ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 2, 2021

ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைத்தாலும் “உயர் நிலைக்குச் செல்ல முடியாது” - ஈஸ்வரபட்டர்

 

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.