ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2014

நடந்த நிகழ்ச்சிகள் - ஞானகுரு

1. உடலில் இருந்த கட்டிகள் நீங்கியது
அதே மாதிரி, நம் அன்பரின் சகோதரிக்கு உடலில் கட்டி கட்டியாக இருந்தது. ஆபரேஷன் பண்ணினாலும் திரும்பவும் வந்து கொண்டே இருக்கின்றது. ஆக, வாழ்க்கையே மோசமாகக் கூடிய நிலையாக வந்துவிட்டது. கல்யாணம் கட்டியும் கொடுக்க முடியாத அளவுக்கு ஆகிவிட்டது.

அவர்களுக்கு நான் சில நிலைகளைச் சொல்லி, துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த சக்தி பெறவேண்டும் என்று தியானித்து வா அம்மா என்று சொல்லிச் செய்யச் சொன்னேன்.

பிறகு அந்தக் கட்டிகள் அனைத்துமே நீங்கியது. இப்பொழுது உடல் நன்றாக ஆகியது. இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.
2. வயிற்றுக்குள் ஏவல் செய்திருக்கிறார்கள்
யாம் சித்தாகி வெளி ஊருக்குச் சென்ற பொழுது ஒரு சமயம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் என்ன நடந்தது? அங்கே பல மந்திர செயல்கள் ஏவல், மற்ற எல்லாம் நடக்கக்கூடிய இடம் அது.

ஒருவன் வயிற்று வலியோடு எம்மிடம் வந்தான். “அம்மா..,  வலிக்கின்றதே!, அம்மா வலிக்கின்றதே..,” என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.

இதெல்லாம் ஏவல் பண்ணி அந்த நிலைகளை வைத்திருக்கின்றார்கள். 

நான் ஆசீர்வாதம் கொடுத்தவுடன் அவனுக்கு வெளிக்கு வருகின்றது. செடியில் பிடுங்கிய வெள்ளரிக்காய் எப்படி இருக்கும்? அது போல வயிற்றுக்குள் இருந்து வெளியில் வருகின்றது. 

பின், அது வந்த பிற்பாடு அவனுக்கு வயிற்று வலி நீங்கியது.