ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2014

குருநாதர் அருளால் நடந்த அற்புதங்கள், ஞானகுரு - 2

புதையைல் எடுப்பதற்கு நரபலிக்குக் கூட்டிச் சென்ற பெண்ணைக் காத்தது
நான் சுற்றுப்பயணம் சுற்றி வரப்படும் பொழுது, வட நாட்டில் ஒரு இடத்திலே என்ன செய்தார்கள் என்றால், புதையல் எடுத்துத் தருகின்றேன் என்று சொல்லி ஒரு சாமியார் ஏழு பெண்களைக் கொலை செய்திருக்கின்றார்.

எட்டாவது ஒரு பெண்ணை கொலை செய்யக் கூட்டிக் கொண்டு போகின்றார்கள். மயக்க நிலைப்படுத்தி, அந்தப் பிள்ளையின் வீட்டுக்காரர்களே கூட்டிக் கொண்டு போகின்றார்கள்.

அப்பொழுது, நமது குருநாதர் அங்கே என்னைப் போகச் சொன்னார்.

அந்தப் பெண்ணுக்கு சுயநினைவு வரும்படிச் செய்தது.

சுய நினைவு வந்தவுடன், என்னைக் கொலை செய்யக் கூட்டிக் கொண்டு போகின்றார்கள். கொலை பண்ணி புதையல் எடுக்கப் போகின்றார்கள் என்ற உண்மைகள் எல்லாவற்றையும் வெளியில் சொல்லிவிட்டது.

கூட்டிக் கொண்டு சென்ற அந்தச் சாமியார் என்ன செய்தான்? அவன் உடனே தப்பி ஓடிவிட்டான்.

என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்த்துக் கொண்டிருந்த என்னை தாடி, மீசை வைத்திருந்தவுடன் என்னைப் பிடித்துக் கொண்டுபோய் விட்டார்கள்.

அங்கே நான் சென்றவுடன், இந்தப் பெண் என்னைப் பார்த்து இவர் இல்லை, இவர் என்னைக் கடத்தவில்லை. இவர் தான் காட்சி கொடுத்து ஆசீர்வாதம் கொடுத்து என்னைத் தப்பிக்க வைத்தார் என்று சொன்ன பிற்பாடு என்ன விட்டார்கள்.

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் வீட்டுக்காரர்களை ARREST செய்தார்கள்.

இப்படி, எத்தனையோ பேர் புதையல் இருக்கின்றது என்று ஆசை காட்டியவுடன் புதையலுக்கு ஆசைப்பட்டு தவறான நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் அந்த அருள்ஞானத்தைப் பெறுவோம். மன வலுவைப் பெறுவோம். அதன் வழியில் நம் மனங்கள் சரியாகும் பொழுது உங்கள் தொழில் தன்னாலே நன்றாக நடக்கும்.

தவறான ஆசையின் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடுவதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

ஏனென்றால், ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்து ஒவ்வொரு இடத்திலும் என்ன இருக்கின்றது? குருநாதர் அங்கே போகச் சொன்னார். இது மாதிரி நடக்கும் என்று சொல்கின்றார்.

அதாவது ஆபத்தான நிலையிலிருந்து நான் அந்தப் பெண்ணை எழுப்பிவிடுகின்றேன். அந்தப் பெண்ணைக் காப்பாறுகின்றேன். இது நடந்த நிகழ்ச்சி.