ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2022

அகஸ்தியனின் ஒளியான உணர்வை எடுத்து… அதை வைத்துத் தான் நாம் எதையுமே அறியும் ஆற்றலாகக் கொண்டு வர வேண்டும்

ஒரு மனிதனைப் பார்த்தால் அதனின் உணர்வு நமக்குள் விளைகிறது. எப்படி…?

அந்த மனிதனைப் பற்றி அவர் குணநலன்களைப் பற்றி நம்மிடம் “அவர் மோசமானவர்…” என்று சொல்லி நீங்கள் அதைப் பதிவு செய்தீர்கள் என்றால் அந்த மனிதனைப் பார்த்தவுடனே அன்றைக்கு அவர் சொன்னார் ஆனால் அவருக்கு மோசம் ஆக இருப்பார்.

ஆனால் அவர் சொல்லி விட்டால் என்றால் நாம் பார்த்து மோசமானவர் என்று எண்ணியவுடனே அவர் என்ன பதில் சொன்னாலும் அவரைக் குற்றவாளியாக்கக்கூடிய பதில் தான் வரும்.

1.அன்று மோசம் என்று அவர் சொன்னார்…
2.ஆனால் இன்று வந்து நல்லவன் என்று சொல்கிறார் என்று சொல்லப்படும் போது வித்தியாசம்…!
3.முதலில் சொன்னவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டு அதற்குப் பின்
4.இரண்டாவது அவரைப் பற்றித் தெரியப்படும் போது இதை வைத்துத் தான் அளந்து பார்ப்போம்.

இதை நாம் மாற்றுவதற்கு…
1.மனிதனில் முதலில் ஒளியாகப் பெற்ற அகஸ்தியனின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.அவன் ஒளியான உணர்வை நமக்குள் வளர்க்கப்படும் போது
3.அவர்கள் ஏன் தவறு செய்தார்கள்…? தவறான கருத்தை ஏன் சொல்கிறார்கள்…? என்ற உண்மைகளை எல்லாம் தெளிவாக உணர முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

ஆனால் அவர்களிடம் நாம் நேரடியாகச் சொல்ல வேண்டியதில்லை.
நாம் போய்ச் சொன்னால்
1.இவன் பெரிய யோக்கியன்… என்று நம்மிடம் சண்டைக்கு வருவார்கள்.
2.இன்னும் கொஞ்சம் மனதைக் கெடுக்கும்.

ஆகவே நமக்கு அதிகம் அறிமுகம் ஆகாதவர்களாக இருந்தால்… அவர்களுக்கு உண்மையை உணரும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

காரணம்… அவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டினால் உங்களைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் தவறு செய்யும் நேரத்தில்…
1.அவர்கள் செய்யும் தவறான உணர்வு நமக்குள் விளையாதபடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து அந்தத் தவறை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி… நம்முடைய கடந்த கால வருட அனுபவத்தை வைத்து
1.நம் தொழிலில் எப்படி நஷ்டம் வந்தது…?
2.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றதால் அவனைப் பற்றி எண்ணும் போது திருப்பித் திருப்பி வேதனைப்படும் போது
3.கை கால் குடைச்சல் எப்படி வந்தது…? என்பதையெல்லாம் நாம் தெரிந்து
4.பிறந்திருக்கும் இந்தப் புதிய வருடத்தில் நமக்குள் தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

இது மனிதனால் நிச்சயம் முடியும்.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை தரம் திருப்பித் திருப்பி உங்களிடம் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே நீக்கும் திறன் பெறுகின்றீர்கள்.

அது இல்லை என்றால் மாற்ற முடியாது.

உதாரணமாக… சமைக்கும் போது குழம்பில் தெரியாமல் மிளகாயை அதிகமாகப் போட்டுவிட்டால் “காரம்” என்ற உணர்ச்சி தான் உந்தும். மற்ற பொருளைப் பற்றிச் சொல்ல மாட்டோம்.

அதே போல் உப்பு அதிகமாகி விட்டால் குழம்பு கையிக்கத் தான் செய்யும். “உப்பாக இருக்கிறது” என்று தான் சொல்வோம். குழம்பில் போடப்பட்டுள்ள மற்ற சுவையான பொருளைச் சொல்ல மாட்டோம்.

அது எப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறதோ அதே மாதிரி நம் உணர்வுக்குள் மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும்.

ஆகவே… மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்… கஷ்டப்படுவோர் உடலில் படர வேண்டும்… அவர்கள் தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டியம் (இது முக்கியம்).

1.மிகவும் கஷ்டப்படுவோராக இருந்தாலும் கூட… சொன்னால் சிலர் கேட்க மாட்டார்கள்.
2.அதே சமயத்தில் தெரிந்தவர்களாக இருந்து அவர்களுக்குச் சொன்னாலும்… இவருக்கு எதற்கு இந்த அக்கறை…? என்று நினைப்பார்கள்.
3.இது இப்படியும் வரும்… அப்படியும் வரும்.

அப்போது மனதால் நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.மீண்டும் மீண்டும் இரத்தத்தில் கலந்து
2.அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

இப்படிப் பழகிக் கொண்டால் பிறருடைய நோயைப் பற்றியோ வேதனையைப் பற்றியோ கேட்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாலும் அந்த நோயோ துன்பமோ நமக்குள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.