தபோவனம் ஆரம்பித்த பின்பு, ஒருவர் ஆஸ்த்மா வந்தது என்று
நீங்க வேண்டும் என்று வந்தார். ஆஸ்த்மா நீங்கியது.
கடைசியில் என்ன ஆனது? சிறுநீரகத்தில் கல் என்றார்கள்.
சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்று சொன்னவுடனே, “ஈஸ்வரா., குருதேவா.,” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவரிடம் நான் இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய், சில நிலைகளைச் செய் என்று சொன்னவுடன்,
அந்தக் கல்லே
வெளியில் வந்துவிட்டது.
அந்தக் கல்லையே கையிலே வைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார்
அவ்வளவு பெரிய கல் வெளியிலே வந்தது. ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஆனால், பண்ணாமலே கல் வந்துவிட்டது.
ஆனால், பிற்பாடு என்ன செய்துவிட்டார்.
தியானம் எல்லாம் செய்து உடல் நல்லதாக ஆனது. இருந்தாலும்,
ஒரு சமயம் அவர் வீட்டில் உள்ள டைப் மிஷின் காணாமல் போய்விட்டது.
மிஷின் திருடு போய்விட்டது. காணாமல் போன டைப் மிஷினை
சாமி ஏன் கண்டுபிடித்துத் திருப்பித் தரக்கூடாது? என்று
சொல்லிவிட்டு அந்த வைராக்கியத்தில், எதற்காக சாமியிடம் போகவேண்டும் என்று இப்படி அவருடைய
மனோ நிலைகள் ஆகிவிட்டது. சாமியிடம் இப்படி பக்தி.
ஆனால், அவர் எதிலிருந்து காப்பாற்றப்பட்டார்? அது என்னென்னெ
நிலை என்று அவருக்குப் புரியவில்லை. எல்லாம் இந்த இயற்கையினுடைய நிலைகள்.
மனிதருடைய மனங்கள் எப்படி இருக்கின்றது? இயற்கையில் இதுதான் அனுபவம்.