ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2022

அகஸ்தியனைப் போன்று நாமும் “அனைத்தையும் ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…”

1.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த பேருண்மைகளைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி

2.உணர்வை இரண்டறக் கலந்து ஒரு அணுவின் தன்மை உருவாக்கி அந்த உணர்வின் தன்மை மாற்றமடைந்து
3.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவன்.

எதை உற்று நோக்கி உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து… எதைப் பெற வேண்டும் என்று தன் உடலிலே உருவாக்கினார்களோ அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி “துருவ நட்சத்திரமாக” இன்றும் உள்ளார்கள்.

சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தைக் கொண்டு புறத்திலிருந்து வரும் விஷத்தைத் தாக்கி அதைப் பிரித்து விடுகிறது. அதனால் தான் அதைப் பிரிக்கப்படும் போது ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது.

எந்த விஷத்தின் தன்மை தனக்குள் மோதுகின்றதோ நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மின்னலாக வருகிறதோ அதைப் போல் பிரித்தபின் ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது… ஒளி அலைகளாக நம் பிரபஞ்சத்திற்குள் மாறுகிறது. இது சூரியனின் இயக்க நிலை.

அதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் விஷத்தின் தன்மைகளைத் தனக்குள் இணைத்து… விஷத்தின் தன்மையைப் பிரித்து விட்டு ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான் அகஸ்தியன்… மனிதனாக ஆன பின் அது முழுமையான கடவுளாகின்றது.
1.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டு
2.என்றும் பதினாறாக பிறவி இல்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டுள்ளான்… வளர்ந்து கொண்டுள்ளான்.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வெளிப்படும் எத்தகைய கடும் நஞ்சாக இருந்தாலும்… அதையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்… ஏகாந்த நிலை கொண்டு வாழ்கின்றான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற அனைவரும் அதே வழியில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும்… இதன் எதிர்காலம்…! நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து மற்ற விஷத்தன்மை அதிகமாகக் கவர்ந்து எடுத்து விட்டால் அதன் உணர்வின் தன்மை (பிரபஞ்சம்) மாற்றம் அடைகின்றது.

ஆனால் மற்ற நட்சத்திர மண்டலங்களின் சக்திகளை எடுத்து
1.நம் பூமிக்குள் பல பொருள்களுடன் சேர்த்து இணைத்துப் பல பொருளாக உருவாக்கும் நிலையும்
2.கதிரியக்கப் பொறிகள் கடலில் பட்ட பின் மணலாக மாறுவதும்
3.அதே சமயம் இந்த கதிரியக்கப் பொறிகளை அடக்கச் செய்யும் அந்த மோதலில்
4.நமக்குண்டான வெப்பத்தை… பூமியில் சமப்படுத்தும் உணர்வின் நிலைகளை உருவாக்கும் தன்மை பெற்றது 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்.

ஒவ்வொரு செடியிலும் இந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் கலவை கலந்துள்ளது.
1.அந்த உணர்வின் பொறிகள் வரப்படும் பொழுதுதான் செடிக்குள் வெப்பமாகி
2.தன் இனம் எதுவோ புவியின் ஈர்ப்பால் தன் இனத்தின் உணர்வை இழுத்துக் கவர்ந்து செடியாக விளைகின்றது.

இது எல்லாம் இயற்கை நியதிகள்…. அன்று அகஸ்தியன் கண்டது.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே…! என்று இதை விட்டு விடாதீர்கள்.

1.எல்லாம் தெரிந்து கொண்டு யாரும் வருவதில்லை… எல்லாம் தெரிந்து கொண்டு நான் இதைச் சொல்ல வரவில்லை
2.குரு காட்டிய உணர்வு கொண்டு தெரிந்து கொண்டேன் அவர் உணர்வைத் தொடர் கொள்கின்றேன்
3.எனக்குள் இருளை அகற்றும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றேன்
4.உங்கள் செவிகளில் படுகின்றது… அதை நுகர்கின்றீர்கள்… உங்கள் இரத்தங்களிலே கலக்கின்றது
5.மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அகஸ்தியன் கண்டதை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்
6.அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடையலாம்.