ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2021

ஹைட்ரஜனிலிருந்து வரும் கன நீரும்… மகரிஷிகளின் ஆற்றல்களும்

 

விநாயகர் தத்துவத்தை ஞானிகள் மக்களுக்குக் காட்டியிருந்தாலும் அவர்களை நாம் “முன்னே பின்னே பார்த்ததில்லை…”

1.அந்த மெய் ஞானி நல்லதைச் செய்து “தன்னையறிந்தான்…” என்ற நினைவை ஊட்டி
2.சிறுகச் சிறுக அவர்கள் பெற்ற சக்தியை நமக்குள் வலுவை ஏற்றுவதற்கு
3.காலையில் எழுந்தவுடன் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
4.வானை நோக்கி எண்ணி ஒவ்வொருவரும் எடுப்பதற்காக விநாயகரை வைத்தார்கள்.

அப்போது… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய் ஒளியைப் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ண வேண்டும்.

எந்த மகா ஞானி உண்மையை அறிந்தானோ…
1.விண்ணிலே ஒளியின் சுடராக இருக்கும் அவனை நினைவு கொள்ளும் பொழுது
2.சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளைக் கவர்ந்து கொண்டு வரும் அவனின் உணர்வை நாம் சுவாசித்து
3.நமக்குள் அந்த உணர்வின் வலுவை ஏற்ற வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுகுண்டுகள் செய்து அதை ஹைட்ரஜனைக் (கன நீர் – DUTERIUM) கொண்டு அடக்கி வைக்கின்றனர்.

நீருக்குள் இருக்கக்கூடிய சக்தியை… அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கும் சக்தியை அணுவின் தன்மை பிளந்தாலும்
1.மற்றதுக்குத் தீமைகளை விளைவிக்காத ஹைட்ரஜன் என்ற கன நீரை
2.அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி வெடிக்க விடாது அதனுடைய ஆற்றலைக் கலந்து கொள்வது.
3.ஏனென்றால் கன நீரின் அழுத்தத்தின் தன்மையால் வெடிக்கும் நிலையைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

உப்பைப் போட்டால் எப்படி ஊறுகின்றதோ அதைப் போல் ஹைட்ரஜன் கதிரியக்கத்திற்குள் இருக்கும் “பசப்பை நீக்கி” தன் உணர்வின் தன்மை கொண்டு அதை அடக்கிவிடும்.

விஞ்ஞானி அணுப் பிளப்பை இவ்வாறு கட்டுப்படுத்துவது போல் மெய் ஞானி என்பவன் விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் (கதிரியக்கச் சக்திகளை) அடக்கிடும் கன நீராக… ஹைட்ரஜன் ஆனான்.

அந்த மெய் ஞானியின் உணர்வின் ஆற்றலை நாம் விண்ணிலிருந்து எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விநாயகர் தத்துவம்.

இன்றைய வாழ்க்கையில் நல்லதை எண்ணுகின்றோம்… பிறர்பால் இரக்கமும் படுகிறோம். ஆனால் அவர்கள் உடலில் விளைந்த துன்பமும் துயரமும் குறைகளும் நமக்குள் வந்து அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் மாறித் தீய வினைகளாக விளைந்து விடுகிறது.

அதை நீக்க வேண்டுமல்லவா...!

ஆகவே விநாயகரைப் பார்த்ததும் நாம் விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்த வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று காவியங்கள் உண்டு. அதாவது நாம் சுவாசித்தது ஒவ்வொன்றுமே உடலுக்குள் கருவாகி அணுவாக விளைகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுகக் கூட்டிப் பின்
2.மொத்தமாக உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவைக் கூட்டி
3.உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் அணுக்களுக்குள் எல்லாம்
4.கண்ணின் நினைவு கொண்டு அந்த ஞானியின் நினைவலைகளை இங்கே உபதேசிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியின் வீரியத் தன்மை கொண்டு அது நமக்குள் ஓங்கி வளரும். தீமையிலிருந்து “நம்மைக் காக்கும் சக்தியாக வளரும்…”