ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2022

நம் ஆறாவது அறிவை ஞானிகள் காட்டிய வழியில் பயன்படுத்த வேண்டிய முறை

மிளகாய் காரமாக இருக்கிறது என்றால் அந்தக் காரத்தை நாம் வாயிலே சுவைத்துத் தான் ஸ்… ஆ…! என்று உணர்கின்றோம். ஆனால் விஞ்ஞான அறிவோ அந்தக் காரத்தின் நிலையையே மாற்றி அமைத்து அதைச் சுவையான மிளகாயாக உருவாக்குகின்றார்கள்.

எப்படி…?

1.மிளகாயின் காரத்தின் அளவுகோலை அறிந்து… அதனுடைய இயக்கம் எவ்வாறு…? அதனின் வீரியங்கள் எவ்வாறு…? என்று
2.இயந்திரத்தின் மூலம் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற உணர்வின் துணை கொண்டு இயக்கங்களைக் கண்டறிகின்றான் தன் விஞ்ஞான அறிவால்.

மனிதனாக வளர்ச்சி பெற்ற பின் காரத்தைக் குறைப்பதற்கு இப்படிக் கண்டறிகின்றான்.

உதாரணமாக… மிளகாயைச் சட்டியில் போட்டு வறுக்கிறார்கள் அல்லது மிளகாயைப் பொடியாக அரைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் நுகர்ந்தால் என்ன ஆகும்…?

நச்… நச்… என்று தும்ம வேண்டி வரும். கார உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின் “ஒரே நெடியாக இருக்கிறது…” என்று தான் நாம் அறிகின்றோம். காரணம்… அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் நம்மை இயக்கிவிடுகின்றது.

இதைத் தணிப்பதற்காக… மனிதன் இயந்திரத்தினை உருவாக்கி அதனின் உணர்வின் அதிர்வுகளை எலெக்ட்ரான் ஆக மாற்றி அதனின் உணர்வின் செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றார்கள்.

காரம் என்று சொன்னாலும் அதிலே எத்தனையோ வகை உண்டு.

“குடமிளகாய்…” பெரிதாக இருக்கும். அதிலே பல விதமான வாசனைகளும் வரும். ஆனால் காரம் இலேசாக இருக்கும். இது மனிதன் உருவாக்கியது.

தாவர இன வித்திலேயே பல விதமான உணர்வுகளைக் கலந்து செயல்படுத்துகின்றனர். அதாவது… ஒவ்வொரு செடிகளுக்கென்று மரபணுக்கள் உண்டு.

1.காரம்… புளிப்பு… உப்பு… நல்ல நறுமணங்கள்… கொண்ட தாவர இனங்களில் உள்ள மரபணுக்களை எடுத்து
2.அதை ஒரு புது விதமான வித்தாக உருவாக்குகின்றனர்.

எந்தெந்தச் செடிகளில் அந்தச் சுவைகள் தனித் தனியாக வளர்ந்ததோ அதனின் மரபணுக்களை இணைத்து ஒன்றாகக் கூட்டாக அமைக்கப்படும் போது காரத்தின் அளவும் நல்ல நறுமணத்தின் நிலைகளையும் அதே சமயத்தில் அந்த மிளகாயில் சுவையும் கூடுகிறது.

அதை நாம் குழம்பிலோ மற்றதிலோ போடப்படும் போது அதிலே இத்தனை மணங்களும் வருகிறது. ஏனென்றால்
1.பல விதமான செடிகளின் மரபணுக்களிலிருந்து காரத்தை எடுத்து இணைத்து
2.இந்த உணர்வுக்கொப்ப குடமிளகாயை உருவாக்குகின்றார்கள் மனிதன்.

இப்படி நம் சுவைக்காக வேண்டி அதை உருவாக்கி உணவாக உட்கொள்ளும்போது நாம் ரசித்துச் சாப்பிடுகின்றோம். மகிழ்ச்சி பெறும் சக்தியாக “ஆறாவது அறிவு” உருவாக்குகின்றது.

ஆக இந்த உடலை மகிழச் செய்ய விஞ்ஞானம் இப்படித் தாவர இனங்களை உருவாக்கி மகிழச் செய்யும்படி வைக்கின்றது.

ஆனால் மெய் ஞானியோ வாழ்க்கையில் தன்னை அறியாமல் வரும் எத்தனையோ சுவையற்ற நிலைகளை (தீமைகளை) சுவைமிக்கதாக மாற்றிக் கொண்டவர்கள்… முருகு… மாற்றியமைக்கும் சக்தி பெற்றவர்கள்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் இருக்கின்றோம். கஷ்டப்படுகின்றவர்களைப் பற்றிக் கேட்டறிகின்றோம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்பட்டது ஆறாவது அறிவில் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றது.

அப்பொழுது இதைச் சேர்த்தால் வேதனையான எண்ணம்தான் வருகின்றது.
1.வேதனைப்படும்போது யார் காப்பாற்றுவது…?
2.இந்த ஆறாவது அறிவில் கலந்ததைச் சுத்தப்படுத்துவது யார்…?

பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். முருகனைப் பார்க்கப்படும் போது எதை எண்ண வேண்டும்…?

இந்த உண்மையை உணர்த்திய
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று
3.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தன்னைக் காத்திடும் நிலையாகத் துடைக்க வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய. இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் அதைப் வலுப்படுத்தும் சக்தியாக தீமைகள் நம் உடலுக்குள் உருவாகாதபடி பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று செயல்படுகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் விளையாது அந்த ஞானியின் உணர்வை நமக்குள் விளையச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றான். இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உன் உணர்வின் தன்மை ஒளியாக்கு – கார்த்திகேயா…! கார்த்திகேயா என்றால் வெளிச்சம். கெட்டதை நீக்கி நீ இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று ஞானிகள் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தெரியப்படுத்துகின்றர்கள்.

ஆகவே…
1.நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில்
2.உனக்குள் உன்னைக் காப்பாற்றிய நல்ல தெய்வம் இந்த ஆறாவது அறிவு தான்…! என்கின்ற நிலையில்
3.நீ பக்குவப்படுத்திப் பார்…!” என்று ஞானிகள் தெளிவாகவே காட்டியுள்ளார்கள்.