ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 24, 2021

உயிராத்மாவைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டிய முறை - ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில்...
1.தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் எப்படி வளருகின்றது…?
2.வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?

பூமீயின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.

அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!

அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.

பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால் இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
4.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!

எப்படி…?

உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெப நிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.

அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.

பாம்பு... தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.

சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!

இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!