ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2022

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்...?

மனிதன் ஆன பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் அதுதான் கடைசி நிலை. அதை விடுத்து விட்டு... “சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன் தொழில் நனறாக நடக்க வேண்டும்...” என்று எண்ணினால் தொழில் எல்லாம் உங்களிடம் தான் இருக்கின்றது.

காரணம் அதற்குண்டான மன வலு பெற வேண்டும். மன வலிமை பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும்.
1.சாமியை நம்பி வந்தேன்... தியானம் செய்தேன்...
2.“எனக்கு அது கிடைக்கவில்லை... இது கிடைக்கவில்லை...” என்று சொன்னால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று தான் பொருள்.

கடலிலே ஒரு படகிலே செல்கிறோம் என்றால் அது கடந்து செல்லப்படும் பொழுது அலைகள் வந்து மோதும். அப்பொழுது அந்த அலைகள் இருந்து தப்பி நாம் அடைய வேண்டிய எல்லையை அடைய... துடுப்பை வைத்து மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று தான் மனிதன் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை சங்கட இலை என்று இந்தப் பூமியில் எத்தனையோ அலைகள் நம் மீது மோதுகின்றது.

அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும் அல்லவா...!

ஆகவே நமது எல்லை எது...? அந்தத் துருவ நட்சத்திரம்தான் என்ற உறுதி கொண்டு அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நாளும் எதை எண்ண வேண்டும்...? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லோருக்கும் யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். இருந்தாலும்..
1.சாமி சொன்னார்...! நான் தியானம்தான் செய்கின்றேன் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வருகின்றது...?
2.தியானத்தைச் “செய்து கொண்டே இருக்கின்றேன் அல்லவா...” எனக்கு ஏன் நோய் வருகின்றது...” என்றால்
3.துடுப்பைக் கையிலே கொடுத்த பின் கடலிலே எல்லையை நோக்கிப் போகாதபடி “இப்படி அலைகள் வந்து கொண்டே இருக்கிறது...!” என்றால்
4.அலைகளில் மோதி எந்த உணர்வின் தன்மையோ அதில் தான் மூழ்க நேரும்.

அன்றாட மனித வாழ்க்கையில் எத்தனையோ அலைகள் மோதிக் கொண்டே தான் இருக்கின்றது. நமது எல்லை பிறவி இல்லா நிலை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தினால் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வின் வலுவும் நமக்குள் வரும்.

குருநாதர் என்னைப் பல இன்னல்களைப் படச் செய்தார்.
1.எது உன்னை என்ன செய்கின்றது...?
2.எதன் உணர்வு உனக்குள் என்ன செய்கின்றது...? என்பதை உணர்த்தினார்.

இந்தப் பச்சிலை பேசுமாடா...? என்று குருநாதர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.

அவர் சொன்னபடி நுகர்ந்த பின் கசப்பு என்றால் ஐய்யய்ய...! என்றும் காரமாக இருந்தால் ஸ்ஸ்... ஆ... என்பேன். அப்பொழுது எது பேசுகின்றது என்று கேட்பார்.
1.நீ பேசவில்லை...
2.உன் உயிரின் உணர்வுக்குள் அந்த உணர்வின் சத்து
3.அதில் பட்ட சுவையின் உணர்ச்சிகள் தான் உன்னை இயக்குகின்றது
4.எதன் சுவையின் உணர்வை நுகர்கின்றாயோ அந்த உணர்வின் வழியே உன்னை இயக்குகின்றது
5.அது நீ அல்ல...!
6.நுகரும் உணர்வே இயக்கமாகின்றது... அதன் உணர்வே உடலாக மாறுகின்றது...
7.அதன் வழி (தன்னை) அதை வளர்க்க அது உடலுக்குள் உருவாகின்றது.

ஆகவே தீமைகளை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்...?

தீமை என்ற நிலையோ... அதீத ஆசை என்ற நிலையோ... இருளான நிலைகள் வரப்படும் பொழுது அதை எல்லாம் அப்பொழுதே தவிர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும்...? என்று நம் உள்ளே வரும் உணர்வுகளுக்குத் தக்கச் சரியான உபாயத்தை அது காட்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து ஆயுள்கால மெம்பராகி அமைதிப்படுத்தி ஞானத்தின் நிலைகள் சிந்தித்து செயல்படும் நிலைகளும் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்றா உண்மையின் உணர்வை அறிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்

அடிக்கடி இதைச் செய்தோம் என்றால் தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போன்று நமக்குள் வரும் கலக்கமோ வேகமா ஆசையோ அனைத்தையும் அது மாற்றி அமைக்கும்.

ஏனென்றால்
1.ஆசையினால் வருவது தான் அனைத்துமே
2.ஆசையின் உணர்வுகள் தடைபட்டால் வேதனை.
3.வேதனை என்று வரும் பொழுது சிந்தனை குறைந்தால் கோபம்
4.கோபம் என்று வந்துவிட்டால் அடித்து நொறுக்கும் உணர்வாக வெறி கொண்டு தாக்கும் உணர்வு வரும்.
5.இது என்ன...? என்று உதறித் தள்ளும் உணர்வைத் தான் நமக்குள் உருவாக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வேதனை என்று வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து தன் உணர்வின் இயக்கத்தையே மாற்றி விடுகின்றது.

இதை போல் உலகெங்கிலும் தீவிரவாதங்கள் நுழைந்து ரேடியோ டிவி என்ற நிலையில் விஷத்தன்மை பரவி இருப்பதால் அதையெல்லாம் நாமும் பதிவாக்கி இருப்பதினால் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அந்தத் தீமையின் நிலைகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றேன்
2.எப்பொழுதெல்லாம் உணர்ச்சிகள் மாறுகின்றதோ... உணர்வுகள் மாறுகின்றதோ... செயல்கள் மாறுகின்றதோ... அது நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.

அந்த மாற்றத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இதன் வழி செய்தால் நமக்குள் ஏற்பட்ட கலக்க உணர்வுகளை மாற்றும்
2.நாளை எப்படி அதை வழி நடத்த வேண்டும்...? என்ற நல்ல சிந்தனை வரும்.