ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2026

அதிர்ச்சி அடையச் செய்யும் எத்தகைய செய்தியையும் நாம் பாசத்தால் நுகரக் கூடாது

அதிர்ச்சி அடையச் செய்யும் எத்தகைய செய்தியையும் நாம் பாசத்தால் நுகரக் கூடாது


வேதனை வெறுப்பு என்ற நிலைகளில் தற்கொலை செய்து மடிந்து கொண்டவர்களோ அல்லது இடைமறித்து எதிர்பாராது மடிந்தவர்களோ வளர்ச்சி இல்லாத நிலைகளில் கடும் நோயினால் மடிந்தவர்களோ இவர்களின் உணர்வுகளைப் பாசமாக எண்ணி எடுத்துக் கொண்டால் அதனால் பல தீமைகள் விளைகின்றது.
 
பெண்கள் பாசத்துடன் அதிகமாக நேசிக்கப்படும் பொழுது குறிப்பாக அதுவும் கர்ப்பமாக இருக்கக்கூடியவர்கள் இதை நுகர்ந்து விட்டால்
1.அவர்களுடைய கர்ப்பப்பையில் விஷத்தன்மைகள் அதிகரித்து அது விரிவடையாது
2.தற்கொலையால் இறந்த உணர்வுகள் ரத்தத்தில் கலந்து கருப்பைக்கு வந்தால் முட்டைகள் சீராக வளர்ச்சி அடையாதபடி
3.இடைவெளியிலேயே அழிந்துவிடும் தன் இனத்தை விருத்தி செய்யும் நிலைகள் இழந்து விடுகின்றது.
 
ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும் தாய்… பல உணர்வு கொண்டு மரணம் அடைந்தவர்கள் துர்மரணம் அடைந்தவர்கள் உணர்வுகளை அதிகமாக நுகரப்படும் பொழுது
1.கருக்களில் இது சேர்க்கப்பட்டுத் தன் இனவிருத்தி என்று கருப்பைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்
2.அது முழுமை அடையாதபடி அழிந்து விடும்.
3.த்தகையவர்களுக்குத் தன் இனத்தை விருத்தி செய்யும் தன்மை வருவது மிகக் கடினம் தான்.
 
தையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இது போன்ற அதிர்ச்சி ட்ட கூடிய உணர்வுகளைக் கூடுமானவரை கருவுற்றவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.
 
ஏனென்றால்
1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.
 
ஆகவே வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால் முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும் அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.
 
இதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.