ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2017

சிவ தத்துவம் - 3

நீலகண்டன்
பாற்கடலிலே நமது பூமி சுழலும் பொழுது விண்ணிலிருக்கக்கூடிய ஆற்ரல்மிக்க சக்தியை பாறைகளாகவும், கற்களாகவும், இதற்குள் விளையச் செய்து அதன் பின் மரம், செடி, கொடிகளாக விளையச் செய்கின்றது.

அந்தத் தாவர இனச் சத்த்துகள் அது வெளிப்படுத்தும் ஆவியின் தன்மையை விண்ணிலே தோன்றும் ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்து சுவாசிக்கும் பொழுது அந்தச் சத்து அணுத்திசுக்களாகி புழுவாகத் தோன்றுகின்றது.

அவரவர்கள் விழுங்கிய நிலைகள் கொண்டு உடல்கள் உருப்பெற்றார்கள்.

சிவன் விழுங்கிய நிலைகள் கொண்டு சிவனின் கழுத்திலே விஷம் தேங்கிக் கொண்டது எல்லோருடைய நன்மை கருதி அவன் வைத்துக் கொண்டான்.

“நீலகண்டன் என்று காட்டுகின்றார்கள்.

பின் மாட்டுத்தலை, பன்றித் தலை, குதிரைத்தலை, யானைத்தலை என்று இப்படி பல தலைகளை அதாவது மிருகங்களுடைய சிரசுகளைப் போட்டு, அதற்குப் பின் மனிதனுடைய உடல்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

விண்ணின் ஆற்றல் நம் பூமிக்குள் வந்து கல்லாகி மண்ணாகி தாவர இனங்களாகி உயிரினங்களாகி எவ்வாறு உடல்கள் பெற்றது?

உயிரினங்களாகி மனிதன் வரை எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்ற இந்தப் பேருண்மையை நமக்கு உணர்த்துவதற்குத்தான் அன்று மெய்ஞானிகள் அவர்கள் கண்ட விண்ணின் ஆற்றல்களை அது எவ்வாறு பெறுகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தினார்கள்.

நமது பூமியோ விண்ணிலே சுற்றிக் கொண்டிருக்கும் பொழுதே வட துருவப் பகுதியிலே அது ஈர்க்கும் ஆற்றல் கொண்டு அது உறையும் பனியாக அது தேங்கி நிற்பதைத்தான்.., “சிவன் தன் கழுத்திலே விஷத்தைத் தேக்கிக் கொண்டான்என்று காட்டியுள்ளார்கள்.

சிவன் எல்லோருடைய நன்மை கருதி இவ்வாறு செய்தான் என்று முதன் முதலிலே தலை பாகம் இருப்பவன் சிவன் என்றார்கள்.

நமது பூமி சக்தியாக ஆவியாகத் திரண்டு அது பல நிலைகள் கொண்டு உருப்பெற்று ஒரு திடப்பொருளாக ஆகும் பொழுது சிவம்.

அந்தச் சிவமான நிலைகள் கொண்டு பூமி விண்ணிலே தோன்றிய அந்த அணுக்களின் சக்தியை தனக்குள் பனிப் பாறைகளாக உறையச் செய்து இது சுழலும் சக்தியாலே தனக்குள் எடுத்துக் கொண்ட வெப்பத்தாலே ஆவியாகவும், நீராகவும், மற்ற நிலைகள் மாற்றி இந்தப் பூமியை வளரச் செய்கின்றது.

அதுதான் சிவம் எல்லோருடைய் நன்மையைக் கருதி விஷத்தைத் தன்னுள் கழுத்திலே அடக்கிக் கொண்டான் என்று காவியத்தைப் பிரித்துக் காட்டினார்கள்.

இதே போன்று அத்தகைய அணுக்களின் தன்மை பூமியிலே படர்ந்து, மற்ற புழுவிலிருந்து உயிரினங்களகத் தோன்றி நாம் மனிதானகத் தோன்றினோம் என்பதற்காக, ஒவ்வொரு உயிரினங்களின் தன்மையை, அது அது விழுங்கிய நிலைகள் கொண்டு உடல்கள் பெற்றது என்று எழுதினார்கள்.

அதிலே தலை பாகம் இருப்போர் அனைவருமே தேவர்கள் என்றும் வால் பாகம் கடைந்தவர்கள் அனைவருமே அசுரர்கள் என்றார்கள்.

இப்பொழுது உணவு உட்கொண்டால் என்ன நடக்கின்றது? முதலில் நம் உடலிலே சத்தாக வளரச் செய்கின்றது. நாம் சாப்பிட்ட ஆகாரங்கள் கழிவாகும் பொழுது என்ன்வாகின்றது? நச்சுத்தன்மை விஷமாக மாறுகின்றது.

இதே போன்றுதான் பாற்கடலிலே கடையும் பொழுது, அது தெளிந்த நிலைகள் கொண்டு சத்தான நிலைகள் விளைகின்றது. அதனின் கழிவின் மலம் விஷத்தன்மையாக படர்கின்றது என்ற நிலைகள் காட்டினார்கள்.