ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2022

(திரு)வில்லிப்புத்தூரார் உருவாக்கிய “ஆண்டாள் திருஸ்தலம்”

“நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… வேத மந்திர சொரூபாய நமோ… நமோ… வெகு கோடி…!”
1.நாம் எதனின் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்ச்சியின் உருவமாக
2.பல கோடிச் சரீரங்களைப் பெற்று வந்தோம் என்ற நிலைகளை அருணகிரிநாதர் இப்படிப் பாடுகின்றார்.

ரிக் வேதத்தில் கூறியது போல வான் வீதியிலிருந்து வரும் ஆற்றல்கள் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… ரு…ரு…ரூ…ரூ… ரீ…ரீ…ரீ…ரீ… என்று இந்த உணர்வின் தன்மையைப் பாடலாகப் பாடுகின்றான்.

காரணம் 27 நட்சத்திரங்கள் அது வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் சூரியன் ஈர்க்கும் பாதைக்குள் வரப்படும் பொழுது ஒன்றோடு ஒன்று மோதிய பின்
1.அதனுடைய சப்தங்கள் பலவாறு எப்படி மாறுகின்றது…?
2.அதற்கொப்ப உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற உண்மைகளை இந்தப் பாடலின் மூலம் உணர்த்துகின்றார்.

ஆனால் பதஞ்சலி முனிவராக இருக்கும் நிலையில் உடலின் நிலைகளுக்கு ஆசைப்பட்டான். அந்த உடலிலிருந்து அதை மறுத்து உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது திருமூலராகின்றான்.

தவறின் வழிகளில் சென்ற அருணகிரிநாதரைத் தெளிவான நிலைகள் கொண்டு வருவதற்காக அந்த்த் திருமூலர் கண்ட உண்மையின் உணர்வுகளை அருணகிரியின் சகோதரி படித்தது.

ஆனால் அருணகிரிநாதரைத் திருத்த முடியாத நிலையில் உடலை விட்டுப் பிரியும் சகோதரியின் ஆன்மா
1.அருணகிரியின் உடலில் புகுந்து அந்த உடலை இயக்கி
2.திருமூலர் கண்ட உண்மைகளைப் பாடலாக வெளிப்படுத்தச் செய்கின்றது
3.அருணகிரிநாதரைத் திருந்தி வாழச் செய்கின்றது.

வில்லிபாரதம் என்று சொல்லுகின்றோமே… அதை எழுதிய வில்லிபுத்தூரார் அருணகிரி வாழ்ந்த காலத்தில் இருந்தவர் தான்.

புலமை பெற்றவர்கள்… கவிநயங்கள் கொண்டு பாடும் பாடல்களுக்குச் சரியான விளக்கம் சொல்லவில்லை என்றால் அவமதிக்கும் நிலையில் துரட்டியைப் போட்டுக் காதை இழுத்து ஊனமாக்கி விடுவார்கள். அக்கால வழக்கம் இது.

அருணகிரிநாதர் அங்கே செல்லும் பொழுது ஆறாவது அறிவின் தன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். வான்வீதியிலிருந்து வரும் உணர்வின் தன்மைகளைப் பெறும் போது அதன் வழியில் ஆறாவது அறிவு எப்படித் தெரிந்து கொண்டது…? தெளிந்து கொண்டது…? என்று அதை எடுத்துச் சொல்கின்றான்.

அப்போது அருணகிரிநாதர் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… என்ற பாடலைப் பாடப்படும் பொழுது “இதற்குண்டான விளக்கங்கள் சொல்ல வேண்டும்…!” என்று சொன்னவுடனே வில்லிப்புத்தூரால் அதைச் சொல்ல முடியவில்லை.

1.ரா..ரா.. ரீ..ரீ… என்ற உணர்வின் ஒலி அதிர்வுகளையும்
2.உணர்வுகள் மாற்றத்தையும் உணர்வுக்கொப்ப உடல்களின் அமைப்பும்
3.கோள்களின் அமைப்பும் பிரபஞ்சத்தின் மாற்றமும் என்ற நிலைகளில்
4.உயிர் என்ற இந்தப் பிரபஞ்சத்தில் உணர்வின் இயக்கமாக உடல்கள் எப்படி மாறுகின்றது…? என்ற தத்துவத்தைத் தான் அவன் பாடுகின்றான்.

இந்த விடைகளை அங்கே கேட்கப்படும் பொழுது வில்லிபுத்தூரர் சொல்ல முடியவில்லை. ஆனால் அவன் பாடிய பாடல்களுக்கு அருணகிரி விடை கொடுக்கின்றான் ஆனால் இவன் பாடிய பாடலுக்கு அவனுக்கு விடை கொடுக்க முடியவில்லை,

மகாபாரதப் போர் என்ற நிலையில் வரப்படும் பொழுது வில்லி பாரதத்தை எழுதிய வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரிடம் இந்த விளக்கங்களைக் கேட்ட பின் “ஆண்டாள்…” என்ற நிலையிலே அந்த உணர்வின் தன்மையைப் பதியச் செய்கின்றான்.

ஏனென்றால்…
1.எதனின் உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ அந்த உணர்ச்சிகள் தான் தன்னை ஆளுகின்றது (ஆண்டாள்).
2.நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே படும் பொழுது தான் அரங்கநாதன் என்றும்
3.உணர்வின் தன்மை தனக்குள் ஆளுகிறது என்றும் ஆண்டாள் என்று திருஸ்தலத்தை அவன் அமைக்கின்றான்.

அதன் வழி வில்லி பாரதத்தை எழுதி வில்லிப்புத்தூரார் (திருவில்லிப்புத்தூர்) திருந்தி வாழ்ந்தான்.

1.ஆகவே உடலை விட்டுப் பிரிந்த ஒவ்வொரு உயிரும் எந்த நிலையில்… எப்படிச் செயல்படுகின்றது..? என்பதை உணர்ந்து
2.இந்த மனித வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.