ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2015

பரம்பரை நோய் வராது தடுத்துக் கொள்ளுங்கள்...!

நம் குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் அவர்களை எண்ணி ஏங்கி இழுத்துவிடக் கூடாது.

இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றார் என்று கேள்விப்பட்டவுடன் றபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உடலிலே அந்த வலுவான உணர்வைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டு இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
இந்த உடலில் கஷ்டப்பட்டு அதனால் விளைந்த
நச்சுத் தன்மைகள அனைத்தும் அங்கே கரைந்து
இனி பிறவியில்லா நிலை அடைந்து
அழியா ஒளிச் சரீரம் பெற்று
ஏகாந்த நிலை கொண்டு வாழ வேண்டும் என்ற உணர்வுடன்
உங்கள் மூதாதையர்களை இதைப் போல அனுப்புங்கள்.

அவர்கள் முன் சென்றால் பின் அவர்கள் உணர்வை நாம் எளிதில் பெற முடியும். இந்த உடலுக்குப் பின் அந்த அருள் உணர்வை நமக்குள் பெற்று நாமும் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த வழியைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள். அது காலத்தால் மறைந்துவிட்டது.

இன்றைய உலகில் விஞ்ஞானம் நிரூபிக்கின்றது பல உண்மைகளை. இனியாவது அஞ்ஞான வாழ்க்கை வாழாது மெய்ஞான உணர்வு கொண்டு நம் மூதாதைகளை விண் செலுத்துவோம்.
நாமும் பிறவியில்லா நிலை அடைவோம்.
அவர்களையும் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

ஆகவே, இதைப் போன்று காலையில் எழுந்தபின் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தோர் இதை உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை பிறவியில்லா நிலை அடையச் செய்ய 48 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று குடும்பத்தில் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று முறைப்படுத்திச் செய்தால்
அந்த ஆன்மாக்கள் விண் செல்வோதோடு மட்டுமல்லாதபடி
அந்தப் பேரருளின் உண்மையின் உணர்வை நீங்களும் பெற முடியும்.

உங்களால் அவர்கள் விண் செல்வதற்கு முன்
அவருடன் நீங்கள் பழகிய காலத்தில்
அவர் பட்ட வேதனையின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இருப்பினும்
இந்த முறைப்படி எண்ணினால் அது கரைக்கப்பட்டு
உங்களுக்குள் மகிழ்ச்சி என்ற நிலைகளை உருவாக்கலாம்.

இல்லையென்றால் பரம்பரை நோய் என்றும் பரம்பரை குணம் என்றும் நமக்குள் வளரத் தொடங்கும்.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு அருள்ஞானத்தின் வழியில் நம் குரு காட்டிய வழியில் இதைச் செயல்படுத்துங்கள்.