ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2024

ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்

ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்

 

இங்கே எம்மை… (ஞானகுரு) ஆளைக் காணவில்லை என்று சொன்னதும் சாமியம்மா (என் மனைவி) எம்மை தேடிக் கொண்டிருந்தது. நான் பாபநாசம் சென்று விட்டேன் என்று அங்கே சென்று விட்டது. அது மலைக்காடு தண்ணீராக இருக்கின்றது… தனியாகத்தான் சென்றது. அங்கே ஒருவரும் இல்லை என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறித் திரும்பிவிட்டது.

ஆக
1.அன்றைக்குச் சரியான நேரத்தில் அந்தம்மா தேடி வந்து எம்மைக் கூட்டிக் கொண்டு வந்ததால் ஆவியாக வந்து எம்மைப் பிடிக்கவில்லை.
2.இல்லையென்றால் இப்பொழுது உங்களிடம் இந்த உபதேசக் கருத்துக்களை நான் பேச முடியாது… நிச்சயமாகப் பேச முடியாது.

காரணம்… ஆரம்பத்தில் நான் பவானியில் (சத்தியத்தின் சக்தி நிலை) இருந்தேன்… பல உண்மைகளை அங்கே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தேன்.

ஆனால் அவர்களோ எமக்குப் பல பல வகைகளிலும் இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தார்கள். எல்லாம் முடிந்த பிற்பாடு “என்னைச் சமாதியாக்க வேண்டும்” என்று முயற்சித்தார்கள். காரணம்…
1.அவர்கள் தனித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.
2.என்னைக் கொன்று விட்டு அவர்கள் தனித்து அதையெல்லாம் அனுபவிக்கலாம் என்று…!

இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் அங்கே தான் வெளி முதலில் உலகத்திற்குத் தெரியப்படுத்தியது. அங்கே தான் சாமியம்மா என்னைத் தேடி வந்தது.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சாமியம்மாவிடம்… அங்கே சமாதியாக்கி விடுவார்கள் நீ போ…! என்று சொல்லி இருக்கின்றார். நடந்த நிகழ்ச்சி இது…!

ஏனென்றால் பவானியில் உள்ளவர்களின் திட்டம் இதுதான். அருகிலே மலை ஒன்று இருக்கிறது… அருகிலே இடமும் வாங்கி இருந்தார்கள். அதிலே கட்டடத்தைக் கட்டி விட்டு அங்கேயே என்னைச் சமாதியாக்கி விடலாம் என்று.

இங்கே வந்தார்… திடீரென்று சொர்க்கம் சென்று விட்டார்…! என்று சொல்லி அதை வைத்துச் சம்பாதித்துக் கொள்ளலாம். யாம் கொடுத்த பாட நிலைகள் உலகில் யாருக்கும் சொல்லாது தாங்களே அதை மறைத்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் அன்று இருந்தார்கள்… ஏனென்றால் குருவை மறந்து விட்டார்கள். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! அங்கே நடந்த சில உண்மைகளை இப்பொழுது தான் உங்களுக்குச் சொல்கின்றேன்.

ஆகையினால்
1.என் மனைவி அங்கே வந்து “அவசியம் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது…:
2.நான் சிறிது நாள் இங்கே இருந்து விட்டு வருகின்றேன் என்று சொன்னேன்
3.இல்லை இப்போதே… உடனடியாக வரவேண்டும் என்று சொல்லிவிட்டது

அந்த நேரத்தில் நான் இருந்த இடத்திலே அவர்களுடைய செயல்களும் அதற்குத் தகுந்த மாதிரியே இருந்து விட்டது. பவானியில் எம்மைச் சமாதியாக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்.

யார்…? எஸ்.எஸ்.எம் என்பவர்…! அங்கே ஆரம்பத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் இது எல்லாம் தெரியும் பணம் இருந்தும் கொடுத்த ஞானத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக… ஆசை கொண்டு என்னைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்று விட்டார்கள்.

இது வரையில் இதை எங்கேயும் வெளிப்படுத்தவில்லை.
1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் வரும் என்பதை
2.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்

அதற்கப்புறம் தான் இங்கே வந்து தபோவனத்தை ஆரம்பித்தது. என்னுடைய மனைவி அப்பொழுது என்னை இழுத்துக் கொண்டு வரவில்லை என்றால் என்னைச் சமாதியாக்கி இருப்பார்கள்.
1.குருநாதர் அந்தம்மாவின் உடலில் வந்து எல்லாவற்றையும் சரி செய்து என்னை இழுத்து வந்தது
2.காரணம் அன்றைக்கு குருநாதர் யார்…? என்பது அவர்களுக்குத் தெரியாது
3.ஆனால் அவருடைய செயலை யாரும் மறைக்க முடியாது
4.அவர் இட்ட கட்டளையைத் தான் செய்ய வேண்டுமே தவிர சுதந்திரம் எனக்கு இல்லை
5.அவர் இட்ட வேலையை நான் (ஞானகுரு) வேலைக்காரனாகச் செய்து கொண்டிருக்கின்றேன்… அவ்வளவுதான்
6.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும்… உடலைக் கோவிலாக மதிக்க வேண்டும் என்று சொன்னார்
7.அந்த அருள் உணர்வைப் பெற செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்
8.ஆக… நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்களிடம் தான் என் வரம் கேட்கின்றோம்
9.அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சப்படும் பொழுது நீங்கள் அந்த அருளைப் பெருக்கினால் தான் எனக்கும் அந்த அருள் கிடைக்கின்றது
10.நீங்கள் வளர்ந்தால் தான் நான் வளர முடியும்.

அதாவது… விவசாயம் செய்யும் போது நிலத்தில் நல்ல வித்துக்களைப் போட்டு விளையச் செய்தால் மகசூல் எப்படிக் கிடைக்கின்றதோ அந்த வித்து தான் மற்றவர்களுக்குக் கிடைக்கும்.

ஆகையினால் என் மனைவி தேடி வந்து என்னை அழைத்துக் கொண்டது. நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனம் ஆகி… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டு வருகின்றோம்
1.இதே நிலை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான்
2.நாங்கள் இருவரும் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆண்டவனின் அருளைப் பெற்று “நீ ஆண்டவனாக இருந்துவிடப்பா…!”

ஆண்டவனின் அருளைப் பெற்று “நீ ஆண்டவனாக இருந்துவிடப்பா…!”

 

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்… என்று பாடுகின்றாய் “பரிபக்குவ நிலையை வேண்டுகின்றாய்…”

1.பல நாட்கள் பாடம் கேட்டு உங்கள் மூவரின் நிலை என்னப்பா…?
2.பாரினில் பல கோடி மக்கள் உள்ள நிலையிலும் பூர்வ ஜென்மத்தின் தொடர்பினால்
3.சிலரை (உங்களை) மட்டும் பாட நிலைக்கு ஏனப்பா நான் அழைக்கின்றேன்…!

இராமர் கதையை கேட்டிருப்பாய் இராமர் கதையில் உள்ள தத்துவத்தை எல்லாம் “மறந்துவிட்டு” விடிந்தபின் கேட்ட நிலைதானப்பா உங்கள் மூவரின் நிலையும்.

ஆனாலும் உங்கள் நினைவிலும் எண்ணத்திலும் என் நினைவு கலந்து உள்ளதால் உங்களின் நிலை சிதறிடாமல் காத்திட்டேன். சாமியும் பாடுகின்றார் நீங்களும் பாடுகின்றீர் நீங்களும் ஜெபிக்கின்றீர். உன் எண்ணமும் என்னுள்ளே கலந்தது.
1.எல்லோர் நிலையும் ஒரே சமயத்தில் எப்படி என் நிலைக்கு அந்த எண்ணம் மோதுகிறது…?
2.எல்லோர் நிலைக்கும் எப்படி ஆசீர்வாதம் அளிக்கிறேன்…? என்பது புரிந்ததா…!

சில தியானக் கூடங்களில் ஆயிரம் பேர் அமர்ந்திருந்தாலும் எல்லோரும் ஆண்டவனையே நினைக்கின்றார்கள். அவரவர்களின் நிலைக்கு அந்தக் கடவுளை நினைத்தாலும்… எல்லோர் நிலைக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப தியானக் கூடத்தில் உள்ளவர்களின் எண்ணம் ஆண்டவனை ஜெபிப்பதில் உள்ளது.

ஆனால் அவரவர்களுக்கு வேண்டியதை நினைத்துத் தான் ஜெபிக்கிறார்கள். உடல் நிலைக்கு… தொழில் நிலைக்கு… இப்படிப் பல நிலைகளில் அவரவர்களின் எண்ணத்திற்கு உகந்தபடி தியானக் கூடத்தில்… “அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை ஜெபிக்கிறார்கள்...”

எல்லோருடைய எண்ணத்திற்கு ஒப்ப அவர்கள் எண்ணும் ஆண்டவனால் எப்படி ஆசீர்வதிக்க முடிகின்றது…? இந்த நிலை புரிந்ததா…?

ஆண்டவர் ரூபத்தில் உள்ள எல்லோருமே எப்படியப்பா ஒரே நேரத்தில் அவரவர்கள் எண்ணத்திற்கு ரூபத்திற்கு அருள் புரிகின்றார்கள்.

பழனி மலைக்குப் பல கோடி பக்தர்கள் வருகிறார்கள் முருகா… முருகா… என்று காவடி ஆடிக்கொண்டு பல பல வழிகளில் அவ்ஆண்டவனை அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்நிலையில் “போகரினால்” எப்படியப்பா எல்லோருக்கும் அருள் புரிய முடிகிறது…?

சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… தாம் பெற்ற சூரியனின் சக்தியிலிருந்து ஜோதி ரூபத்தில்… அவர்களுடைய நினைவில்… எல்லோருடைய எண்ணத்தையும் ஈர்த்துக் கொள்கிறார்கள்.

ஈர்த்த நிலையில்
1.அவர்கள் பாய்ச்சும் ஒளிக் கதிர்கள் அவர்கள் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒலிகள் அவர்களின் உயிர் நிலைக்கே பாய்கிறது.
2.ஒளியைப் பெற்றவர்களுக்கெல்லாம் அவர்கள் எண்ணி வந்த நிலைக்கு அவ்ஒளியின் தன்மையினால் அவ்வாண்டவனின் அருள் கிடைக்கிறது.
3.ஆண்டவன் என்று இப்பொழுது நான் சொல்லியது “என் நிலையில் உள்ள” பல கோடிச் சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகளையும் தான்…!

ஆண்டவன் என்று எண்ணும்பொழுது மக்களுக்கு ஆண்டவன் என்பது யார்…? என்று புரிவதில்லை…!

தன்னையே புரிந்து கொள்ளாத இந்த மக்களுக்கு ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணம் இருந்தால்தான் தர்மம் நியாயம் என்ற… இப்பொழுது இருக்கும் சில தன்மைகளாவது… ஆண்டவன் என்ற “ஒரு பயமாவது” இருக்குமப்பா.

அதுவும் சிலரின் மனதில் தான் இருக்கிறது.

இந்நிலை காலம் காலமாக வந்திடும் என்ற நிலையைப் புரிந்து தான் இப்பொழுது சூட்சும உலகத்தில் உள்ள எல்லா ரிஷிகளும் ஞானிகளும் தவம் செய்து
1.அவ்வாண்டவனின் சக்தியைத் தன்னுள் ஈர்த்து அவர்களின் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.சூட்சம உலகத்தில் இருந்து கொண்டே எல்லா நிலைகளையும் செய்கிறார்கள் இம் மக்களின் தன்மைக்கு.

புத்தனும் இயேசுவும் நபியும் போகரும் கொங்கணவரும் ஐயப்பனும் பெற்ற அருளை எல்லாம் இம்மானிட உலகில் பிறந்த எல்லோருமே பெற்றிடலாம்.

இந்நிலையை ஏன் பெற வேண்டும் என்று எண்ணத்தை இனி எண்ணி விடாதீர்கள்…! இப்பொழுது சொல்லும் பாடம் மிகவும் முக்கியம்
1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது… இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

இந்த ஒரு வாரத்தில் உங்களுடைய எண்ணச் சிதறல்களை வைத்துத் தான் என்றும் வெளியிடாத இரகசியத்தை இன்று வெளியிட்டேன்.
1.”புரிந்ததா… புரிந்ததா… புரிந்ததா…” என்று பல பாடங்களைப் புரிய வைத்தும் எண்ணத்தைஸ் சிதற விட்டீர்கள்
2.இனி சுவாச நிலையை ஒருநிலைப்படுத்துங்கள் உம் வழிக்கு…!

August 8, 2024

“மிக உயர்ந்த சக்திகளை” உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

“மிக உயர்ந்த சக்திகளை” உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

 

அகஸ்தியன் உருவத்தைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள் பின்னாடி வந்த ஞானியர்கள். காரணம்… “இளமையிலேயே முதுமையானவர்கள் செயல்படுத்தும் செயலைச் செய்தவன்…” என்று காட்டுகின்றார்கள். தனது ஐந்தாவது வயதிலேயே வான இயலின் தத்துவத்தை அறிந்தவன் தான் அகஸ்தியன்

இன்றும் விஞ்ஞான உலகில் நாம் பார்க்கலாம் ஐந்து வயதுக் குழந்தை கம்ப்யூட்டர் கால்குலேட்டர் இல்லாமல் எல்லா வேலையும் செய்கிறது… உடனே கணக்குகளைச் சொல்கிறது…! என்று சொல்கின்றோம்.

1.சிறு வயதில் இதையெல்லாம் நன்றாகச் செயல்படுத்தும்
2.ஆனால் வளர்ச்சியில் ஆசையின் நிலை வரப்படும் பொழுது பின்னாட்களில் அந்தத் திறமை முடியாது போகிறது…
3.கடைசிலே ஒன்றும் முடிவதில்லை.

பெரிய தொழிற்சாலையில் கூட முதலில் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் இளம் வயதில் செய்த்து போன்று செய்திகள் பின் நாட்களில் வருவதில்லை. காரணம் உலக ஆசையின் நிலைகளைச் சேர்க்கப்படும் பொழுது அதனுடன் மறைந்து விடுகின்றது

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.எடுத்துக் கொண்ட சிந்தனைகளுக்கொப்ப சில அணுக்களின் தன்மை நுகர நேர்ந்தால்
2.ஞானத்தின் தன்மையாக அறியும் நிலை வருகின்றது.

நாளடைவில் ஆசை அதிகமாகும் போது மறைந்து விடுகின்றது. உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதையெல்லாம் பத்திரிக்கையில் பார்த்து இருப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் விளைந்தது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் புகுந்த நிலையில் அதனுடைய இயக்கமாக இப்படி இயக்கும்.

பின் வயது வளர்ச்சியாக…
1.இவனுக்குள் மாற்று உணர்வுகளோ தீமைகளோ அதிகரிக்கப்படும் பொழுது கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டு
2.மற்றவர்களுக்கு இவன் நல்ல விடைகளைச் சொன்னாலும் அந்த ஆன்மாவும் கடைசியிலே நாசமாகிவிடும்.
3.இவனுடைய நல்லதும் கேட்டு… உடலில் நோயாகி மடிந்து விடுவான்.

எல்லோருக்கும் அவன் ஜோசியம் சொன்னான்… நல்லதெல்லாம் சொன்னான் என்று முதலில் பெரிதாகச் சொன்னாலும் அவரும் கடைசியில் இந்த மண்ணுக்குள் தான் போகின்றார் (மடிந்து போகின்றார்).

இப்பொழுது என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் உங்கள் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொல்கின்றேன். ஆனால் ஆயிரக்கணக்கானோர் வந்து “எனக்கு இப்படிக் கஷ்டம்… அப்படிக் கஷ்டம்… நோயாக இருக்கின்றது…!” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் எனக்குள் என்ன ஆகும்…?

என்னால் முடிந்த அளவு துடைக்கின்றேன். ஆட்கள் எண்ணிக்கை கூடக் கூட கஷ்டம் என்று கூறுவதைத் துடைக்கத் தவறினால் நானும் அந்த நிலைக்குத் தான் போக வேண்டி வரும். வேறு வழி இல்லை…!

இரவும் பகலும் நான் விழித்திருந்து மகரிஷிகளின் அருள் உணர்வினை எடுத்து… கேட்டறிந்த தீமையின் உணர்களைத் துடைத்துக் கொள்கின்றேன்.

குருநாதர் காட்டிய வழியில்
1.மிக உயர்ந்த சக்திகளை உங்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
2.ஆனால் அந்த உயர்ந்த சக்தி எங்களுக்கு வேண்டும் என்று யார் கேட்கின்றார்கள்…?

என்னைப் பார்த்ததுமே… கோவிலிலே அழுவது போன்று தான் கஷ்டத்தைச் சொல்லி அழுக ஆரம்பிக்கின்றார்கள். நான் நல்லது செய்ய வந்தாலும் கூட இப்படி ஆகிவிடுகின்றது.

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.என் பிள்ளைகள் ஞானமாக இருக்க வேண்டும்
3.தொழில் சீராக இருக்க வேண்டும்
4.என் வாடிக்கையாளர் அனைவரும் செல்வாக்குடன் வாழ வேண்டும் கடன் பாக்கி எல்லாம் கொடுக்க வேண்டும்
5.அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி யாராவது கேட்கின்றீர்களா…? இல்லையே…!

வரக்கூடிய தீமைகளிலிருந்து மாற்றி அமைப்பதற்குத் தானே இத்தனையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.. நான் சொல்வதை நீங்கள் கேட்டு… விரும்பிச் செய்ய வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் கேட்டாலும் கூட… மறுபடியும் அதற்குத் தானே வந்தேன் என்று “மீண்டும் கஷ்டத்தைச் சொல்வார்கள்…” எத்தனையோ வழிகளில் யாம் அதை மாற்றி அமைப்பதற்குப் பிரயத்தனம் செய்தாலும் எடுத்துக் கொள்வதில்லை.

காட்டிற்குள் செல்லும் போது பல அவஸ்தைகளைக் கொடுத்தார் குருநாதர். அகஸ்தியன் எவ்வாறு சக்தி பெற்றான் என்பதை அறியச் செய்தார். ஆனால்
1.நாட்டிற்குள் வந்து “அகத்திற்குள் இயங்கும் இயக்கங்கள் எவ்வாறு…?” என்பதை உங்களிடம் சொல்லி
2.சக்தி வாய்ந்த வாக்குகளை கொடுக்கின்றோம் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா…!

ஒருவன் திட்டுகிறான் என்றால் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம். என்னைத் திட்டினான்… அவன் மோசமானவன்… அவன் உருப்படுவானா…? என்று சொன்னால் அங்கே வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்குப் புரையோடுகின்றது… உணர்வுகள் இப்படி இடைமறிக்கின்றது.

உணர்வின் இயக்கங்கள் இவ்வாறு தான் இருக்கின்றது.

1.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தி வேண்டும்
2.துன்பங்களை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி வேண்டும்
3.இருளைப் போக்கும் சக்தி வேண்டும் என்று என்னிடம் கேட்டால் “எமக்குத் தெளிவாக இருக்கும்…”

ஆனால் அதை விட்டுவிட்டு… சாமி…! நீங்கள் சொன்னீர்கள் எனக்குச் சரியாகவில்லையே…! என்று தான் சொல்லத் தொடங்குகின்றார்கள். அது எண்னை எப்படித் தாக்கும்…?

ஏனென்றால் ஒவ்வொருவரும் தொடர்பு கொண்ட நிலையில் தான் இயங்குகின்றோம்.

காரணம் உண்மையின் உணர்வுகளை அறிய முடியாத நிலையில் இருப்பதனால் யாம் நன்மைகள் செய்ய வந்தாலும் கூட இன்னொரு ஆன்மா (ஊங்கள்) உடலுக்குள் சென்ற பின் இந்த நிலை ஆகிவிடுகிறது.

இதையெல்லாம் மாற்றிப் பழக வேண்டும் அதற்குத்தான் தொடர்ந்து தொடர்ந்து உங்களுக்கு இந்த உபதேச வாயிலாக ஞாபகப்படுத்தி ஞானிகள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.
1.யாம் கொடுக்கக்கூடிய வாக்குகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தினால்
2.அதனுடைய பலன்களை நிச்சயம் நீங்கள் உணர முடியும்.

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)

 

இவ்வுலகத்திலே கலந்துள்ள பல விஞ்ஞானிகளும் பல ஜோதிடர்களும் எண்ணத்தாலும் எழுத்தாலும் எண்ணிப் பல நாட்கள் ஆராய்ச்சி செய்து வான மண்டலத்தின் தன்மையை வழிக்குக் கொண்டு வரச் செய்யும் வேலையையே நாமும் செய்யலாம் இன்றைய பாடத்தில்.

இவ்வுலகத் தன்மைக்கு ஒலி ஒளி நீர் இந்நிலைகளை எப்படி அவசியமோ அந்நிலையில் இருந்து எப்படி உலகம் சுழல்கிறதோ அச்சுழலும் தன்மைக்கு இம்மூன்றின் தன்மையுடன் “மற்றொரு தன்மையும் உள்ளதப்பா…”

இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட சூரிய மண்டலத்தில் இருந்து வந்திடும் ஒளிக்கதிர்களினால் இப்பூமியின் தன்மை ஈர்க்கும் நிலையில் உலகம் சுற்றுகிறது என்று சொன்னேன் அல்லவா.

இச்சூரிய மண்டலத்தினைச் சுற்றியுள்ள கிரக நிலைகள் 9 என்று விஞ்ஞானிகள் கணக்கெடுத்து உள்ளார்கள். ஒன்பது மண்டலங்களுமே இந்நிலையில் தான் சுற்றுகிறது என்கின்றனர்.

அப்படி என்றால் இப்பூமியின் நிலையில் உள்ளது போலவே தான் எல்லா மண்டலங்களிலும் ஜீவராசிகள் உள்ளனவா…? ஜீவராசிகளில் மனிதரின் நிலை உள்ளதுவா…?

பூமியின் நிலை போல் அந்நிலைகளும் சுற்றிக்கொண்டு இருந்தால் அந்நிலையில் ஏனப்பா மனித இனம் இல்லை…?
1.நம் பூமியை தவிர வேறு எந்த மண்டலத்திலும் இந்த மனித இனம் இல்லையப்பா.
2.அந்நிலையில் எந்த ஜீவராசிகளும் இருந்திட முடியாதப்பா.

பூமியின் தன்மையில் பெரும் பொக்கிஷம் என்ன என்றால் பூமிக்கு இரண்டு பக்கங்களில்
1.பூமிக்கு மேல் தந்தையை போன்று சூரியனும்
2.மறு பக்கத்தில் தாயைப் போல் சந்திரனும் உள்ளதால்
3.இப்பூமியின் தன்மை குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி விளையாடுகிறது.

சூரியன் -- பூமி -- சந்திரன்

சூரியனைச் சுற்றி இந்த உலகம் உருளும் பொழுது இவ்வுலகத்திற்கு எதிர் நிலையில் உள்ள சந்திரனின் ஒளியும் ஈர்ப்பு நிலையும் இப்பூமிக்குப் பாய்கின்றது.

பூமி எப்படித் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளதோ அந்நிலையில் தான் சந்திரனும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது. சூரியனின் நிலை ஒரு நிலையில் தான் உள்ளது.

பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது பகலும் இரவும் வருகிறது அல்லவா சூரிய ஒளி படும்போது பகலாகவும் சூரிய ஒளி படாத பொழுது இரவாகவும் உள்ளதல்லவா.

இந்நிலையில் மாறுதல் இல்லாமல் ஒன்று போலவே உள்ளது. ஆனால் சந்திரனை நாம் மாதத்திற்கு ஒரு தடவை தான் முழு நிலவாகக் காண்கின்றோம் மற்ற நாட்களில் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் அமாவாசையாகவும் இருக்கின்றது.

இந்நிலை எப்படியப்பா வந்தது…?

உலகைப் போலவே இச்சந்திரனும் சுற்றுவதால் உலகச் சுற்றை விட சந்திரனின் சுற்றல் துரிதமாக உள்ளது. அந்நிலையில் தான் உலகின் மறு பக்கத்தில் அது சுற்றும் பொழுது அதன் நிலையை மாறி மாறிக் காண்கின்றோம்.

இந்த உலகிற்குச் சூரியனின் ஒளி மட்டும் இருந்து விட்டால் ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட முடியுமா…? இவ்வுலக நிலையில் உள்ள பல பல வண்ணங்களும் பல கோடி வாசனைகளும் எப்படியப்பா வந்திடும்…?

1.இவ்வுலகில் உள்ள ஜீவராசிகளின் நிலைக்கு
2.”சூரியனின் தன்மையும்… சந்திரனின் தன்மையும்…” கலந்து தான் இருக்கின்றது

சுவாச நிலையில் இருந்து தான் இவ்வுலகமே… இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாமே உள்ளது என்று செப்பிட்டேன் பல முறை.

இவ்வுலக நிலையில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்ணுக்குச் சூரியனும் சந்திரனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களையும் தான் பார்த்திட முடிகின்றது.

விஞ்ஞானிகள் சொன்ன வியாழன் புதன் சனி செவ்வாய் ராகு கேது சுக்கிரன் என்ற மற்ற கிரகங்களை நம்மால் பார்த்திட முடிகின்றதா…?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது.
1.நம் பூமிக்கு நேர் பார்வை சந்திரன்
2.அந்நிலையைப் போலத்தான் சந்திரனுக்கு நேர் பார்வை செவ்வாய்.
3.எல்லா மண்டலத்துக்கும் சூரியனின் பார்வை ஒன்றே தான். சூரியப் பார்வை என்பது சூரிய சக்தி ஒன்றே தான்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் இச்சக்கி நிலை மாறுபடுகின்றது. சூரிய சக்தி ஒன்றே போல் எல்லா மண்டலத்திற்கும் படிந்தாலும்
1.அம்மண்டலத்தின் எதிர் நிலையில் உள்ள மண்டலத்தின் தன்மை மாறுபடுவதால்
2.அந்நிலையில் நடக்கும் நிலைகள் வேறாக உள்ளன.

சந்திரனுக்கு எதிர் நிலை பூமி தான். சூரிய சக்தியையும் பூமியின் சக்தியையும் சந்திரன் பெறுவதனால் சந்திர மண்டலத்தில் சில உயிரினங்கள் உள்ளன. ஆனாலும் அவைகள் “உருளும்” நிலையில்தான் உள்ளன.

சந்திரனில் பூரண சந்திரனில் “தியானத்தில்… பல ரிஷிகளின் உருவங்கள் தெரிவதெல்லாம்”
1.இப் பூமிக்கு நேர் எதிரில் இருக்கும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் பூமியில் படுவதால்
2.பல ரிஷிகளும் பல ஞானிகளும் அவர்களுடைய தவப்பயனை வைத்துப் பூரண சந்திரனிலிருந்து அவர்கள் பிறந்து வளர்ந்த பூமிக்கு
3.அந்நிலையில் இருந்து அந்தப் பூரண சந்திரனின் ஒளியில் “பல கோடி நறுமணங்களையும்… நல்ல எண்ணங்களையும் பாய்ச்சுகின்றார்கள்...”

அந்நிலையில் இருந்து வந்து தாக்கும் அணுக் கதிர்கள்
1.இம்மானிட உலகில் உள்ள மனிதர்களுக்குப் பெரும் பொக்கிஷம் போன்ற
2.உயிர் காக்கும் அணுக்களப்பா.

சூரியனின் ஒளி மட்டும் இருந்தால் பூமிக்கு உயிர் தன்மைக்கு வாழ்ந்திட முடியாதப்பா… மற்ற மண்டலங்களைப் போலத்தான் இப் பூமியின் நிலையும் இருந்திருக்கும்.

பூமியின் தன்மையை சூரிய ஒளி மட்டும் இருந்திருந்தால் பல பல பாளங்களாக வெடித்து பூமியின் நிலையே சிதறி இருக்கும்.

இப்பூமியின் நிலையைக் காக்கத்தான் எதிர் நிலையில் சந்திர மண்டலம் உள்ளது. சந்திர மண்டலத்தின் நிலை மட்டும் இருந்திருந்தாலும் சூரியனின் நிலை இல்லாமல் இயங்கிட முடியாதப்பா.

இந்நிலையை வைத்துத்தான் தாய் தந்தையரைப் போல என்று பகர்ந்திட்டேன் “சந்திரனையும் சூரியனையும்…”

August 7, 2024

“பச்சிலை மிரட்டி” உருவாகும் விதம்

“பச்சிலை மிரட்டி” உருவாகும் விதம்

 

பச்சிலைகளைக் கண்டபின் மற்ற மிருகங்கள் ஏன் எப்படி எதனால் அஞ்சி ஓடுகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார். உடல் பெற்ற பின் ஆந்த மணங்கள் கண்டு அதனால் விலகிச் செல்கிறது.

கீரிப்பிள்ளையும் பாம்பும் சண்டையிடுகின்றது. அதற்கும் ஒரு பச்சிலை உண்டு. பாம்பு கடித்து விட்டது என்றால் கீரி அந்தப் பச்சிலையில் போய்ப் பிரண்டு கொள்ளும்… அதனின் விஷங்கள் தணிந்து விடும்.

விஷத்தைத் தணித்தபின் மீண்டும் வந்து பாம்பைச் சண்டையிட்டு அது கத்திரித்து விடுகிறது. இதை நேரடியாக என்னிடம் காட்டுகின்றார்.

கீரியும் பாம்பும் சண்டையிடும் போது பக்கத்தில் நின்று தான் நான் (ஞானகுரு) வேடிக்கை பார்க்கின்றேன். இரண்டும் மனிதனைக் கண்டு பயப்படவில்லை.

ஏமாந்து திரும்பி பார்த்தால் அடுத்தது அடித்து விடும் என்ற நிலையில் இந்த முசிடில் தான் இருக்கின்றது.

இதனுடைய எதிர்ப்பு உணர்வுகள் எப்படி இருக்கின்றது…? அந்த மூச்சலைகள் வெளி வரும் போது சூரியனுடைய காந்த சக்தி எப்படிக் கவர்கிறது…?

1.கீரிக்கும் பாம்புக்கும் போர் முறையில் உடலில் விளைந்த உணர்வுகள் இந்த உணர்ச்சிகளை எடுத்து
2.மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்துக்களுடன் இது ஊடுருவி
3.ஒன்றை ஒன்று அஞ்சி ஓடி ஒன்றுடன் மோதி ஒரு சுழல் காற்று போலப் பரவி எடை கூடியது மீண்டும் மண்ணிலே பதிந்து விடுகிறது.
4.அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது துடித்து வீரியமாக எழுந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது
5.செடியாக அது உருவான பின் பாம்பின் அருகில் கொண்டு போய் அதைக் காண்பித்தால் பாம்பு பயந்து விலகிச் சென்று விடுகிறது.

கீரிப்பிள்ளை நஞ்சை முறிக்கும் பச்சிலைக்குச் செல்கின்றது… தப்பி விடுகின்றது ஆனால் அந்தச் செடியைப் பாம்பின் அருகில் வைத்தால் பாம்பு பயப்படுவதில்லை.

எப்படி எல்லாம் கலவை ஏற்பட்டு இந்தச் செடிகள் புதிது புதிதாக உருவாகின்றது என்பதை மலைப்பகுதிகளில் அழைத்துச் சென்று 20 வருடம் குருநாதர் எனக்கு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
1.அத்தகைய செடிகள் எப்படி உருவாகின்றது
2.விஷத்தின் தன்மைகள் எப்படி மாறுகின்றது…?
3.ஒன்றை ஒன்று எப்படி மாற்றிக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றார்.

காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.

அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.

அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா...! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.

சாமி... ஒரே நாற்றமாக இருக்கின்றது...! என்று சொன்னேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா...! அதனாலே “உட்கார்ந்து பார்...!” என்று சொல்கிறார்.

உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்...? ஒரு நாளா... இரண்டு நாட்களா...! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.

பத்துப் பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.

அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்....?

புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.

புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.

இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.

புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.

புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.

அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உண்ணி... ஈ...” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.

இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது…? என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்லுகின்றார்.

அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது. இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக...” வளர்கின்றது.

நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்து நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.

இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.

அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.

அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.

இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் "கிறு..கிறு.." என்று சுற்றுகின்றது.

அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.
1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.
2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.
3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.
4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.
5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர். ஒரு வித்தாகி விடுகின்றது.

பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி ஒரு சுவையாக மாறுகின்றது.

இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.

இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின் எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது
1.இதில் கலந்த நிலைக்கு எதிர் நிலையாக வரும் போது
2.அதிலே தாக்கப்பட்டு இழுக்கும் சக்தியாக வருகின்றது
3.அப்போது அது செடியாக வளர்கின்றது.
4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.

இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது…? என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.

அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது. கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார். கத்தி எதற்கு சாமி...? என்றேன். கத்தியைக் கொண்டு போ என்றார்.

அங்கே மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து இருக்கின்றது.

அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.

கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்...” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா...” என்றார்.

நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.

பார்த்தயா...! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.

இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.

1.நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின்
2.உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.
3.விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம்
4.மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.
5.உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.

அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.

வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்து விடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.

கேன்சர் போன்ற நிலைகளுக்கு
1.இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால்
2.அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.
3.கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.

காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…?

செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…?

மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது…?

ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச் சேர்க்கப்படும்போது
1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி
2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது…? என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.

இயற்கையின் உண்மைகள் எப்படியெல்லாம் செயல்படுகின்றது…? இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தப்ப வேண்டும்…? என்ற நிலையைக் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று இவ்வாறு பல உண்மைகளைக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஈசனின் சக்தி

ஈசனின் சக்தி

 

ஆடும் ஆட்டத்தைப் பார்த்தாயா…? எல்லா உயிரினங்களின் உடலிலும் இந்நிலை உள்ளதப்பா. “அருள் வருவதும்… மருள் வருவதும்” இதுவேதானப்பா… இந்நிலையே தானப்பா.

இந்நிலையை இன்று உனக்கு உணர்த்திடவே பாட நிலையில் இருந்து செயல் நிலையில் காட்டிட்டேன் பார்த்தாயா…! இந்நிலையில் உள்ள பொழுது ஓங்கார இசையை எழுப்பும் பொழுது பல பல வாசனைகளை… வாசனைப் புகைகளை எழுப்பும் பொழுது அவ் உடலில் உள்ள ஆவிக்கு நாம் ஆகாரம் கொடுத்த நிலை வருகின்றது.

இந்நிலை நீடித்தால்… தான் பார்த்த நிலையை தன் எண்ணத்தில் மறைத்து வைத்திருக்கும் நிலையை எல்லாமே செப்பிடுவார்கள்… இந்நிலை வந்தவர்கள்.

இவர்களின் நிலையை வைத்துத் தான்
1.பல பல சாமியார்கள் எல்லாம் ஆண்டவனின் பெயரை வைத்து மனிதர்களை மயக்குகின்றார்கள்.
2.இன்று பார்த்தாயல்லவா மறைந்த உண்மை வெளி வந்ததை.
3.இவ்வாவிகள் தான் வருகின்றது அருள் என்ற வடிவினிலே…
4.இனி சிறிது நேரம் இருந்திருந்தால் அவ்ருளின் தன்மை உன் மகளுக்கும் வந்திருக்கும்.

ஆண்டவன் என்பது யார் என்று புரிந்ததா…? இப்பொழுது எல்லா உடல்களிலும் இவ்வணுவின் வேலை உள்ளது.
1.பக்தி கொண்ட ஒருவரின் “ஆவி”
2.அக்குழந்தையின் மேல் உள்ளதால் “ஆண்டவன்” என்று செப்புகிறது.

இந்நிலையில் வந்த சாமியார் ஒருவர் “நானே கடவுள்… நானே தெய்வம்” என்கின்றான். அவ்விடம் உள்ள கருவின் வேலை இருக்கும் வரை தான் அவன் வேலையெல்லாம்.

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனை கடவுள்…” என்று சொல்லுகின்றான்.
1.ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது.
2.அக்கருவையே அவன் ஆண்டவன் என்கிறான்.

நேற்று இங்கு நடந்த நிலைதான் அவன் நிலையும். இந்நிலையை நீடிக்க வைத்துப் பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்கள் கடந்த கால நிலையும் கண்டிடலாம்.

இந்நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள்… கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது… எல்லாமே. இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவையெல்லாம்.

மை போட்டுக் கேட்கின்றார்கள் ஆண்டவனிடம் பூ கேட்கின்றார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? “இவ்வாவிகளின் வேலைதான் அது எல்லாம்...” அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாம் இந்நிலைக்கு வருகின்றது.

இவ் எல்லா ஆவிகளுமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில். ஆயிரத்தில் கோடியில் ஒன்றுதான் உடனே மறு ஜென்மம் எடுக்கின்றது.

அவசரத்தில் எடுக்கும் மறு ஜென்மத்தினால் அங்கயீனமுடன் குறையாகப் பிறப்பது… குறைப் பிரசவம்… குறையுடன் பிறக்கும் குழந்தைகள்… எல்லாமே இவைகளின் நிலை எல்லாம் அதுதான்.
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை ஆவி உலகில் இருந்தும்
2.அறிந்திட அவகாசம் இல்லாமல் வந்து பிறக்கின்றது குறையுடன்.

நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத் தான் பிறக்கின்றது.

முதலிலேயே செப்பி உள்ளேன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி… “எந்நிலையில் எப்படிப் பிறக்கின்றன…?” என்று. குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகத்தில் உள்ள வரை அவ்வாவிகளுக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.

ஆவி உலகில் உள்ள பொழுது “எந்நிலையில் பிறக்கலாம்…?” என்று தான் தெரியும்.
1.பிறந்த பின் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்திடாது.
2.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகின்றது.
3.இந்நிலையில் தான் ஈசனின் சக்தி விளையாடுகிறது.
4.பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை.

இன்று பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகின்றான் மனிதன்.

இவ் ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அச்சக்தியின் நிலை தெரிந்திருந்தால்… இக்கலியில் வந்த மனிதர்கள் அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் ரிஷிகள் நிலையில் தன்னையே… தன் உடலையே அச்சத்தின் அருளுக்கு அடிபணிய வைத்து
1.அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…?
2.எந்நிலையில் சக்தி அருளைப் பெற்றிடலாம்…?
3.எந்நிலையில் அச்சக்தியின் அருளைப் பெற்று இம்மக்களுக்கு அருளிடலாம்…? என்று செயல்படுகிறார்கள்.

நம் போகரின் நிலை எல்லாம் அப்படி வந்தது தானப்பா…!

August 6, 2024

புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!

புலனறிவின் இயக்கங்கள் சாதாரணமானதல்ல…!

 

உதாரணமாக… “இந்த இடத்திற்குச் சென்றால் ஆபத்து” என்று சொன்னார்கள் என்றால் அதை எப்படியாவது “கொஞ்சம் பார்ப்போமே…” என்று நம்மைப் பார்க்கும்படி செய்கிறது.

சிறுவர்கள் அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் பெரியவர்களாக இருக்கக்கூடிய நாம் “அது என்ன…? ஏது…?” என்று வேடிக்கை பார்த்து நுகர்ந்து அதற்குப் பின் தான் ஐய்யய்யோ…! என்று விலகிச் செல்கிறோம்.

சண்டையிடுகின்றார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் வருகின்றது.
1.சரி அது நடக்கிறது…
2.நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்…? என்று யாரும் நினைப்பதில்லை.

ரோட்டிலே செல்கின்றோம் ஒரு விபத்து நடக்கின்றது அடிபட்டுக் கீழே விழுகின்றார்கள் உடல்கள் நசுங்கிக் கிடக்கின்றது…! அங்கே என்ன ஒரே கூட்டமாக இருக்கின்றது…? என்று கேட்கின்றோம்.

விபத்தாகி விட்டது அடிபட்டுக் கிடக்கின்றார்கள் என்று சொன்னால்… “அது என்ன…?” என்று தான் பார்த்துவிட்டு வந்து விடுவோமே என்று செல்வோம்.

பய உணர்வுடன் உற்றுப் பார்ப்பார்கள்.
1.அந்த உடல் எப்படி நசுங்கியதோ அந்த உணர்வு இங்கே வந்து விடுகின்றது
2.இரவு தூக்கத்தில் பார்த்தால் எங்கேயோ வண்டியில் போகிற மாதிரி இருக்கிறது… என்னை நசுக்கி அமுக்குகின்ற மாதிரி இருக்கின்றது.
3.அன்றைக்குப் பின் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றெல்லாம் புலம்புவார்கள்

நான்கு நாளைக்கு இப்படி இருக்கின்றது இது எல்லாம் தெரிகிறது என்றாலும் இப்படித்தான் நம்மை இயக்குகின்றது.

அதே உணர்வு அதிகமான பின் அந்த பயத்தினால் மனிதன் சிந்தனை இழந்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள் ஏனென்றால் “புலனறிவால் அறிந்தும் கூட… பலவீனமான நிலைகள் இங்கே இயக்கப்படுகிறது….”

அடிபட்டான் என்ற உணர்வை நுகர்ந்தால்
1.அது நமக்குத் தீங்கு என்று நினைத்தாலும் அதை விடுவதில்லை
2.அதை நுகர்ந்து பார்க்கும்படித் தான் செய்கின்றது.

“நம்மை அறியாமலே” இந்த உணர்வுகள் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளக்கூடிய விருப்பம் தான் வருகின்றது. தெரிந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் தான் தெரிய முடிகின்றது.

அவன் பயத்தால் எப்படித் துடித்தானோ நுகர்ந்த உணர்வுகள் பய உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் கலந்து மற்ற உடல் அணுக்களுக்குள் சேர்த்த பின் அந்த மனிதன் எப்படிப் பதட்டம் அடைந்தானோ அதுவும் நம் நல்ல அணுக்களில் கலந்து கண்ட பின் பய உணர்ச்சிகள் ஆகிவிடுகின்றது

மீண்டும் அந்தப் பய அலைகள் வந்தால்
1.யாராவது ஒருவர் சும்மா படுத்து இருந்தாலும் கூட
2.அதைப் பார்த்தால் ஒரு பிரேதமோ என்று பயம் வரும் செத்துப் போய் விட்டானா…? என்ற பயம் வரும்.

வீட்டிற்குள்ளே இருந்தாலும் கூட பார்த்தால் அந்த நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் படுத்திருந்தாலும் இந்த நினைவுகள் வரும்.

ஆக நாம் எதை அறிந்து கொண்டோம்…?

1.இந்த உடலில் நாம் எதைப் பதிவு செய்தோமோ
2.இந்தப் புலனறிவு தான் நம்மை இப்படிச் செயல்படுத்துகின்றது.

இதையெல்லாம் நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும் மகரிஷிகள் உணர்வை எடுத்து வலுவாக்கி ஆத்ம சுத்தி செய்து தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உலக நடப்புகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பினாலும் அதை நாம் உடனுக்குடன் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு தூய்மைப்படுத்தினால் தான்
1.நம்முடைய நல்ல குணங்களும் காக்கப்படும்
2.நம்முடைய உடல் உறுப்புகளும் காக்கப்படும்
3.நம்முடைய மனதும் அமைதிப்படும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு… தெளிந்த நிலைகள் கொண்டு இனி வழி நடப்பதே நல்லது.

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்

“மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால்
1.மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.
2.அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.
3.இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு
4.அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் “பல மகான்கள்” தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் “மீண்டும் மனித ஜனனம் தேவை…”

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

August 5, 2024

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

 

விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்ட நிலையில் இன்று நம் சூரியனே பாழடையும் தன்மையில் இருக்கின்றது அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழுகின்றோம். இதிலே வளர்ந்த மனிதன் அணுகுண்டுகளை நான்கு திசையிலும் செலுத்தினான் என்றால் இந்த சூரியனே அழிந்துவிடலாம்.

மற்ற பிரபஞ்சம் சிதைந்து அதிலிருந்து விலகி வரும் கோள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்தால்… பூமிக்குள் வந்து தாக்கி விடாதபடி இராக்கெட்டுகளைத் தயார் நிலையில் வைத்து… அணுகுண்டுகளையும் வைத்து… அதன் வீரிய உணர்வு சுக்கு நூறாகத் தெறிக்கச் செய்வதற்காக விஞ்ஞானிகள் வைத்திருந்தார்கள்.

ஆனால் அப்படி வந்த அந்தச் சிதைந்த கோள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்ததால் அங்கே விழுந்து… அதனின் சுழற்சியில் கவரப்பட்டு… வெப்பத்தால் கரைந்து ஆவிகளாக மாறி… அந்த ஆவியின் தன்மை உறைபனியாக மாற்றி வைத்துக் கொண்டது.

பூமியை விடப் பெரிதான கோள் தான் வந்தது நம் பூமியிலே அது விழுந்தால் எந்தப் பகுதியில் விழுகின்றதோ மக்கள் தங்கள் அழிக்கப்படுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விட்டால் பெரிய கோளாக மாறும். இரண்டு மடங்கு ஆகிவிட்டால் சுழற்சியின் வேகம் கூடி ஈர்ப்பின் தன்மை அதிகரித்துவிடும்.

அதிகரித்தால் வியாழன் கோள் போலவே நம் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் மடியும் தன்மை உருவாகிவிடும்.
1.இப்படி பிரபஞ்சங்கள் பலவாறு பல வகைகளிலும் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதையெல்லாம் அடித்து நொறுக்கும் சக்தி பெற்றிருந்தாலும் மக்களைக் காக்கும் நிலை இல்லை.

அன்று ஒரு காலம் அகஸ்தியன் தன்னுடைய பார்வையால் தனது உணர்வின் சக்தி கொண்டு…
1.பூமி நீளமாக வளர்ந்து கொண்டே செல்வதைக் குறைப்பதற்காகத் திசை திருப்பி
2.வட துருவத்தில் உருப் பெற்ற பனிப்பாறைகள் தென் துருவத்தின் வெப்பத்தால் கரைந்து கடல் நீராகப் பெருகச் செய்து சமப்படுத்தினான்
3.இன்று வரை சீராக ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானத்தின் நிலையில் பூமியிலே ஒரு பக்கம் அணுகுண்டுகளை வெடித்தார்கள் என்றால் சூரியனுடைய பிடிப்பு… அந்தக் காந்த அலைகளைத் தடுத்து நிறுத்தப்படும் பொழுது ஒரு பக்கம் ஈர்க்கும் தன்மை அதிகரித்துப் பூமி குடை சாயும் நிலை வரும்.

ஆக காலம் கடந்த நிலைகள் கொண்டு
1.இப்போதாவது இந்த உண்மைகளை அறிந்து கொண்டோம்… தவறவிட்டால் தப்பும் மார்க்கம் ஏது…?
2.இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அறிவதற்காக வேண்டிக் காடு மலைகளை எல்லாம் குருநாதர் எம்மை (ஞானகுரு) அலைய வைத்தார். பல உணர்வுகளைப் பதிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அந்தப் பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்ட பின் நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். குருநாதர் சொன்னது
1.மறைந்த நிலையினை மக்களுக்கு மீண்டும் எடுத்துக்காட்டு.
2.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும்
3.மக்களின் உணர்வுகள் உனக்குள் உண்டு அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை நீ எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகிறது.
4.நீயும் ஒளியாக ஆகின்றாய் கேட்பவர் உணர்வுகளிலும் ஒளியாகின்றது
5.பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய் அருள் ஒளி என்ற நிலையில் வாழ்கின்றாய்.
6.உன்னுடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமைகின்றது.
7.பேரருளை உனக்குள் வளர்த்துவிடு… எல்லோரையும் பேரின்பம் பெறச் செய்.
8.அதுவே உனக்குப் பேரானந்த நிலையில் ஏகாந்த நிலை பெற உனக்கு உதவும் என்று கூறினார்.

அதன் வழி தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி… உங்கள் நினைவு கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

அருள் ஒளியை நீங்கள் பெற்று இருளை அகற்றிடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து அனைவரையும் மீட்டிட வேண்டும்.

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

 

1.ஈர்க்கும் கனி…
2.ஈசனின் சக்தியையே ஈர்க்கும் கனி…
3.ஈசனின் கனி எலுமிச்சங்கனி.

இக்கனியின் தன்மையை வைத்துப் பூஜைக்கும் உணவிற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். நற்காரியங்களுக்கு இக்கனியைத் தருகின்றார்கள்.

பல வழிச் சாமியார்களும் இக்கனியைப் பூஜை செய்து இக்கனியில் மந்திரித்து மக்களுக்கு அளிக்கின்றார்கள். இக்கனியின் தன்மை என்ன…?

இவ் ஈசனின் எலுமிச்சங்கனியின் தன்மை “பெரும் ஈர்க்கும் சக்தி உள்ள கனியப்பா…” இக்கனியைக் கையில் வைத்து நீ சில நிலைகளை நினைக்கும்போது உன் சுவாச நிலையைக் கனி ஈர்க்கிறது.

அந்நிலையில் அக்கனியை நீ முகர்ந்திட்டால் அக்கனியின் மணத்தை வைத்து உன் நிலை என்ன…? என்பதைக் கனியின் மணத்திலிருந்து உன் மன நிலையை நீ அறிந்திடலாம்.

இவ் ஈசனின் கனியைக் கையில் ஏந்தி
1.உன் மன நிலையைச் சந்தோசமாக்கி வேண்டிக் கொண்டால் நீ நினைக்கும் எந்தக் காரியத்தையும் அக்கனி ஈர்க்கிறது.
2.காரியம் முடியும் வரை தன் சக்தியின் அருளை உனக்கு அருள்கின்றது.

ஒரு எலுமிச்சங்கனியை உன் இல்லத்திற்கு வாங்கி வந்து உன் கையில் வைத்து அவ்வாண்டவனை வணங்கி அக்கனிக்குக் கற்பூர ஆராதனை காட்டி… அந்நிலையில் ஒரு காரியத்தை எண்ணிக் கொண்டு நீ வணங்கிடும் தெய்வ நிலையில் உள்ளவர்களை அழைத்திட்டால்… அந்நிலைக்கு அவர்கள் வருகின்றார்கள்.

அவ்வீர்ப்புத்தன்மை அந்தக் கனிக்கு உள்ளது. “காந்தத்தின்” ஈர்ப்பு நிலை போல் அக்கனிக்கும் ஈர்ப்பு நிலை உள்ளது.
பல சாமியார்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா…! அவர்கள் நிலையில் எல்லோரும் எலுமிச்சங்கனியை வைத்திருப்பார்கள். அவர்கள் ஜெபத்திற்கும் அக்கருவித்து வேலைக்கும் இந்த எலுமிச்சங்ககனியைத்தான் தன் வசத்திற்கு வைத்துக் கொள்கின்றார்கள். இக்கனியின் தன்மையைப் பற்றி பல பல செப்பிடலாம்.

இக்கனி ஈர்க்கும் நிலையில் தன்னுள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொள்கின்றது.
1.இக்கனிக்குச் சுவாச நிலை உள்ளது
2.இக்கனியைக் கையில் வைத்தால் இவ்வுலக சுற்றலையே அறிந்திடலாம்.

இக்கனியை வீட்டின் முகப்பில் கட்டுவது இக்கனியைக் காண்பவர்கள் எண்ணத்தைத் தன்னுள் ஈர்க்கிறது இக்கனி. அவர்கள் எண்ணம் நம்மை வந்து தாக்குவதில்லை. புரிகிறதா…?

கனியின் தன்மையிலேயே அவர்கள் எண்ணம் அந்த இடத்தில் அடிபடுகிறது. நம்மை வந்து அது அண்டுவதில்லை.

திருஷ்டி என்ற பெயரில் நீ கட்டுகின்றாய்… என்ன என்று புரியாமல்…! ஏன் மற்ற கனிகளை அந்நிலைக்குக் கட்டக்கூடாதா…? இக்கனிதான் சக்திக்கனி. இதனுடைய நிலை எக்கனிக்கும் இல்லை இவ்வுலகம் முழுவதுமே.

இக்கனியை வைத்துதான் பிழைக்கின்றார்கள் பல பல சாமியார்கள் எல்லாம் புரிந்ததா…?

1.இக்கனியின் சாறு எடுத்து மஞ்சளைக் கலந்து புருவத்தின் மத்தியில் இடுவதும் அவ்வீர்ப்பு நிலைக்குத்தான்.
2.நல்ல எண்ணத்துடன் இக்கனியில் செய்த குங்குமத்தை வைத்துக் கொண்டால்
3.தீய துர் ஆவிகள் வந்து அண்டிடாது என்பதெல்லாம் இதன் பொருளே.

August 4, 2024

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

 

கொசுக்களாகி மனிதனின் இரத்தத்தைக் குடித்துக் கருமுட்டைகளாகி மனிதனாகப் பிறவிக்கு வந்தால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்தோம் என்றால் மிகவும் மோசமாக இருக்கும்.

இப்படி எத்தனையோ வகையான உயிரணுக்களின் தோற்றத்திலிருந்து சேர்த்துக் கொண்ட நிலையில் இருந்து உரு மாறிக்கொண்டே இருக்கின்றது.

பன்றியாக இருந்து நஞ்சினை நீக்கி மனிதனாக உருவாக்கிய பின்
1.நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற நிலையில்
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை துடைக்கத் தவறினால்
3.மீண்டும் பிறவிக் கடனில் தான் உழல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் சமாளிக்கின்றோம்… செல்வத்தையும் தேடி வைத்திருக்கின்றோம். இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால் உடனே இதயத்தை மாற்றிக் கொடுத்து விடுகின்றார்கள் சிறிது காலத்திற்கு வாழும்படி செய்கின்றார்கள். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…?

என்னுடைய (ஞானகுரு) பற்கள் விழுந்துவிட்டது. பல் செட்டைக் கட்டி நிஜப்பல் இருக்கின்ற மாதிரி நான் சாப்பிடுகின்றேன்… விஞ்ஞான அறிவு கொண்டு செய்து கொடுத்து விடுகின்றார்கள்.

பல் இல்லாதவர்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் சத்தை சரி வர நல்ல இரத்தமாக மாற்ற முடியாது. அதனால் உடல் பலவீனம் அடைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த உபாயங்ககளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால்
1.இப்போது இந்த மெய்ஞான அறிவைத் தெரிந்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறத் தவறினால்
2.வரும் தீமைகளை அதை வைத்துத் துடைக்கத் தவறினால் நோயாகி
3.மீண்டும் கீழான சரீரங்களுக்குத் தான் செல்ல வேண்டி வரும்.

அதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அடிக்கடி தியானப் பயிற்சியை உங்களுக்குப் பல வகைகளிலும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

பௌர்ணமி தியானங்களை அமைத்து அந்தத் தியானத்தின் வலுக் கொண்டு குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சூட்சும சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் போது உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நாம் தியானித்த உணர்வுகள் அங்கே அதற்குள் தொக்கி நிற்கின்றது
2.அதை வைத்து அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதிலே விளைந்த உணர்வுகள் எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றார்கள்… வரக்கூடிய நோயிலிருந்து விடுபடவும் முடிகின்றது… வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பருவம் பெறுகின்றனர்.

விஞ்ஞானிகள் இன்றைக்கு எத்தனையோ புதுப்புது உயிரணுக்களை உருவாக்குகின்றார்கள் உடல்களை மாற்றுகின்றார்கள்.

ஆனால் இறந்த பின் தன் உயிரான்மாவைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியுமா…? என்றால் அது முடிவதில்லை. கண்டுபிடித்த உணர்வின் தன்மை கொண்டு தன் சீடனுக்குக் கற்பித்திருந்தால் இறந்த பின் சீடனின் உடலுக்குள் தான் போக முடியும். தான் கற்ற ஞானத்தை வேண்டுமென்றால் அவனுக்குப் போதிக்கலாம்.

ஆனால் சந்தர்ப்பத்தில் வேதனையும் துன்பங்களும் வந்தால் ஞானிகள் காட்டிய முறைப்படி காலை துருவ தியானத்தினை எடுத்துக் கொண்ட பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தூய்மைப்படுத்திக் கொண்டு
2.நோயற்றவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த உணர்வைப் பதிவு செய்து
3.நோய் நீங்கி நீங்கள் நன்றாக வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கும் நம் வாக்கு நல்லதாகின்றது
4.நமக்குள்ளும் தீமை புகாது தடுத்துக் கொள்கின்றோம்.

இப்பொழுது எதன் மீது அதிகமாகப் பற்று கொள்கின்றோம்…? நோயை நீக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பற்று கொள்கின்றோம். நோயின் உணர்வைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

பற்று… பற்றற்று இரு…!

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதன் மீது நாம் பற்று கொள்ளலாகாது. அதைப் பற்றற்றதாக ஆக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்த உணர்வினை நமக்குள் எடுத்து அதைப் பற்றுடன் பற்றிட வேண்டும்.

வேதனை உணர்வுகள் நம்மைப் பற்றிடாது பற்றற்றதாக மாற்றி… மற்றவர்களுக்கும் தீமையை நீக்கும் உணர்வுகளை இயக்கும் சக்தியாக அவர்களை அதைப் பற்ற வைத்து… பலவீனத்திலிருந்து மீட்டும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும். இதை வழிப்படுத்தி நாம் நடக்க வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையில் நம்மைச் செல்வம் காக்காது… அருள் செல்வமே நம்மைக் காக்கும்.
2.எத்தனையோ செல்வத்தை வைத்திருப்பவர்கள்… அவர்கள் குடும்பம் எல்லாம் துயரத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுங்கள்.

நல் மூச்சே விட்டிடுங்கள்

நல் மூச்சே விட்டிடுங்கள்

 

ஓம் என்னும் பதத்திற்கு ஓ…ம் என்ற ஓங்கார இசையில் கலந்திருப்பாய் என்று பாடுகின்றாய். அப்பாடலின் ஆணிவேர் என்னப்பா…?

ஒரு நிமிடம் உன் நிலையில் பகர்கின்றேன்… ஒரு சொல்லில் பகர்ந்திடப்பா…! உதய வழியை அளிக்கத்தான் இந்த நாள் முதல் உன் மனதிற்கு அளிக்கின்றேன்.

உன் வழியில் வந்த எண்ணம் ஒரே எண்ணம் உணர்ந்து விட்டாய் உன் உதயத்திலேயே.

1.தாவரங்களின் உயிர் அவ்வாணி வேரில் உள்ளது… அதன் ஈர்ப்புத் தன்மை சூரிய ஒளி பட்டுக் கீழ் நோக்கி இழுக்கின்றது.
2.மனிதனின் ஆணிவேர் உயிர் சிரசின் முன் பகுதியில் உள்ளது… மனிதனின் சுவாச நிலை சூரிய ஒளி பட்டவுடன் தன்னைத்தானே சுற்றுகின்றது.
3.இவ்வுலகத்தின் ஆணிவேர் அவ்ஓம் என்ற ஓங்கார இசையினிலே சுழல்கின்றது.

உன் உதயத்தில்… உன் ஜெப நிலையில்… அவ்வுலகச் சுழற்சியில் “ஓ…ம்” என்ற ஓங்கார நாதத்தை உணர்ந்திடலாம்.

ஒரு நிமிடம் ஜெப நிலையில் இருந்திட்டால் உன்னைச் சுற்றி உள்ள ஒலிகள் எல்லாம் அடங்கும். ஓ…ம் என்ற ஓங்கார இசையை ஜெப நிலையின் பொருள் நம்மைச் சுற்றியுள்ள ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தை அருளச் செய்யத்தான் இந்த நிலையை உண்டாக்கினேன். வழியமைத்துப் பாடம் புகட்டுகின்றேன்.

ஏட்டுப்படிப்பு மட்டும் தான் ஏற்கின்றாய். செயலில் வரவேண்டுமப்பா. ஓ…ம் என்ற ஒலியின் ஓங்கார இசையில் கலந்திடத்தான் இந்த உண்மைகளை உணர்த்திட்டேன்.
1.ஓ..ம் சக்தி என்ற பாடலை அமைத்திட்டேன்.
2.உருளுகின்ற சக்தியே… உயிரணுவின் சக்தியே… உயர்ந்து நிற்கும் சக்தியே…! பாடலின் பொருளும் பாடத்தின் பொருளும் ஒன்றுதான்.

ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி
சிங்கார இசையினிலும் இருந்திடுவாள் ஓம் சக்தி
சினமெல்லாம் தவிர்த்திடுவாள் ஓம் சக்தி
உலகெல்லாம் ஓங்கி நிற்கும் ஓம் சக்தி
உலகாளும் சக்தியே
உருளுகின்ற சக்தியே
உயர்ந்து நிற்கும் சக்தியே
உயிரணுவின் சக்தியே
உலகாளும் ஈசனின் சக்தியாய்
பூ மழையாகப் பொழிந்திடுவாய் சக்தியே…
பரிபூரணமாக என் மனதில் கலந்திடுவாய் சக்தியே
மனமெல்லாம் மணக்கச் செய்வாய் சக்தியே
ஓங்கார இசையினிலே ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி.

தியான நிலையில் நினைவெல்லாம் இன்னும் பரிபக்குவ நிலை வர வேண்டும். சுவாச நிலையில் “வாழ்க்கை முறையிலேயே” கலந்து வர வேண்டும் அத்தியான நிலை.

அந்நிலையில் தான் நீ அமரும் தியான நிலையில் இரண்டும் கலந்தால் தான் தியான நிலை கைகூடும்.
1.சுவாச நிலையின் எண்ணம் தான் முதல் படியில் வந்துள்ளது.
2.அடுத்த முதல் படியில் வந்துவிடும் ஓங்கார இசையின் நாதம் உன் செவிக்கு.
3.அத்தியான நிலைக்கு முதல் படி சுவாச நிலை அதைப் புரிந்திட்டாய்.

வரும் முதல் நிலை “ஓங்கார ஒலியைக் கேட்பது தான்…!” அந்நிலையில் நீ விடும் சுவாச நிலையே மறந்துவிடும். ஓங்கார ஒலி தான் உன் செவிக்குள்ளே ஒலித்து வரும்.

உலகத்தன்மையே ஓ…ம் என்ற ஒலியினால் தான் இயங்குகின்றது இவ்வொலிதான் உலகத்துக்கு ஆணிவேர். அவ்வொலியின் மேல் அவ்ஒளி பட்டவுடன் தான் இந்த ஜீவராசிகளின் ஜீவனெவல்லாம் தோன்றுகிறது.

இவ்ஒலியிலிருந்து நல் மனத்தைப் பெற்றிடுங்கள்… நல் மூச்சே விட்டிடுங்கள் என்பதெல்லாம் எந்த நிலையில்…?

நல் மூச்சே விட்டிடுங்கள் என்னும் பொழுது அந்நிலையில் உள்ள புஷ்பங்களையும் நறுமணம் கொண்ட பொருள்களையும் தேடுகின்றாய். அந்நிலையில் வருவதல்ல நல் மூச்சு.

நல் மூச்சு என்பதன் பொருள்…
1.உன் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலிருந்து வருவது தான்.
2.உன் மனநிலையில் மகிழ்ச்சியாக உள்ள நாளில் அவ்விடத்தில் உள்ள அசுத்தக் காற்றுகளும் உன்னை வந்து அடையாது.
3.அந்நிலையில் உன் சுவாச நிலையம் அந்தத் தீய மணத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால்… உன் மனமும் சுவாச நிலையும் உன் மன நிலையில் சோர்வு வந்துவிட்டால் உன் சுவாச நிலைக்கு எந்த நறுமணங்களும் வந்து அடையாது… புரிந்ததா…!

August 3, 2024

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் “அவர்கள் பெற வேண்டும்” என்று நாம் எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது. நமக்குள் அகந்தை என்ற உணர்வு செயல்படாது ஒடுங்குகின்றது.

அன்று துருவன் (அகஸ்தியன்) காட்டிற்குள் செல்லப்படும் பொழுது துஷ்ட மிருகங்கள் மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை கொண்டு வந்தாலும்…
1.அவன் உடலில் இருந்து வெளிப்படும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அதை ஒடுங்கச் செய்வது போன்று
2.விஷமான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்து… மற்றொன்றைக் கொன்று புசிக்கும் கடும் நோயாக உருவாக்கும் அந்த உணர்வுகளை
3.நாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வைச் சேர்த்து அந்த உணர்வுகளை ஒடுங்கச் செய்ய வேண்டும்.
4.ஆக அதை நுகர்கின்றோம்…! இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைகின்றது.
5.அந்த அணுக்களின் பெருக்கங்களைக் கொண்டு வரும்போது கணங்களுக்கு அதிபதி ஆகிப் பிறவியில்லாப் பெரு நிலை அடைய செய்யும்

“பிரம்மாவைச் சிறை பிடித்தான்…” என்ற நிலையில் அந்த அருள் ஒளியைத் தான் நாம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவனை அடிமையாக்க வேண்டும் என்று அகம் கொண்டு… துர்மார்க்க வழியில் அடித்து அவனைக் கைவல்யப்படுத்தி இன்னொருவர் மீது பாய்ச்சி அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் தான் இன்றைய உலகில் வந்து கொண்டிருக்கின்றது.

கடந்த கால நிலைகளில் மந்திர ஒலிகள் கொண்டிருந்தாலும்… உலோக உணர்வுகளை அறியச் செய்தாலும் அதனின் வளர்ச்சியில் அணுக் கதிரியக்கங்களையும் கண்டு கொண்ட பின் “இன்று மீண்டும்” ஆவியின் நிலைகளே தொடர்பு கொள்கின்றது.

அரச உணர்வு பெற்று விஞ்ஞான அறிவு கொண்டாலும் பேயாசை கொண்டு ராட்சச உணர்வு கொண்டு… மனிதன் தான் பெற வேண்டும் என்ற கௌரவ உணர்வு கொண்டு “நான்” என்ற நிலை உருவாக்கப்பட்டு அழித்திடும் உணர்வாகப் பெருகி… மனிதனே அசுரனாக மாறிடும் நிலையாக ஒருவரை ஒருவர் கொன்று புசித்து… அதை ரசித்திடும் நிலைகள் தான் இன்றைய உலகில் பெருகிக் கொண்டுள்ளது.

இது போன்ற உணர்வுகள் நமக்குள் சேர்ந்தாலும் “நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை அடக்கிடல் வேண்டும்…”

நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வைப் பெருக்கி… நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் அதில் அமிழ்ந்திருக்கும் அத்தகைய நிலையில் இருந்து அவர்களை விடுபடச் செய்யும் அருள் சக்தியைப் பெற நாம் தியானிப்போம்.

அனைவருடைய நிலைகளிலும் இருள் நீங்கி… மெய்ப் பொருள் என்ற தேவாதி தேவர்கள் என்ற மனித உரு பெற்ற நிலையினை… அருள் ஒளியின் உணர்வாக மாற்றிடும் நிலைபெறச் செய்வோம்… அருள் ஒளிச் சுடராகப் பெருக்குவோம்.

1.யாம் (ஞானகுரு) உபதேசித்த ஒலி நாடாக்களை ஆங்காங்கே வெளிப்படுத்தி
2.அதன் வழி நீங்கள் தியானியுங்கள்… உங்களுக்குள் இதை மனப்பாடமும் செய்து கொள்ளுங்கள்.
3..உபதேச ஒலி நாடாக்களைப் போட்டு அடிக்கடி அதைக் கேட்டுப் பதிவாக்குங்கள்… அனைவரையும் கேட்கச் செய்யுங்கள்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகளை உந்தச் செய்து நினைவை விண்ணிலே செலுத்தி
5.அருள் ஒளியின் உணர்வை உருவாக்கும் உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யுங்கள்.

அறியாது ஆட்டிப் படைக்கும் அசுர உணர்வுகளிலிருந்து உலக மக்களை மீளச் செய்யுங்கள்… அருள் ஞான சக்தியை ஊட்டச் செய்யுங்கள்.

தேவாதி தேவர் என்ற சர்வ வல்லமை பெற்ற அவர்கள் உடலில் நன்மையை ஊட்டும் அருள் ஒளியின் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கச் செய்யுங்கள்.

ஆகவே குறுகிய காலமே இந்த உடலில் வாழும் நாம் அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.
1.மற்றவரிடத்திலிருந்து வரும் தீமைகளை நுகர்ந்தாலும் அதை நாம் அருள் ஒளியாக மாற்றிடும் உணர்வாகப் பெற முடியும்
2.அருள் வழி வாழ்வோம் அனைவரும் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

 

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்ணத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது...”

“சாந்தமான நிலை பெற” ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான்… நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

August 2, 2024

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று
1.சர்வ நோய்களும் நீக்கிடும் அருள் ஒளி எங்களுக்குள் பெருகி இருளை அகற்றி
2.எங்கள் பேச்சு மூச்சும் சர்வ நோய்களை நீக்கிடும் அருள் சக்தி பெற்று
3.அனைவரையும் ஆனந்தப்படச் செய்யும் அருள் ஒளி எங்களுக்குள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

வேதனையான உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தால் கண்களில் படும் போது கண் ஒளி மங்கும். உற்றுப் பார்த்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து வரப்படும் போது கிட்னி அந்த விஷத்தின் தன்மையால் பாதிக்கப்படுகின்றது.

விஷம் கலந்த அந்த இரத்தம் இருதய வாயில் செல்லும் பொழுது அங்கே அடைப்புகள் போன்ற துன்பங்களை ஏற்படுத்தும். அந்த விஷம் கலந்த இரத்தம் நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் படரப்படும் போது இந்த விஷத்தின் தன்மையால் அதனை இயக்கும் நல்ல உணர்வுகள் நல்ல அணுக்கள் மடிகின்றது. பின் அதிலே கடும் நோயாக உருவாகும்.

இதைப் போன்ற ஏற்படும் தீமைகளிலிருந்து மீள…
1.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடலில் எங்கே நோவு காணுகின்றதோ
2.“அந்தப் பகுதிக்கு”
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உணர்ச்சிகளை
4.”அங்கே” உந்தச் செய்யுங்கள்… அருள் உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.
5.நஞ்சு கொண்ட அந்த உணர்வின் தன்மையை ஒடுங்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் உணர்வை உங்கள் உடலில் பரவச் செய்து… தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யுங்கள்.

துருவன் காட்டிற்குள் செல்லும் பொழுது “அவனைக் கண்டு” மற்ற கொடூர உணர்வுகளும் மிருகங்களும் விஷம் கொண்ட விஷ ஜெந்துக்களும்
1.அதனுடைய விஷத்தை முறித்து எப்படிப் பதும்பி இருந்ததோ இதைப்போல
2.அந்தத் துருவனின் உணர்வுகளை துருவ மகரிஷியான உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.”அகஸ்தியன்… துருவன்… துருவ நட்சத்திரம்…” என்ற இந்த மூன்றையும் உங்கள் உணர்வுக்குள் கலக்கச் செய்து
4.உங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்யுங்கள்.

அப்போது…
1.ஒடுங்கும் தன்மை கொண்டு “உங்களிடம் அடங்கி”
2.உங்களில் மன மகிழ்ச்சியை ஓங்கச் செய்யும்
3.அருள் ஒளியின் உணர்வின் தன்மை பெறச் செய்யும்… அருளானந்தம் பெறச் செய்யும்.

ஆகவே… அருள் ஞானத்தை வளர்த்திடும் அந்த அருள் ஞானத்தைப் பெற அகஸ்தியனுடைய உணர்வுகளையும் துருவனின் உணர்வுகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தில்
1.எங்கே வலி என்ற உணர்ச்சிகளை உந்துகின்றதோ
2.”அவ்விடத்தில்” அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.

அந்த வலியைத் தணியச் செய்யுங்கள் இருளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தால் உங்களை அறியாது எண்ணத்தால் நுகர்ந்த உணர்வுகள்… நஞ்சின் உணர்வு கொண்டு… உடலுக்குள் தேங்கியிருக்கும் இடத்தில் வேதனையக் கொடுக்கும்.

அதே எண்ணத்தால்… உங்கள் உடலில் எங்கே நோவு வருகின்றதோ அந்த இடத்திலே அகஸ்தியன் துருவன் துருவ நட்சத்திரம் என்ற இந்த மூன்று உணர்வுகளையும் உங்கள் நினவாற்றல் கொண்டு பாய்ச்சுங்கள்.

அதனுடைய வீரியத்தைத் தணித்துப் பழகுங்கள்…! அருள் ஒளியைப் பெருக்குங்கள். இப்போது உங்கள் உடலில் அருள் ஒளி படர்ந்து
1.உடலில் எத்தகைய பிணி இருக்கின்றதோ அது ஒடுங்கும்…
2.ஒடுங்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்… அதை ஒடுக்கச் செய்யுங்கள்

அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்து அதை ஒடுங்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்…!

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”

 

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்…
1.மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே…
2.தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

August 1, 2024

உதயம்

உதயம்

 

உயிரின் உண்மை நிலை எங்கிருக்கின்றது...? உயிரின் துடிப்பு துடிப்பதற்குச் சுவாச நிலை வேண்டுமப்பா. உயிர் எப்படிச் சுவாச நிலையில் உள்ளதோ அந்தத் தன்மைதான் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும்.
1.”நட்ட கல் பேசுமோ.. நாதன் உள் இருக்கையில்...!” என்று படித்திருந்தாலும்
2.அக்கல்லுக்கும் மண்ணிற்கும் உயிர்த் துடிப்பு உள்ளது.

எப்படி மனிதன் சுவாசத்தில் உயிர்த் துடிப்பு உள்ளதோ அதுபோல்தான் மண்ணிற்கும் கல்லிற்கும் மடுவிற்கும் மலைக்கும் பூமியில் இருந்து எடுத்திடும் திரவத் தன்மையில் உள்ள நீர் மற்ற திரவங்களுக்கும் உலோகங்களுக்கும் எல்லா இயற்கைத் தன்மையுள்ள மரம் செடி ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே உயிர்த் துடிப்பு உள்ளதப்பா.

அடுப்பு எரிந்து ஆவி செல்லும் பொழுது அந்நிலையிலும் உயிர்த் துடிப்பு உள்ளதப்பா. உயிர்த் துடிப்பு என்பது ஜீவ அணுக்கள்தான்.
1.அவ்வணுக்களின் தன்மையிலே சூரியனின் ஒளியை ஈர்த்து
2.இயற்கைத் தன்மையினால் வந்த எல்லாமே
3.மனிதன் எப்படிச் சுவாச நிலையை இழுத்து விடுகின்றானோ
4.அந்நிலையில்தான் எல்லாமே சுவாச நிலையில் உள்ளதப்பா.

உலோகங்களின் தன்மையெல்லாம் எந்நிலையில் வந்ததப்பா...?

மண்ணில் இருந்து காந்தத்தையும் செம்பு வெள்ளி என்ற பதம் பிரித்தும் நிலக்கரியையும் எப்படி எடுக்கின்றான்..? நிலக்கரிக்கு இவன் சொல்லும் காரணங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலத்துடன் படிந்த (மடிந்த) மரங்கள்தான் நிலக்கரி ஆகிவிட்டது என்று.

அந்த நிலை இல்லையப்பா...!

அந்நிலையில் உள்ள மண்ணின் உயிரணுவின் ஈர்ப்புத் தன்மையினால் அச்சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மண்ணில் தாக்கும் பொழுது அந்நிலையில் உள்ள உயிரணுக்களை அம்மண் ஈர்க்கின்றது.

பல கோடி ஆண்டுகளாக ஈர்த்ததன் விளைவால் நிலக்கரிப் படிவங்கள் அந்நிலையில் உள்ளதப்பா. அப்படிவங்கள் தன்மையில் இயற்கை அப்படியே இருந்து விட்டால் அந்நிலையில் அப்படியே இருந்தால்
1.அந்நிலையில் வளரும் மண் வளங்கள் தாவரங்களின் நிலையில் பெரும் பூரிப்பை அடைந்திருக்கலாம்.
2.அங்கே வளரும் பயிர்கள் பெரும் அமிழ்தமாக இருந்திருக்கும்.

இயற்கையின் தன்மையை உணர்ந்திடாமல் இச்செயற்கை ஆவலின் உந்தலில் மனிதன் வைத்த வினையப்பா... “சுரங்கம் வெட்டுவதெல்லாம்...!”

உன் அறிவிற்கே விடுகின்றேன். இப்பொழுது நிலக்கரி எடுக்கும் இடத்தில் எல்லாம் தாவரங்கள் நிலை அன்று எப்படி இருந்தது...? என்று எண்ணிப்பார்...! நெய்வேலியில் விளைந்த பழங்கள் பலா முந்திரி ருசியின் தன்மை அன்று எப்படி இருந்தது...! இன்று எப்படி உள்ளது...?

சோலைவனத்தை அழிக்கின்றான். பூமியில் உள்ள உலோகத்தை எல்லாம் தோண்டி எடுக்கின்றான்.
1.அவ்வுலோகத்தின் தன்மையிலே மின்சாரம் எடுத்து பூமியைச் சோலையாக்குகின்றானாம்.
2.சுற்றுகின்றான் பார்த்தாயா...... உலகம் போலவே மனிதனும்...!

உலோகத் தன்மையெல்லாம் அந்தந்த இடத்திற்குத் தகுந்த மண் சுவையில் படிவதுதான். தங்கச் சுரங்கம் என்கிறான்.
1.அந்தத் தங்கச் சுரங்கம் உள்ள பூமியில் வளரும் பயிர் அதனுடைய ருசியில்தான் இருந்திடும்.
2.இப்பூமியின் தன்மையிலே இம்மனிதனுக்கு அறிவில் வராத பொக்கிஷங்கள் பல உள்ளன.
3.அப்படிவங்கள் உள்ள நிலையில் தான் அந்நிலையில் வளரும் பயிர்களும் அதனுடைய ருசியும்...! சொல்வது அர்த்தமாகின்றதா...?

மனிதன் சொல்கின்றான் அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலை என்று...! அது அல்ல...! இந்த மெய் ஞானப் பாடத்தின் தொடரைச் சிறிதளவு புகட்டிவிட்டால்
1.உன் உதய எண்ணம் அதில் எப்படிச் செல்கின்றது...?
2.அந்நிலையையே ஈர்த்துக் கொள்...! “உதயம்...” கிடைத்து விட்டால் உண்மை நிலை எல்லாம் புரிந்துவிடும்.

ஆகவே தியானம் எடுப்பதெல்லாம் உன்னுள் இருக்கும் அணு உன்னுள் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது உன் நிலையில் கவன ஈர்ப்பு மண்டலத்தின் (புருவ மத்தியில்) தன்மையில் பாய்கிறது.
1.உன் சுவாச நிலையை அங்கே ஒரு நிலைப்படுத்திடும் போது
2.அந்நிலையில் நீ எண்ணும் எண்ணத்திற்கு உதயம் கிடைத்துவிடுகின்றது.
3.உன் வழியில் உண்மை நிலைகள் உணரும் தன்மை உன் உயிரணுவிற்கு
4.அவ்வொளியின் கதிர்கள் ஒளிக்கற்றைகள் அதீதமாகப் பாய்கின்றது.

தியான நிலையின் முறை புரிந்ததா...?

ஒருநிலைப்படுத்தி உன்னுள் இருக்கும் எண்ணத்தில் ஒன்றல்ல இரண்டல்ல உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எப்படி வருகின்றது…?

சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல்லு பார்க்கலாம்…!

அந்த எண்ணம் உன் எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து தான் மிக முக்கியமான பாடத்தில் வந்து நிறுத்தி இருக்கின்றேன் “உன் உதயத்திற்கு…”

சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள்… நாம் வெளிவிடும் சுவாசத்தைக் கொண்டு தான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.

அவ்வேலை செய்யும் போது நீ விடும் சுவாசம் உன்னைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம் தேதி இருந்த ஆட்கள் எல்லாம் நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் உள்ள அழுத்தத்தில் தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்
2.உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியும் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளே நான் சுற்றிக் கொண்டே இருக்கிறது… உன் எண்ண அலைகள்.

நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது இப்பொழுது இருக்கும் பிறவி கொண்டு தான் என்று. இல்லையப்பா… உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாமே உன்னைச் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

இப்பிறவி மட்டும்தான் இப்பிறவி அணுக்களுடன் கலந்திருப்பதால் இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன. உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.

1.இந்த ஜெப அலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில்
2.உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம்…! பாட நிலை புரிந்ததா…?

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

 

உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்துங்கள்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அக்காலத்தில் சென்ற
2.அனைவரது அருள் உணர்வுகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது.
3.உங்களுக்குள் இருக்கும் முப்பத்து முக்கோடி அணுக்கள்… அதன் முழுமைகளை… அதனதன் இயக்கமாக இருக்கும் நிலையை
4.அவர்கள் அருள் ஒளிச் சுடராக மாற்றிய அருள் ஒளியின் தன்மையை
5.முப்பத்து முக்கோடி அணுக்களின் திறன்களையும் “ஒளியின் உணர்வாக மாற்றிட்ட அந்த அருள் ஒளியை”
6.உங்களுக்குள் அருள் ஒளி பெறும் அணுக்களாக மாற்றும் நிலையாக சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வினை ஒன்றிடச் செய்யுங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்ந்திட ஓர் இருப்பிடமாக இதனை நாம் செயல்படுத்துவோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
1.எங்கள் உடலில் உள்ள சர்வ அணுக்களும் அருள் ஒளியைச் சிருஷ்டிக்கும் அருள் ஞானம் பெற்று
2.ஒளியின் உணர்வாக உருவாக்கும் அணுக்களாக மாற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் அருள் ஒளிச் சுடராக… எங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளியின் உணர்வாக உருப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் உடலில் இருக்கும் பொழுது நான்
2.அதுவே ஒளியின் உணர்வாக நமக்குள் நானாக மாற்றுதல் வேண்டும்.
3.உயிர் நானாகின்றது… இப்போது உணர்வை நானாக… “இரண்டையும் கலந்து நானாவதே நான்…”

நான் என்ற நிலைகள் வரும் போது “உயிருடன் ஒன்றினால்” உணர்வை ஒளியாக மாற்றிடும் பிரம்மத்தை அடைகின்றோம் எதனையுமே மாற்றி அமைக்கும் நிலையை நமது உயிரின் தன்மை பிரம்மத்தின் நிலையை அடைவதே அது.

எதை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ… இந்த உணர்வை நம் உயிர் உருவாக்கி ஒளியின் அணுவாக மாற்றிவிடும். ஆகவே
1.உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.பிறவியில்லா நிலை என்னும் ஒளிச் சரீரமாக உயிர் உருவாக்கிவிடும்.

இந்தச் சூரியன் அழிந்தாலும் நமது உயிர் அழிவதில்லை… ஒளியின் உணர்வாக வானுலகில் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றது.

பல சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும் உயிர் மனிதனான பின் ஒளியின் உணர்வாக மாற்றி விட்டால் எதனின்றும் அழிவதில்லை. எதற்கும் அடிமையாவதில்லை.

அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அத்தகைய உயிரின் நிலை அடைகின்றது (நாம் ஆகின்றோம்).

July 31, 2024

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்

 

நமது வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் படுவோரைப் பார்த்து நம் நல்ல குணங்கள் கொண்டு அவர்களுக்கு உதவி செய்தாலும் நம் நல்ல குணங்களை அந்த விஷம் என்ற குணங்கள் திரை மறைவாக்கி விடுகின்றது. பின் வேதனை என்ற உணர்வு தான் நமக்குள் வருகின்றது

உதாரணமாக நல்ல பலகாரத்தைச் செய்து வைத்திருக்கின்றோம் என்றால்
1.அதன் மேலே மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டால் அந்த வாசனை தான் வரும்.
2.அதிலே விஷத்தைத் தூவி விட்டால் அது தான் இயக்கம் ஆகும்.
3.ஆனால் பலகாரத்தின் மீது நல்ல நறுமணங்களைப் போட்டால் நறுமணத்தின் தன்மை தான் வரும்

ஆனால் சுவைக்கும் போது தான் வித்தியாசங்கள் தெரிய வரும்.

அதைப் போன்று தான் மேலெழும் மணங்கள் நம் உடலின் அணுக்களில் படும் பொழுது
1.அந்த மேலெழுந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
2.அது சிறு திரையாக மறைத்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைத்தான் சித்திரை என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இப்படி மூடி மறைக்கும் அத்தகைய சிறு திரைகளை நீக்கி
1.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் தூய்மையாக்கிப் பொருளை அறியும் ஞானங்கள் பெற்று
2,எல்லாவற்றையும் அறிந்திடும் அறிவின் ஒளியாக நாம் மாற்ற வேண்டும்.

நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பேரின்பமும்… பெரு வாழ்வு பெறும் அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்கும் நிலையாக… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்று
1.நமக்குள் தீய குணங்கள் தூண்டப்படும் போது நல்ல குணங்களை மறைக்கச் செய்யும் அந்தச் சிறு திரைகளை நீக்கி
2.அருள் மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளிச் சுடராகப் பெருக்கி
3.என்றும் பேரின்பப் பெருவாழ்வு பெறும் அந்தத் தகுதியை நாம் பெறுவோம்.

அதற்காக வேண்டி… ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அருள் சக்திகளைப் பெருக்கி
1.ஒவ்வொருவரும் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக மாறுதல் வேண்டும்.
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை உருவாக்கும் ரிஷிகளாக மாற வேண்டும்.
3.நமது குருநாதர் அனைத்து அண்டங்களையும் அறியும் தகுதிகளை நமக்கு ஏற்படுத்துகின்றார்.
4.அவர் காட்டும் வழியில் அதனை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

ஆகவே… பிறவியில்லா நிலைபெறும் எல்லையைக் குறியாக வைத்து இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை அகற்றிவிட்டு அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கிப் பேரின்பம் பெறும் அருள் ஞானிகளாக வளருங்கள் வாழுங்கள்.

உங்களுடைய பார்வையில் பிறருடைய தீமைகளை அகற்றும் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்
1.உங்கள் பார்வையில் தீமை உங்களை நாடாது அருள் பாதுகாப்பு என்ற உணர்வின் வலிமையைப் பெறுங்கள்.
2.வலிமை பெற்ற அருள் ஞானிகள் உணர்வை உங்கள் உடலுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருள் வழி வாழ்வோம்… மெய் வழி வாழ்வோம்… மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

 

கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள் தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள்.

இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறிதொரு உலகம் வந்திடுமப்பா. அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. இவ்வுலகிற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது. மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன.

அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம்.
1.இந்நிலையில் உள்ள அற்ப ஆசைகளை மறந்து பெருநிலை ஏய்திடப்பார்.
2.வாழ்ந்து என்ன பயன்…? வாழ்ந்து என்ன பயன்…? என்கின்றார்கள்… வாழ்ந்த பயனை எல்லாம் கல்கியில் கண்டிடலாம்.

பெருநிலையை எய்திடவே பெருநிலையை எய்திடவே என்ற எண்ணம் புரியாத மனிதர்கள் வாழும் வாழ்க்கை இது.

பெருநிலை எய்திடு என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்கள் எல்லோரும் பெருநிலை எய்திk கலகிக்கு வருபவர்களே.
1.எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலம் காலமாகத் தவம் இருந்த தவசிகளும்
2.பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள்… அவர்களுடன் கலந்துவிடலாம்.

இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்தி விட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம்… பல கோடித் தேவாதி தேவர்களுடன். பாட நிலை புரிந்ததா...?

விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால்
1.நினைவின் எண்ணத்தினால் வருவது தான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?
2.விக்கலுக்கு மருந்து இல்லை… எண்ணும் எண்ணத்திற்கும் மருந்து இல்லை… விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
3.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வண்ணம்.
4.ஜெபநிலையில் மனநிலையைக் கலந்திடப்பா உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன…? என்று.

இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள் அறிவு நிலையும் ஆயுள் நிலையும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள். அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் மனிதன்.

அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் வந்தது என்று… இல்லையப்பா எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை. ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.

மனித உடலில் ஆசை உள்ளவன்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை. அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான். அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது

1.எண்ணத்தைக் குறுக்கிட்டு… வாழ்ந்து என்ன பயன்…? இருந்து என்ன புண்ணியம் வரும்…? என்று
2.வரும் வியாதியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலே சுருங்கி விடுகின்றான்
3.அவன் உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளே சுருங்கி விடுகின்றன.

ஆயுள் முடிந்து இறக்கின்றான் என்பது அல்ல. அவனின் “எண்ணம் சுருங்கி… மனம் சுருங்கி… பெரும் பயத்தில் உள்ளவனிடம்… “சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் ஆவியின் நிலை…”

வாழ்ந்திட வேண்டும் என்று ஆசை உள்ளவன் வாழுகின்றான் பல நாட்கள்.
1.உயிர் பிரிவது எல்லாம் காலன் (எமன்) பிரித்துச் செல்வதல்ல
2.இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.
3.அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே… “தன் உயிர் பிரிந்து விடும்” என்ற பயத்திலேயே பிரிந்து செல்வது தான் அவ்வாவி.

எந்நிலையில் உள்ளவனும்… “வாழ வேண்டும்” என்று ஆசை இருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஒருநிலைப்படுத்தி வேண்டுபவனெல்லாம் வாழ்கின்றான். மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.

பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவன் இட்ட பிச்சை என்கின்றோம். இயற்கை என்கின்றோம். எதுவப்பா பிச்சை எதுவப்பா இயற்கை…?

அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். இன்றைய ஜீவாதாரத்தின் பாடங்கள் புரிந்ததா…?

பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா…? தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான் மனிதன்.

ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபமெல்லாம் ஜெபித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓம் என்ற நாதத்தில்
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் ஓம் ஈஸ்வரா
ஜெபித்த நிலையில் நீ வந்து ஜெபமாக்கித் தந்திடுவாய்.

July 30, 2024

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

 

அகஸ்தியன் என்று கூறும் அந்தச் சிசு தாய் கருவிலே இருக்கப்படும் போது… தாய் தந்தையர் அவர் உடலில் அரைத்துப் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை மூலிகைகள் தாவரங்கள் மணங்களின் அந்த முலாம்களை நுகர நேர்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் அது கருவிலே இணைகின்றது
2.இணைந்து நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது

இப்படிப் பத்து மாதங்களும் பெற்றுப் பிறந்த குழந்தைதான் பிறந்த பின் சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்கின்றது. சூரியனைப் பார்த்தால் நமக்கெல்லாம் கண் கூசுகின்றது
1.ஆனால் மோதலில் ஒளிப் பிளம்புகள் வெளி வருவதை இவன் உற்றுப் பார்த்து
2.அந்த உணர்வின் தன்மையைக் கண்டு சிரிக்கின்றான்… மகிழ்கின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தையும்… அதன் தொடர் அலைவரிசைகள் எங்கே செல்கின்றது என்பதை இளமைப் பருவத்தில் அவன் உணர்கின்றான் மகிழ்கின்றான்…! இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நிலை இல்லை.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும்… அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரம் மோதுண்டு மத்தாப்பைப் போல் பொறியலைகள் மாறுவதும்… ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும்… இதைப் போன்று வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.

1.விஷத்தை அடக்கி அந்த உணர்வின் இயக்கமாக வரும் பொழுது
2.அவன் நுகரும் உணர்வுகள் அவனது உயிர் இதற்குள் அந்த ஞானத்தின் வழித் தொடராக உருவாக்குகிறது
3.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குள் விளைகின்றது… வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.
4.ஆனால் நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காடுகளுக்குள் சென்றால் மற்ற உயிரினங்கள் மிருகங்கள் விஷ ஜந்துக்கள் எவையும் இவர்கள் அருகில் வருவதில்லை.

ஐந்து வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதும்பி வருவதும்… இவனுக்குப் பின் வருவதும்… இப்படி காட்டுக்கே இவன் ஒரு அரசன் ஆகின்றான்.

அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் பெறுகின்றனர்.

பிற்காலங்களில் துருவனை அரசன் என்று வைத்தார்கள் அதற்குப்பின் அவனுடைய சரித்திரம் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று இருக்கும்
1.ஆனால் அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர
2.அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான்…? என்ற நிலைகள் இல்லை.

ஆகவே புலஸ்தியர் சொன்னார் என்ற காவியங்களில் எடுத்திக் கொண்டால்… ஓர் அரசனுக்கு இரண்டு மனைவிகள்… அவரவர்களுக்குக் குழந்தைகள் உண்டு. அரசனுடன் பழகி இருக்கும் குழந்தையை தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது. இன்னொரு தாயின் மகன் (துருவன்) தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்று வரப்படும் பொழுது இந்த்த் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்… தவம் இருந்தான் என்று உண்மைக்கு மாறாக உண்மையின் இயக்கங்களை அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் உண்மை நிலைகளை நாம் அறிந்திடாது அரசர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு பல நிலைகளைச் சொல்லி காவியங்களைப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம் இராமாயணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

கந்தபுராணம் சிவபுராணம் என்று வந்தாலும் விநாயகன் என்ற நிலைகள் அகஸ்தியன் வணங்கினான் அதனால் அவனுக்குச் சக்தி ஏற்பட்டது அவனிடம் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியாது என்று இப்படி அகஸ்தியன் கதைகளைச் சாற்றி அதனுடைய முழுமையைக் காட்டாதபடி விட்டுவிட்டார்கள்.

1.காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தக்கவாறு வெளிப்படுத்தி
2.நூல்களை படித்தவர்கள் உண்மை நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததைப் பெரிது என்று வாதித்துக் கொண்டிருப்பதும்
3.உண்மை நிலைகள் உணராதபடி இதனைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாக ஜெபிக்கப்பட்டு
4.அதைக் கேட்டுப் பதிவான நிலைகள் கொண்டு அவர்கள் இறந்தால்… இறந்த பின் அதே மந்திர ஒலிகள் கொண்டு
5.அந்த ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகத் தான் வருகின்றது.

அகஸ்தியனைப் பற்றிய உண்மைகள் காலத்தால் இப்படித் தான் திரிபுகள் ஆகிவிட்டது.