ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 8, 2022

அரசர்கள் உருவாக்கிய மந்திர தந்திரங்களில் உள்ள உண்மையின் நிலைகள்

ஒரு மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வினை எடுத்துப் பிரித்துத் தான் அன்றைய அரசர்கள் பல மந்திர தந்திர வேலைகளைச் செய்தார்கள்.

ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு மந்திரம் என்று உண்டு. அதை மனிதனுக்குள் பதிவாக்கி… அதன் வழி வாழ்ந்து கடைசியில் அந்த மனிதன் இறந்த பின் அதற்கென்ற மந்திர ஒலியை அந்த ஆன்மாவைக் எழுப்பிக் கவர்ந்து கொள்வார்கள்.
1.பின் அதனை வைத்து… கருவின் உணர்வு கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இதைச் செய்து வா… உனக்கு இப்படி இருக்கும்…
3.உன்னைப் பாதுகாக்கும்…! என்று சொல்வார்கள்.

இப்படி இன்னொரு ஆவியின் தன்மை கொண்டு மற்றவரை அடக்கலாம்… இதை அடக்கவும் செய்கின்றான். மற்ற நினைவுகள் வராதபடி சில செயல்களைச் செய்தாலும்
1.ஒரு மனிதனின் உணர்வை மந்திர ஒலி கொண்டு எடுத்துப் பிரித்துக் கொண்ட நிலைகள் சிறிது காலம் வேலை செய்யும்.
2.மீண்டும் பகைமை உணர்வினை உருவாக்கி… நோயை உருவாக்கி… அந்த உடலினை (புகுந்த) வீழ்த்திவிடும்.

ஆதியில் உருவாக்கிய உடலில் உருவான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்ததனால்… உடலைக் கருக்கி அந்த உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து கொண்டதும்… மற்ற கலவை கொண்டு மற்ற கருவுக்குள் இது செலுத்தப்பட்டு
1.அவன் பிரித்தெடுத்துச் செயல்படும் சில நிலைகள் தான்
2.இன்று மந்திரம் என்று சொல்லி வசியப்படுத்துவதும்…
3.ஒன்றை அடக்குவது என்றும் மனிதன் இத்தகைய நிலைகளில் செயல்பட்டான்.

இவர்கள் மற்றதைக் கொன்றது போல் இந்த உணர்வின் தன்மை இது இணைந்தாலும்… மீண்டும் பிரிந்திடும் நிலைகள் கொண்டு… தன் உடலிலே அந்த நோயின் தன்மை கொண்டு இது பிரித்துவிடும்.
1.ஆக ஒன்று சேர்ந்தனர்… இணைந்தனர்
2.நோயாக ஆனது… பிரிந்து விட்டது என்று.

ஆனால் மந்திரத்தின் தன்மையினால் இறந்த பின் அதே மந்திரவாதி மீண்டும் எண்ணினால்… பிரிந்து வெளி வந்த ஆன்மாவை அவன் தனக்குள் கைவல்யப்படுத்திக் கொள்வான்.

இதை வைத்துப் பல வேலைகளையும் பல அற்புதங்களையும் அவன் செய்வான். “ஆண்டவன் ஆட்சி…” என்ற நிலைகளிலும் அதைக் கொண்டு வருவார்கள்.

இதைப் போன்ற நிலைகள் என்ன…? என்று அறியாதபடி நாம் அத்தகைய மந்திரவாதியிடம் சென்றால் நம் ஆன்மாவும் கைவல்யமாகும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

அப்படிச் சேர்த்திடும் உணர்வு கொண்டு மனிதர்களுக்குள் செயல்படுத்தினான் என்றால்… இது ஒவ்வொன்றும் நோயின் தன்மையாக உருவாக்கி இதைப் பிரித்துவிடும்.

பிரிந்து விட்டாலும் மீண்டும் மந்திரவாதி கையில் சிக்கி இதைக் கொண்டு இது இணை சேர்த்தது… இணை சேர்த்தது… இணை சேர்த்தது… இணை சேர்த்தது… என்ற நிலைகளில் சில நிலைகள் உருவாக்கப்படும் போது அதர்வண வேதத்தில்… (அரசர்கள் பிரித்துக் கொண்டது)
1.ஒன்றை ஒன்று அதிகப்படுத்தி அதனின் உணர்வின் தன்மை அடிமையாக்கி
2.அதன் உணர்வின் தன்மை தனக்குள் எப்படிச் செயலாக்குகிறது என்றும்
3.ஒன்றை அதிகப்படுத்தி அதை வசியம் என்றும்… அதனைக் கொண்டு கவர்ந்து இழுப்பதற்கும்
4.இறந்த பின் மீண்டும் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம் என்றும்
5.தன்னுடைய இயக்கத்திற்காக வரும் நிலையாக அவர்கள் செயல்படுத்தும் நிலைகள் தான் அது எல்லாம்.

மந்திரங்களும் மாயங்களும் எடுத்து அதர்வண வேதத்தின் தன்மை கொண்டு தன் எண்ணத்தை நிலைப்படுத்தி அரசு என்ற நிலைகள் கொண்டு அந்த அரசர்களாள் உருவாக்கப்பட்ட மதத்தின் அடிப்படையிலே அந்த இயக்க நிலைகளில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஆனால் இதை எல்லாம் வென்றவன்… புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவப் பகுதியை உற்று நோக்கி அதன் ஆற்றல் கொண்டு
1.நஞ்சினை வென்றிடும் உணர்வை இந்தப் பூமியில் வாழும் காலத்தில் பெற்றவன்.
2.புவிக்குள் வரும் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக உருமாற்றிக் கொண்டவன்.
3.இப்படி உருமாற்றிய அவனின் நிலைகளிலிருந்து நாமும் அவன் பெற்ற ஆற்றல்களைப் பெற வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள். பதிவு செய்தால் அதனின் ஞானத் தொடர்களை நீங்கள் நிச்சயம் பெற முடியும்.