ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

ஒவ்வொரு வருடமும் நமக்குள் வெறுப்பு கோபம் குரோதம் எல்லாம் விளைந்திருக்கின்றது. அதிலே கோபமான உணர்வு அதிகமாகியிருந்தால் நம் அனுபவத்தில் போன வருடத்தில் நாம் எப்படிக் கோபித்தோம்…? என்று சிந்தித்து இந்த வருடத்தில் நாம் அதை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 என்றால் அந்தக் கணக்கின் பிரகாரம் நம் பூமி 2000 சூரியக் குடும்பத்தைச் சுற்றி வருகிறது. இதே நேரத்தில் போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் பார்த்தால் வேறு ஒரு சூரியப் பிரபஞ்சத்தில் நிற்கும் (சுழன்று வரும் பகுதிகள்).

1.எந்தச் சூரியக் குடும்பத்தைச் சந்திக்கின்றதோ அதன் உணர்வை நம் பிரபஞ்சம் இழுத்துக் கவரும் போது
2.அது நல்ல பிரபஞ்சமாக இருந்தால் நமக்கும் நல்லதாகும்…
3.இல்லை என்றால் அதனதன் நிலைக்கொப்ப மாற்றங்கள் வரும்.

ஆகவே அதற்கொப்ப இந்த வருடத்தில் எப்படித் திருப்பம் ஏற்படுகிறதோ அது இந்த வருடம் முழுமைக்குமே அப்படித் தான் இருக்கும் (60 வருடத்தில் ஒவ்வொன்றிலும்).

அதிலே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வேறு இடத்திற்குப் போகும் போது அதன் உணர்வு மாறும்.
1.மாறும் போது அதற்குத் தக்கவாறு நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
2.இதை மனிதன் ஒருவனால் மாற்ற முடியும்.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தில் நாம் ஒத்து வாழும் போது நமக்குள் மாற்றங்கள் வருகிறது.

இதே மாதிரித் தான் நாம் எத்தனை பேரிடம் பழகுகின்றோமோ அது எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரபஞ்சம் தான். அந்த மனிதரிடத்தில் (பிரபஞ்சத்தில்) கஷ்ட நஷ்டங்களைக் கேட்கப்படும் போது அவருடைய கஷ்டம் எல்லாம் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

அதை மாற்றிடும் நிலையாக
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்தால் நம் உடலில் அது அதிகமாகிறது… கல்கியாகிறது.

வேதனை என்ற உணர்வு அதிகமானால் அது கலியாகிறது. கலியும் கல்கியும் நமக்குள் மாறி மாறி வருகின்றது. ஆனாலும்
1.கல்கி என்ற நிலைக்கு வரப்படும் போது
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.

அதை நாம் பெற்றோம் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றியபின் அதில் உள்ள செம்பு பித்தளை வெள்ளி எல்லாம் ஆவியாகித் தங்கம் எப்படிப் பரிசசுத்தமாகிறதோ அதைப் போல் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்தால் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த அது உதவும்.

இதை நாம் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த வருடத்தில் நாம் எதைத் தூய்மைப்படுத்தாமல் விட்டோம்…? இந்தப் புது வருட்த்தில் எதை எதைச் சந்திக்கின்றோம்…? என்பதை உணர்ந்து அந்தத் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக இருக்கும் அதை நீக்கிவிடலாம். பெரும் திரையாக மாறிவிட்டால் அவைகளை மாற்றுவது சிரமம்.

சித்திரை…! நம் உடலில் ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக (தீமைகள்) வருவதை நாம் நீக்கிக் கொண்டே வர வேண்டும். நீக்கிக் கொண்டு வந்தால் நாம் கலி என்ற நிலைக்கு வந்துவிடுகின்றோம்.
1.கலி முழுமை அடையப்படும் போது கல்கிக்கு வந்துவிடுகின்றோம்.
2.தீமைகளை நீக்கும் உணர்வு கலியாகிக் கொண்டே வரும் போது கல்கியாகவே மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
3.ஆக ஒளி என்ற உணர்வு வரும் போது கல்கியாக மாறுகிறது
4.கல்கி என்ற நிலை ஆனால் உயிருடன் ஒன்றி என்றும் நிலையான நிலை பெறுகின்றோம்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ உபாயங்களைக் காட்டுகின்றார்கள். அதை நாம் பின்பற்றுதல் வேண்டும்.