ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2022

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் “மின் கதிர்களுக்குண்டான ஆற்றல்”

உதாரணமாக இடி மின்னல் தாக்குகிறது என்றால் மரங்களில் பட்டால் கருகிவிடும்.
1.மாட்டுச் சாணங்கள் குவியலிலே இந்த மின்னல்கள் பாய்ந்தால் இந்த உணர்வின் தன்மை அதிலே பல விதமான நிலைகள் வரும்.
2.காட்டில் வாழும் மிருகங்கள் அதன் உணர்வின் தன்மை பெற்றால் வீரியத்தன்மை அடக்கி ஒளிப்பிளம்பாகக் கிடப்பதைக் காணலாம்.
3.இது அதிசயப் பொருளாகவும் இருக்கும்.

ஒரு மிருகத்தின் உணர்வுகளிலே இது படப்படும் பொழுது அது அவ்வாறு மாற்றுகின்றது. மிருகத்தின் உணர்வை அடக்கும் உணர்வுகள் இங்கே வரப்படும் போது மின் கதிர்களையும் அடக்கும் உணர்வுகளாகப் பரவி அதைச் சுவாசிக்கும் தன்மையும் வருகின்றது.

அது போல் தாய் கருவிலே விஷத்தின் தன்மை இருந்ததால் அதை அடக்கி அந்த உணர்வின் (மின்னல்கள்) உணர்ச்சியை மாற்றும் தன்மை வருகிறது. 10 மாதங்கள் தாய் கருவிலே அகஸ்தியன் “இந்தச் சக்தியை...” பெற்றுத் தான் பிறக்கின்றான்.

அவன் பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்துக் கிடக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து
1.சூரியனால் விரிவடையும் நிலையும்
2.பல மின்னல்கள் தாக்குவதை உற்றுப் பார்ப்பதும்
3.அதன் உணர்வுகள் இவனுக்குள் அடங்கும் நிலையும் வருகிறது.

“நட்சத்திரங்களின் இயக்கத்தால் உயிர் எப்படி ஒளியானதோ” அதைப்போல (அந்த ஒளியான உணர்வின் தன்மை) உயிரைப் போலவே உணர்வின் வலுவைச் சேர்க்கின்றான்.

பல பேர் பல உயிர் என்ற நிலை இருந்தாலும்
1.“ஒரே எண்ணங்கள் கொண்டு” நாம் செயல்படுவோம் என்றால்
2.அதனுடைய வலிமையின் தன்மையே வேறு.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நிலை பெற்றது தான்.
1.உயிரின் தன்மை கொண்டு நாம் அனைவரும் சேர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம் என்றால் அது மிகவும் வலுக் கூடியதாகின்றது.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துவதற்குத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக உங்களை இணைக்கின்றோம் (ஞானகுரு).

உதாரணமாக... ஒரு செடிக்கு உரம் இடும் பொழுது உரத்தின் தன்மை கொண்டு அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எந்தெந்த நிலை இருந்ததோ “காற்றிலிருந்து தான் அதனின் உணர்வின் சத்தை... அந்தச் செடி எடுத்து வளர்த்துக் கொள்கிறது...”

செடிக்கு உரமிடுவது போல் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் ஒரு தடவை ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்தச் சக்தியைக் காற்றிலிருந்து நீங்கள் எளிதில் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற உண்மையின் உணர்வுகளை அவனிட்ட மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு இந்த பரமாத்மாவில் தான் காற்றிலே கலந்துள்ளது...!

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து... 27 நட்சத்திரங்களின் மின் கதிரின் இயக்கங்களை இருவருமே சேர்த்து... உயிரைப் போன்று உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்...! துருவ நட்சத்திரம் அப்படி உருவானது தான்.

அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன உணர்ச்சிகளை இப்பொழுது ஊட்டப்படும் பொழுது அவன் உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகர முடியும்.

அதைச் சுவாசிக்கச் செய்து துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்களை உங்கள் இரத்த நாளங்களில் பெறச் செய்கின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தைப் போன்று பேரருள் பேரொளியாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் ஆக வேண்டும்.