ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2022

சொர்க்கலோகத்தை உருவாக்குங்கள்

உதாரணமாக… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக உடலிலே உருவாகி விட்டால் நாம் எந்த லோகத்தை உருவாக்குகிறோம்…?

இந்திரலோகத்தில் (உடலில் உள்ள இரத்தங்களில்) வேதனை உணர்வுகள் கருவாகி அணுக்களாக வெடித்து அணுவின் மலம் அது சிவமாகிறது (உடல்).
1.ஆக “வேதனையான உணர்வின் செயலாக” இயக்கப்படும் பொழுது சிவலோகத்தில் எமனாக மாறுகின்றது.
2.பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று மனிதனாக வந்த நம் உடலுக்குள் எமலோகமாக மாறுகின்றது.
3.வேதனையால் இந்த உடலின் தன்மை நலிகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் “எந்தக் குணத்தின் வரிசையில் எடுத்தோமோ…” அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை நரக வேதனைப்படச் செய்து இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி சாகாக்கலையாக (அந்த வேதனை உணர்வு கொண்டு) அழைத்துச் செல்கின்றான்…! நம் உயிர்.

எங்கே…?

விஷத்தால் மற்ற உயிரின்ங்களைத் தாக்கி உணவாக உட்கொள்ளும் பாம்பினமாகவோ விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவாக எடுக்கும் தேளினமாகவோ மாற்றிவிடுகிறது.

அடிக்கடி வேதனை என்றோ… வேதனைப்படுபவர்களைப் பார்த்து இரக்கம் ஈகை என்றோ ஏங்கினால் அவர்களின் வேதனை உணர்வு நமக்குள் வளர்ந்து எமலோகமாக மாறுகின்றது.
1.நம் உடலில் உள்ள இந்திரலோகம் (இரத்தநாளங்கள் – இந்திரீகம்) எமலோகமாக மாறி
2.சொர்க்கலோகம் செல்லும் உணர்வைத் தடைப்படுத்திவிடுகிறது.

வேதனையினால் உடல் குறுகி உயிரான்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் எந்த வேதனையை அதிகமாக எண்ணினோமோ அத்தகைய வேதனைப்படும் உடலுக்குள் சென்று விடுகின்றது

அதாவது…
1.விஷத்தை உணவாகப் பாய்ச்சும் அதை உணவாக எடுத்துக் கொள்ளும்
2.அந்த விஷத்தன்மை நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவந்த பின்
3.பாம்பினங்களுக்கோ தேளினங்களுக்கோ… வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் இந்த உடல்களுக்குள் உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று
4.அந்தப் பாசக்கயிறு…! - தொடர்ந்து எந்த வேதனையை எடுத்தோமோ அதன் தொடர் வரிசையில் நாம் சென்று
5.அந்த உடலுக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று நீ எதை எண்ணினாயோ அதுவாகின்றாய் என்ற தீர்ப்பைக் கொடுத்து
6.கண்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும் - பயத்தின் உணர்வு கொண்டு
7.இப்படிச் செய்தான்… செய்தான்.. செய்தான்… என்ற எண்ணத்திலே எண்ணும் பொழுது
8.தனக்குள் எமலோகமாக மாற்றி நரக லோகத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக மொத்தம் வேதனையை வளர்த்துக் கொள்ளப்படும் பொழுது கண்ணன் சாரதியாகச் செல்கின்றான். எப்படி…?

1.எதனை எண்ணி ஏக்கத்தின் நிலைகள் கொண்டோமோ…
2.எந்த விஷத்தின் தன்மை தனக்குள் வலுக்கொண்டதோ….
3.எந்தக் கண் காட்டி நம்மை காத்துக் கொள்ளும் உணர்வை கொடுத்ததோ
4.அதை மறந்து… காத்திடும் நிலைகளை மாற்றி… ஆறாவது அறிவின் தன்மையை இழக்கப்படும் பொழுது
5.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று வேதனைப்படச் செய்யும் உடலுக்குள் சென்று விடுகிறோம்.

பயந்து நாம் ஒடுங்கினாலும்… பின் நாம் எதை எண்ண வேண்டும்…? இதை மாற்றி அமைத்தல் வேண்டும். அச்சுறுத்தும் உணர்வில் இருந்து நாம் மீள வேண்டும். காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்விலிருந்து மீளுகின்றோம்.

எதை வைத்து…?

1.மகரிஷிகளின் அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அருள் ஞானியின் உணர்வுகள் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பரலோகத்தில் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகியுள்ளது. அதைக் கவர்ந்து நம் உயிர் வழி சொர்க்கவாசலாக அமைத்துச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.