ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 23, 2022

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்ற பின் நஞ்சினை மாற்றும் உடலின் அமைப்பு வருகிறது.

பன்றியின் உடலாக இருக்கும் போது நஞ்சை நீக்கும் உணர்வுகள் பெற்று… நல்ல மணத்தை நுகர வேண்டும் என்று பட்டது. அதன் உணர்வின் தன்மை வரும் போது கலியாகி மனிதனாக மாற்றியுள்ளது.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வு பெற்று மனிதனாக ஆன வலிமை கொண்டு
1.இன்று விஞ்ஞானியோ அல்லது வைத்தியரோ
2.இதைக் காட்டிலும் வலுவான உணர்வு கொண்டு விஷத்தை மாற்றுகின்றனர்.

“சாம வேதம்…” என்று சொன்னாலும் வேப்ப மரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் சாம. அதாவது…
1.வேம்பின் மணத்தை நாம் நுகரப்படும் போது ஓ…ய்… என்ற சப்தத்துடன் உமட்டல் வருகிறது.
2.கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் போது மற்றதை விடாதபடி வாந்தி வருகிறது - இது சாம.
3.அந்த வாசனை வரப்படும் போது அந்த உணர்ச்சிகள் உந்தி வெளியே தள்ளுகிறது.

உணர்வின் தன்மை கவரப்பட்டு உறையும் நிலை வரும் போது கிரேதா. அதைக் கடந்து அதிலிருந்து வரக்கூடிய மணம் தான் சாம… இசை. அதை உயிரணு நுகரப்படும் போது “உணர்ச்சியின் எண்ணங்கள்…” வருகிறது.

ஆனால் தாவர இனங்களாக இருக்கும் போது அந்த மணத்தின் வலிமை கொண்டு மற்றதைத் தன் அருகில் விடாது பாதுகாத்துக் கொள்கிறது.

ஆகவே அதைப் போன்று மனிதனான பின் தீமைகள் நமக்குள் வராது தன்னைப் பாதுகாக்கும் நிலையாக அருள் உணர்வை எடுத்துச் சேர்த்தல் வேண்டும்.

சாம வேதத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள்
1.இந்தச் செடி இதைச் செய்யும்… இந்தச் செடி இன்னதைச் செய்யும்… என்று மணத்தால் நுகர்ந்து
2.எந்தச் செடியின் மணத்தை அதிகரித்து மனித உடலில் தீமையை நீக்கியதோ
3.அதன் உணர்வின் குணத்திற்கொப்பத் தாவர இனத்தின் மணத்தைக் கூட்டி
4.மனிதனுக்கு வரும் நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டார்கள் கடந்த கால மனிதர்கள்.

நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டாலும் இதன் வலுவின் தன்மை கொண்டு மாற்றும் போது அன்றைய காலத்தில் இந்தச் சாம வேதம் என்று வரும் போது இதைக் கொடுப்பதற்கு முன்
1.அந்தத் தாவர இனச் சத்தைக் கையில் ஏந்தி
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சேர்த்து
3.விஷத்தினை வென்றிடும் வலுவைக் கூட்டும் போது கலியை மாற்றிக் கல்கியாகக் கொண்டு வந்தனர்.

இப்படி அந்த ஞானிகள் கூட்டிய சாம வேதத்தின்படி அந்த அருள் மணத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். கலியாக மாறாமல் கல்கிக்குச் செல்ல வேண்டும்.