எலி ஜோதிடம், கிளி ஜோதிடம் சில பேர் வைத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் மனித உடலிலிருந்து எடுத்துக் கொண்ட மந்திர ஒலி எடுத்து, கரு எடுத்து அதற்குக்
கொடுப்பார்கள்.
அந்தக் கருவைக் கொடுத்தவுடன், எலியோ, கிளியோ இவன் சொல்வதையெல்லாம்
கேட்டுக் கொண்டேயிருக்கும்.
ஒரு நெல்லைக் கொடுத்து இது பண்ணியவுடனே என்ன செய்வான்?
தன் விரலைக் காட்டி,
அதைக் கண்ணிலே பார்ப்பார்கள்.
அந்தக் கிளி இவனை நேராகப் பார்க்கும்.
விரலை அசைத்தவுடனே
இங்கே பார்க்கும்.
பார்த்தவுடனே அந்த சீட்டை விட்டுவிட்டு
அடுத்த சீட்டை எடுக்கும்.
எடுத்தவுடனே அதைப் படித்துக் காட்டுவார்கள்.
இதே மாதிரி எலியை வைத்தும் சீட்டை எடுக்கச் செய்வார்கள்.
அவர்கள் கண்ணில் பார்ப்பார்கள். அதே மாதிரி உணர்வுகள் வேலை நடக்கும்.
இது எல்லாம் உலகம்
முழுவதற்கும் மாந்திரீக நிலைகளில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டுமா இல்லையா?
ஆக, நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு வரும் தீமைகளிலிருந்தெல்லாம்
விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.