ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 8, 2022

இங்கொன்றும் அங்கொன்றுமாக உபதேசத் துணுக்குகளை யாம் கொடுப்பதன் நோக்கம்

யாம் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் பொழுது சிலதுகளை விளங்காமல் சொல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் உண்டு.
1.சிலருக்குக் கிடைக்காமல் செய்வதற்கும்
2.பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் தெரிந்து கொள்வதற்கும் இது உதவும்.

ஏனென்றால் உபதேச வாயிலாக பேருண்மைகளைச் சொன்னாலும் சில மாயாஜாலங்கள் உள்ளவர்கள் இதை எடுத்து
1.அதிலிருக்கும் உள் மூலக்கூறைத் தெரிந்திடாது
2.விஷம் கலந்த உணர்வு கொண்டு அவன் இச்சைக்கே அதைக் கவர்ந்து விடுவான்.

ஆக இந்த உண்மையின் தன்மை செயல்படும் பொழுது அங்கே அவனுக்குப் பயனற்றதாகும் ஆகும். அவன் மக்களை வசியப்படுத்த சொற்றொடரில் இது உதவும். அதைப் போன்ற தீமைகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்குதான் அவ்வாறு செய்வது.

ஆனால் அதே சமயத்தில்
1.உங்களுடன் தொடர்பு கொண்ட நிலையில்… உங்களுக்குள் பதிவாக்கும் இதனின் விளக்கம்
2.அடுத்த உபதேச நிலைகள் வரப்படும் பொழுது இணைத்து
3.அந்த உண்மைப் பொருளின் உணர்வை நீங்கள் அறிந்து
4.உங்கள் வாழ்க்கையில் தெளிவாக்கிக் கொள்ள முடியும்.

எம்முடைய உபதேசப் கருத்துக்களைப் புத்தக வாயிலாக வெளிப்படுத்தினாலும் மற்றவர்கள் இதைக் கலவையாக்கி மனித வாழ்க்கைக்குத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் உணர்வுகள் பதிவு செய்யும் எண்ணமும் இல்லை.

அவருடைய ஆசை கொண்டு…
1.இதை எடுத்து இப்படிச் செய்தால் தனக்குச் செல்வம் வரும்… செல்வாக்கு வரும்… என்று நிலைகள் வரப்படும் பொழுது
2.அந்த ஆசையின் உணர்வு வந்து உண்மையின் தன்மை பெறாதபடி ஆகி
3.யாம் கூறிய ஞானத்தின் உணர்வுகளும் நாளடைவில் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் மாற்றுவதற்குத் தான்
1.இங்கொன்றும் அங்கொன்றும் தொட்டு உங்களுக்குள் இதைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அடுத்த உணர்வுடன் இணைந்து தெளிந்த மனம் பெற்றிடும் அந்த நிலையை உருவாக்கிடத் தான்

இப்போது ஒன்றைச் சொல்கிறேன் என்றாலும்… இதனுடன் இணை சேர்த்த நிலைகள்… அடுத்த அறிவின் தன்மை தொடர் வரும் பொழுது உங்களுடன் இணைத்து… அந்த ஞானத்தைப் பெற்று எத்தகைய தீமையில் இருந்தும் நீங்கள் விடுபட முடியும்

விஷத்தினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் எல்லாவற்றிலும் கலந்து கலந்து… உபதேசங்களை அந்தந்தக் காலப் பருவத்தில் கொடுக்கின்றோம்.

அதற்குண்டான விளக்கங்களைத் தான் இங்கே வெளிப்படுத்திக் காட்டுகின்றோம் (ஞானகுரு).