ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2021

அகஸ்தியன் பெற்ற மகா சக்திகள்

 

ஆதியிலே அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் அருகிலே கொசுவோ தேளோ பூரானோ யானையோ புலியோ நரியோ நாயோ எதுவும் வருவதில்லை.

1.காரணம் அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணம்
2.அந்த மிருகங்களுக்கு எதிர்நிலையாகிறது... அஞ்சி ஓடுகிறது.

தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள் அகஸ்தியன் உடலிலே வினையாகிறது. அந்த மணமே வினைக்கு நாயகனாகி அவன் உடலிலிருந்து வெளிப்படுகிறது.

அந்த மணத்தை மற்ற மிருகங்கள் நுகரப்படும் பொழுது அவைகளின் விஷங்கள் ஒடுங்கி விடுகின்றது. அவைகளின் கவனத்தையும் திசை திருப்பி விடுகின்றது. ஆகையினால் மற்ற உயிரினங்கள் அகஸ்தியன் இருக்கும் பக்கம் வருவதில்லை.

1.ஆனால் இந்தக் குழந்தை அவன் ஒன்றும் மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை.
2.தாய் கருவில் தான் அதைப் பெற்றது.
3.ஏனென்றால் விஷத்தன்மை கொண்ட அந்தத் தாவர இனத்தின் மணங்களை
4.கருவிலிருக்கக்கூடிய குழந்தை கவர்ந்ததால் அதே மணத்தை நுகரும் அணுத்தன்மை இந்தக் குழந்தையின் உடலில் உருவாகி
5.அதனுடைய மணம் சிவமாகின்றது... அதுவே வினையாகிறது.
6.வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கிடும் சக்தி பெருகுகிறது அந்தக் குழந்தையிடம்.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்...!

சந்தர்ப்பம்... அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கும் போது அத்தகைய உண்மைகளை உணர்ந்ததனால்... பிறந்த பின்
1.மற்ற விஷத்தன்மை கொண்ட பச்சிலைகளைத் தேடிச் சென்று
2.அவனுடன் அன்று பழகிய மற்றவர்களுக்கும் இதைக் கொடுத்து
3.விஷத்தன்மையிலிருந்து இருந்து மீட்கும் மார்க்கத்தை அவர்களுக்கும் காட்டி வந்துள்ளான்.

அப்படிப்பட்ட அந்த உண்மையான நிலை பெற்றவன் தான் அகஸ்தியன்.

அவன் காடுகளுக்குள் செல்லப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வரக்கூடிய மணங்கள மற்ற உயிரினங்களோ விஷ ஜெந்துக்களோ நுகரும் போது அதனின் விஷத்தை வலுவிழக்கச் செய்துவிடுகிறது. அதனால் அவைகள் இவன் அருகில் வருவதில்லை.

அதே சமயத்தில் மனிதர்களுக்கு வரும் நோய்களையும் மாற்றும் திறன் பெற்றான் அகஸ்தியன்.
1.நோய்கள் எதுவாக இருப்பினும் பல பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு
2.மற்றவர்களின் உடல்களை நலமாக்கும் திறன் பெற்றான்.

இப்படி அவனுடைய அனுபவங்கள் பெற பெற அவன் சந்தர்ப்பத்தால் தாவர இனங்கள் எப்படி உருவானது...? சூரியன் எப்படி உருவானது...? பிரபஞ்சம் எப்படி உருவானது...? என்ற நிலையை அவனால் அறிய முடிகின்றது.

அவனுக்குள் விளைந்த உண்மையின் உணர்வுகளை உலகெங்கிலும் இருப்பினும் அகஸ்தியன் கூறிய அந்த உணர்வுகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது.

மனிதனுக்குத் தேவைப்படும் நிலைகளுக்கு அந்தச் சட்டங்களை மாற்றி அமைத்து விட்டனர்.
1.மனிதன் திருந்தி வாழ்வதற்கு மாறாக தீவினைகளைச் செய்து
2.அதிகமாகத் தீய செயல்கள் கொண்டவராகத் தான் நாம் மாறிக் கொண்டுள்ளோம்.

இது போன்ற நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டும்.