ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 28, 2014

பத்து மகரிஷிகள் - ஈஸ்வராய குருதேவர் 1



1. தாய் கருவில் பெற்ற சக்திதான் நமது குருநாதருக்கும்
குருநாதருக்கும் கல்வி அறிவில்லை. படிப்பில்லை என்றாலும், அவர் தாய் கருவிலே விளைந்தது. அவர்கள் பூஜை, புனஸ்காரங்கள், மந்திரங்கள் இதெல்லாம் சொல்லித்தான் வளர்ந்திருக்கின்றார்கள்.

இருந்தாலும், அகஸ்தியரின் வாழ்க்கையைப் போன்று பூஜை செய்யும்போது, குருநாதருடைய தாயும் தந்தையும் இறந்துபோய் விடுகிறார்கள். இவர் இளமையில் ஆகப்போகும்போது, இவர் கருவிலே விளைந்த அந்த சக்தி இவருக்குள் இருக்கின்றது.

இதைப்போல ஏங்கித் தவிக்கும்போது அவர் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பிக்கின்றார். ஆனால், தாய் கருவிலே விளையப்படும்பொழுது, அவர்கள் கற்றுக் கொண்ட இராமாயணம், மஹாபாரதம், கார்த்திகை புராணம் போன்ற, அந்த உணர்வைப் பதிவு செய்ததை வைத்து, குருநாதர் அனாதையாகத் தான் வெளியேறுகின்றார்.

வெளியேறி, அங்கங்கே ஏதாவது தொழிலில் சேருவது. பத்து நாட்களுக்கு இருக்கின்றது. கடையில் சேர்வது சமையல் சமைக்கின்றது. இப்படியேதான், உலகம் முழுவதற்கும் சுற்றி வந்திருக்கின்றார் ஈஸ்வரபட்டர்.

அவர் எல்லா வழியிலும் வந்தார். ஆனாலும், அவரில் விளைந்த உணர்வுகள் தாய் கருவிலே விளைந்தது. அதன் அடிப்படையில்தான், ஒவ்வொன்றும் அந்தச் சந்தர்ப்பத்தில் தாய்  கருவிலே விளைந்தது, பூர்வ புண்ணியமாக அமைந்து சில சக்திகளை அவர் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது.
2. குருதேவர் ஆரம்பத்தில் விண் சென்ற உணர்வு
நமது குருநாதர் அவர் ஆரம்பத்தில் விண் சென்றவர். நம் எண்ண அலைகள் ஒன்றாகச் சேர்த்து குவிக்கப்படும் பொழுது, மனித உடலிலிருந்து ஒளியின் உணர்வுகளைப் பெற்ற  நமது குருநாதர் அவர் ஆரம்பத்தில் விண் சென்ற உணர்வுகளை”, நாம் அனைவரும் எளிதில் பெற முடிகின்றது.

அந்த ஒளியின் உடலில் இருந்து வந்த ஒளி அலைகள்தாம்
நம் பூமியில் படரப்பட்டு,
மற்ற உடல்களிலே பாய்ச்சப்பட்டு,
அந்த உணர்ச்சிகள் தூண்டி மீண்டும் இங்கே எழுகின்றது.

எழுந்த நிலைகளில் அந்த வித்தின் சத்துதான், எமக்கும் அது கிடைத்தது. எமது குருநாதர் அருள் வழி கொண்டு, அவர் கொடுத்த வித்தினை அவர் காட்டிய வழிகளில் வளர்த்து, அதை உங்களுக்குள்ளும் நல்ல வித்தாக விளையச் செய்கின்றோம்.
3. பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண் சென்றவர் நமது குருநாதர்
நமது குருநாதர், எமக்குக் காட்டிய நிலைகள் கொண்டு, அவர் பல கோடி ஆண்டுகளுக்கு முன், அவருடைய உயிராத்மா விண்ணிலே சபதரிஷி மண்டலமாக இணைந்தவர்.

அதன் வழி, நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு, மற்ற உயிர்களிலே அது விளைந்து, பலவாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு, அந்தந்த உணர்வுகள் பட்டு, அந்தந்த உடல்கள்,
அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி,
அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக
இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து,
அந்த நிலைகள் கொண்டு அவர்கள் சென்றுள்ளார்கள்.

ஆக, எமது குருநாதர், நமது குருநாதர், ஏனென்றால், எமது என்று, யாம் தனித்துச் சொல்வதற்குப் பதில், நமது என்ற நிலைக்கே, அந்த நிலைக்கு அவர் எம்மை அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால், அவருடைய உணர்வுகள் இன்று, அந்த சப்தரிஷி மண்டலங்களாக இருப்பதினாலே, அந்த உணர்வின் தொடர் கொண்டு, ஏனென்றால், அவருடைய உணர்வலைகள்தான்
இங்கே பலவாறாக பரவலாகப் படரப்பட்டு,
பல உயிராத்மாக்கள் விண் சென்றுள்ளார்கள்.

நமது குருநாதருடய உணர்வலைகள், இங்கே ஒவ்வொரு உணர்வுகளிலேயும் படரப்பட்டு, நம் உயிராத்மாவை ஒளியாக மாற்றி, ஒளியின் சரீரமாகப் பெரும்மண்டலமாக, சப்தரிஷி மண்டலமாக, சப்தரிஷி மண்டலம் என்று, அது சுழன்று கொண்டிருக்கின்றது.

அந்த சப்தரிஷி மண்டலத்திலே நாம் எல்லோரும் இணையலாம்.
4. குருதேவரின் பரிபாஷை
உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ, அத்தனையையும் எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

அதே சமயத்தில் மின்கம்பத்தை அடிப்பார். தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார். மின் கம்பத்தை அடித்துக்கொண்டே,
இந்த லைன்,
அந்த லைன் என்பார், குருநாதர்.
டேய்.., மிளகாய் ஒரு லட்சம்,
கோடி, கோடி என்பார்.

எமக்கு ஒன்றுமே புரியாது. பைத்தியம் பிடித்தது போன்று பேசிக்கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி என்பார்.

சாமி கோடி இங்கே இருக்கிறது? என்போம்.

அந்தக் கோடி இல்லை என்பார். “ஈகோடி என்பார். மிளகாய் கோடி, கோடி என்பார். என்னென்னவோ கோடி என்பார், எமக்கு அர்த்தம் ஒன்றுமே புரியாது.

பிறகு சொல்வார், ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து எத்தனை கோடி உணர்வுகளாக மாறுகின்றது என்பதையெல்லாம் விளக்குவார்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாக்கப்படும் பொழுது இதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது? உணர்வுகள் எப்படி மாறுகின்றது? என்பதை குருநாதர் எமக்குச் சொல்வார்.

உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்வார். முதலில் சொல்லிவிடுவார். பின்னர் புரிய வைப்பார்.

இப்படி குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை, யாம் அப்படியே உங்களிடத்தில் பதிய வைக்கின்றோம். சந்தர்ப்பம் வரும் போது, இதன் நினைவு உங்களிடம் வரும்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு, துருவ நட்சத்திரத்தை எண்ணினால், அது உங்கள் நினைவுக்கு வரும். அப்பொழுது, அதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்.