ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2014

உங்களைக் காக்கவும், மற்றரைக் காக்கவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இன்று உலகில் நடந்து கொண்டிருக்கும் பல கொடுமையான நிலைகளிலிருந்து நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் தப்ப வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் தாய் தந்தை உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் பெருக்கிக் பழக வேண்டும்.

ஆக, தீமை என்ற நிலைகள் உங்களுக்குள் வராதபடி உங்கள் எண்ணம்தான் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

அந்த அருள்சக்தி பெறக்கூடிய ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
இதை நீங்கள் உங்கள் எண்ணத்தால் எடுத்து
வளர்த்துக் கொள்ளுங்கள்.

தபோவனத்தில் அடுத்தடுத்து வெளியிடும் நூல்களை வாங்கிப் படியுங்கள். அதை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நூல்களை தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது படியுங்கள். கொஞ்ச நேரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் கேட்கச் செய்யுங்கள்.

கூட்டுத் தியானம் செய்யும் பொழுது இதைப் படியுங்கள். இதைப் படித்து அந்த உணர்வு கொண்டே தியானியுங்கள். உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெருகுவதைப் பார்க்கலாம்.

என்னால் தியானம் எடுக்க முடியவில்லை என்று சிலர் சொல்வார்கள். அப்பொழுது கண்களைத் திறங்கள். அந்த துருவ நட்சத்திரத்தை மட்டும் எண்ணி ஏங்கிக் கொண்டே இருங்கள்.

சிறிது நேரம் ஆனதும் கண்களை மூட வைக்கும். தன்னாலே அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரும்.

அப்பொழுது, மறுபடியும் வானை நோக்கிப் பாருங்கள். அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று மாற்றிக் கொண்டு வந்துவிட்டால் உங்கள் ஆன்மாவில் இருக்கும் தீமைகள் எல்லாம் நீங்குகின்றது.
உங்கள் ஆன்மா சுத்தம் ஆகின்றது.
உங்கள் எண்ணம் வலுப் பெறும்.

ஆக, எத்தகையை தீமை வந்தாலும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.