் செயலுக்கே மறைபொருள் காட்டி ஜோதியின் உட் பொருள் காட்டி ஜோதியின் பொருள் உணர்த்த கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் தீபமேற்றி வணங்கிடும் முறை காட்டப்பட்டது.

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே ஜோதி தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து மனத்தை ஒருமுகப்படுத்திவிட்டு தியானிக்கச் செய்த வழி கார்த்திகை மார்கழி மாதங்களில் சிந்தனையில் செயல் ஒருமுகபடுத்தப்பட்ட தை மாத பௌர்ணமியில் பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகள் பெற்றிடவே ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்தப்பட்டது.

அந்த வழி முறைகள் எல்லாம் இன்றைக்கு மாற்று நிலை பெற்றுவிட்டது.