ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடுத்தவர்களுக்குப் பாய்ச்சும் முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அனுதினமும் துருவ தியானம் எடுக்கின்றோம்.

நாம் எடுத்து வளர்த்த பின் உடல் நலம் இல்லாதவர்களுக்கு அல்லது வேதனைப்படுவோருக்கு எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வளர்த்து விளைய வைத்த ஞான வித்தை அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லப்படும் போது
1.கேட்டவுடனே அவர்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் விளைகின்றது.
2.அவர்கள் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
3.இதன் வலிமையான பின் நோயின் தன்மையான அந்த உடல்களில் நடுக்கமாவதையும் பார்க்கலாம்.
4.இது இரத்தத்தில் கலந்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களுக்குள் ஊட்டும்.
5.உடலுக்குள் சென்று அந்த நோயின் வீரியத்தைத் தணிக்கும்… வேதனைகளை அடக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒரு நோயாளியையோ ஒரு தரக்குறைவாகப் பேசக்கூடியவர்கள் உணர்வையோ நுகர்ந்தால் உங்களுக்குள் பதட்டமாகிறது அல்லவா…! நுகர்ந்த பின் உடலுக்குள் எத்தனை வேகத்தை உண்டாக்குகிறது…?

அதே போல் தான் தீமையைக் கண்ட பின் ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் நாம் செலுத்த வேண்டும்.

இது வலுவான பிற்பாடு…
1.அந்தத் தீமைகளைத் தள்ளி விட்டுவிடுகிறது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு முன்னணியில் வந்துவிடுகிறது.

ஆகவே… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல் நலமாக வேண்டும் என்று சொல்லி இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி வளர்த்துக் கொண்ட ஞான வித்தை இதே உணர்ச்சி கொண்டு அடுத்தவர்களுக்குச் சொல்லும் போது செவிகளில் பட்டபின் இந்த உணர்வுகள் அங்கே உந்தப்பட்டு அவர்கள் தீமைகளை நீக்க உதவும்.

1.நாமும் உடல் நலம் பெறுகின்றோம்… மற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்து
2.அவர்களையும் உடல் நலம் பெறச் செய்கிறோம்.