ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2015

நல்லதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் ஆனால், வழி தெரியாது தவிக்கின்றார்கள் என்றார் குருநாதர்

ஒரு அம்மா என்னிடம் வந்து கேட்கிறது.

எனக்குக் கை கால் குடைச்சலாக இருக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான், கொடுத்தவர்கள் எல்லாம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் நான் கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் விட்டு விடு.
எல்லாம் நல்லதாக ஆக வேண்டும் என்று கேள் அம்மா என்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி அந்த அம்மா பெறவேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்சினேன்.

அந்த அம்மாவிடம் இப்பொழுது எப்படி இருக்கின்றது? ஒரு கரண்ட் பாய்கிற மாதிரி இருக்கின்றதா என்று நான் கேட்கிறேன்.

இல்லைங்க.., பிள்ளைகள் எல்லாம் சொல்வதைக் கேட்கவில்லை, எல்லோரும் எனக்கு எதிர்ப்பதமாக இருக்கின்றார்கள். எனக்கு வியாபாரம் நஷ்டமாகவே ஆகிக் கொண்டிருக்கின்றது என்று இதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டுள்ளது அந்த அம்மா.

யாருக்கு நான் என்ன சொல்லி என்ன பலன் இருக்கிறது? சிரமப்பட்டு அந்தத் தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பதிவு செய்வதற்காக அதைச் செய்கின்றேன்.

நீங்கள் அதை ஏங்கிப் பெற்றால் தான் அந்த ஆற்றல்கள் உங்களுக்குள் கிடைக்கும். தீமைகளை நீங்கள் நீக்க முடியும், கஷ்டங்களயும் போக்க முடியும்.

மைக்குக்கு முன்னாடி நான் பேசுகிறேன் என்றால் பேசுவதுதான் மைக்குக்கு வந்து உங்கள் காதுக்கு வருகிறது. அதை செவி வழி கேட்கப்படும் போது நீங்கள் ஏங்கி பெறுவதுதான் அங்கே உங்களுக்குள் வேலை செய்யும்..

அதை நாம் தெரிந்து கொள்வதற்கு இல்லாதபடி முடியவில்லை. சாமியார்களை எல்லாம் போய்ப் பார்ப்பது எல்லாக் கோவில்களையும் பா\ர்ப்பது கஷ்டங்களைச் சொல்வதுதான்.
எங்கேயாவது யாராவது எதையாவது செய்து கொடுக்கமாட்டார்களா
என்று காசைச் செலவழித்துக் கொண்டு அலையத் தெரியுமே தவிர
நிம்மதி ஏதாவது பெறுகின்றோமா என்றால் இல்லை.

நமது குருநாதர் இதைத்தான் சொன்னார்.

மனிதனுடைய வாழ்க்கையில் நல்லதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் நல்லது பெறக்கூடிய வழி தெரியாமல் தவிக்கின்றார்கள்.

அவர்களுக்கெல்லாம் ஞாபகத்தை ஊட்டுகின்ற மாதிரி 20 வருடம் ஒரு நாள் இரண்டு நாள் இல்லை ஊருக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் அங்கே ரொம்பவும் சிரமப்படுகின்றார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்று காட்டினார்.

அவர்களுடைய நிலைகள் எல்லாம் எப்படி இருக்கின்றது?
எதனால் இப்படி சிரமங்கள் ஆனது?
அவர்களுக்கெல்லாம் எப்படி இந்தச் சக்தியைக் கொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தைத் தெரிந்து கொண்டு வருவதற்குத்தான் கஷ்டங்களை குருநாதர் எமக்குக் கொடுத்து அறியச் செய்தார்.

தீமைகளிலிருந்து வென்று நஞ்சினை வென்று ஒளியின் சரீரமான துருவ நட்சத்திரத்தை எனக்குக் காட்டினார். அதை நுகரும்படி செய்தார். துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எனக்குள் சேர்த்து அதை வளர்த்து வரும் தீமைகளை வெல்ல முடிந்தது. உணர்வை ஒளியாக மாற்ற முடிந்தது.

அந்தச் சக்திகளை அந்த ஆற்றலை உலக மக்கள் அனவரும் பெறும் நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய வழியில் வேதனைகளிலிருந்து விடுபடும் வழிகளை உபதேச வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம்.

“கஷ்டத்தை எண்ணாமல்” கஷ்டத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்தில்
துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசித்தீர்கள் என்றால்
தக்க உபாயங்கள் கிடைக்கும். வேதனையிலிருந்து விடுபட முடியும்