ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2014

குருநாதர் அருளால் நடந்த அற்புதங்கள், ஞானகுரு - 6

கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை மீட்டியது
ஒரு சமயம் குமாரபாளையத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வந்துகொண்டிருக்கின்றார்கள்.

அதிலே ஒரு நான்கு குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள். கொண்டு போய் மயக்கப்படுத்தி ஒரு காட்டுக்குள் படுக்க வைத்திருக்கின்றார்கள்.

கடத்திக் கொண்டு போவதற்காக கார் எடுத்து வரச் சென்றிருந்தார்கள்.

அந்த நேரத்தில் குழந்தையக் காணோம் என்று சொல்லி என்னிடம் வந்தார்கள். சொன்னவுடன், எந்தக் குழந்தையைப் பற்றிச் சொன்னார்களோ அதற்கு முதலில் நினைவு வரும்படிச் செய்தது.

அந்தக் குழந்தை முதலில் தப்பி வருகின்றது. பிறகு மற்ற குழந்தைகள் எல்லாம் தப்பியது.

இந்த மாதிரி இன்றைய உலகில் ஏராளமான நிலைகளில் மனங்கள் மாற்றப்பட்டு, பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றது.