ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2015

இன்று கத்தி முனையில் தான் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்...!

விஞ்ஞான அறிவு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது. மனிதனின் இயக்கமும் உயிரணுவின் தோற்றமும் காட்டுகின்றது.

இப்பொழுது என்ன செய்கின்றார்கள்? குழந்தை இல்லையென்றால் சீனாவில் அறிவிப்பு கொடுக்கின்றான்.

விந்துக்களைச் சேமித்து வைத்துக் கொள்கிறான்.

யாருக்காவது குழந்தை இல்லை என்றால் “ட்யூப்”ல் வைத்து குழந்தையை வளர்த்துக் கொள்கின்றான். இப்படி விஞ்ஞான அறிவு போய்விட்டது. குழந்தை இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

யாருடைய கருவையோ எடுத்துத் தனக்குள் வளர்த்து தன் குழந்தை என்று சொல்கிறான். தத்துக்கு எடுத்து வளர்க்கின்ற மாதிரி தனக்குள் இவ்வாறு வளர்ந்ததை தன் குழந்தை என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளலாம்.

இப்படித்தான் விஞ்ஞான அறிவு எங்கேயோ போகிறது.

அதே மாதிரி கருவில் உருவாகும் குழந்தைகளை ஸ்கேன் மூலம் பார்க்கின்றார்கள். அது முதுகு வளர்ந்திருக்கிறாதா? கண் இருக்கின்றதா? மூளை வளர்ந்திருக்கின்றதா? என்று பார்க்கின்றார்கள்.

இப்பொழுது ஸ்கேனில் மனித உடலில் உணர்ச்சிகளைச் சோதிக்கின்ற மாதிரி கருவில் இருக்கும் குழந்தைகளைச் சோதிக்கின்றார்கள். அது ஏதாவது மூளை வளர்ச்சி குறைவாக இருந்தது அதை அவர்கள் வளரவிடுவதில்லை.

ஐந்து மாதத்தில் உறுப்புகள் வளர்வதைப் பார்க்கின்றார்கள். இந்த உறுப்புகள் மாறி வருவதைப் பார்த்தபின் கை இல்லை கால் இல்லை என்று  இதைப் பார்த்தபின் கருவைக் கலைத்து விடுகின்றார்கள்.

இல்லையென்றால் குழந்தை ஊனமாகப் பிறந்தபின் வேதனைப்பட வேண்டியதிருக்கும்.

கருவிலே இருக்கும்போது ஒரு காக்காய் வலிப்பு வந்தவரைப் பார்க்கின்றனர். அந்த வலிப்பின் தன்மை கருவிலே வளரப்படும்போது குழந்தைக்கு அந்த நோய் வருகின்றது.

இதுவெல்லாம் தாய் நுகரும் உணர்வுகள் எப்படியெல்லாம் மாறுகிறது? என்ற நிலைகளை அன்று மெய்ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இன்று விஞ்ஞானி நிரூபிக்கின்றான்.

இந்த விஞ்ஞானம் நிரூபித்தும் நாம் இன்னும் அஞ்ஞான வழிகளில் சாமி செய்யும், சாமியா செய்வார், அது செய்யும் இது செய்யும், பூஜை செய்தால் வந்துவிடுமா? யாகம் செய்தால் வந்துவிடுமா? என்றால் பாவத்தைப் போக்க முடியாது.

நமக்குள் அருள் ஒளியைக் கூட்டி
நமக்குள் இருளை அகற்றிப் பழகினாலொழிய
தீமைகள் நம்மை விட்டு அகலாது.
நாம் இந்த உடலுக்குள் எதை அதிகமாகச் சேமிக்கின்றோமோ அதன் வழிதான் நம்மைச் செயல்படுத்தும்.

ஆகவே, நாம் இன்று கத்தி முனையில் இருக்கின்றோம். எந்த நேரத்தில் எது நடக்கும் என்று சொல்ல முடியாது. எந்த குண்டு வெடிக்கும் என்று சொல்ல முடியாது.

அது வெடித்தபின் இந்த விஞ்ஞான உலகில் மனிதன் முழுமையாக மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் பருவம் வருகின்றது.

அன்று அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு அது விழுந்த இடத்தில் இன்றும் கருவில் வளரும் குழந்தைகள் ஊனமான நிலையில் உருவாகிறது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஸ்கேன் வைத்துப் பார்த்து அதையும் கருச்சிதைவு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக, அந்த மாதிரி நிலைகளில் தான் இருக்கின்றோம்.

இதைப் போல இந்த விஷக் குண்டுகள் உலகம் முழுவதற்கும் பரவும் தன்மை வருகின்றது. இந்த அணுகுண்டைக் காட்டிலும் விஷமான அணுக்கிருமிகள் நம் உடலில் உருவாகி, வேதனையாக்கி இந்த உடலையே சீர்குலைக்கச் செய்யும் நிலைகள் வருகின்றது.

அது எந்த நிமிடத்திலும் வரலாம். இத்தகைய உலகில் தான் நாம் இன்று வாழ்கிறோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நமது உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும்போது நாம் எதைச் சேமிக்கின்றோம்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் சேமிக்கும் சொத்து அழியாத சொத்தாக இருக்க வேண்டும்.

அதற்குத்தான் இந்தக் காலை துருவ தியானத்தில் அந்த துருவ  நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளச் சொல்கிறோம்.

 அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து கூட்டுத் தியானங்களிலும், பௌர்ணமி தியானங்களிலும் நம்முடைய முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து விண் செலுத்தும்படி செய்கிறோம்.

அங்கே அவர்களை இணைக்கும் பொழுது உடல் பெறும் அந்த நஞ்சான உணர்வுகள் அங்கே பஸ்பமாகக் கரைக்கப்படுகின்றது. அவர்கள் உயிரும் உணர்வின் அறிவும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்கின்றது.

பிறவியில்லா நிலை அடைந்து உயிருடன் ஒன்றி
அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றனர்.
இது மனிதன் தான் செய்ய முடியும்.

நம் முன்னோர்களை அனுப்பினால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதன் துணை கொண்டு நாம் அடிக்கடி துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்  சக்திகளை எளிதில் பெற்று அதை வைத்து நாம் தீமைகளை நீக்கலாம்.