ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2022

கலி எது..! கல்கி எது…?

வீட்டிற்குள் பாம்பு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐயோ பாம்பு வந்து விட்டதே…! கடித்து விடுமே… கடித்து விடுமே… சொல்லிக் கொண்டு இந்த உணர்வு அதிகமானால் பாம்பின் நினைவே வருகிறது.

“கலி” என்ற இந்த உணர்வுகள் அதிகமானபின் அதன் உணர்வை எடுத்து மனிதனாக இருக்கும் நாம் அந்த உடலுக்குள் சென்று விடுகிறோம். பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று அடுத்துப் பாம்பாகத் தான் பிறக்க நேரும்.

ஒரு மாட்டினை வளர்க்கின்றோம். மனிதனுடைய உணர்வைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அது தனக்குள் இதை எடுத்துக் கொண்டால் கலி தான்.

மனிதனுடைய உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டபின் நம்மை ஏங்கியே அந்த மாடு இறக்கப்படும் பொழுது யார் மேல் பிரியமாக இருந்ததோ இறந்த பின்… வளர்த்த அந்த உடலுக்குள் செல்ல நேர்கிறது.

எனேன்றால் வளர்த்த ஆர்வத்தில் “நான் செல்லமாக வளர்த்தேனே… நான் சொன்னபடி எல்லாம் கேட்டதே…!” என்ற மனிதனின் உணர்வு வரும் போது அதனின் அறிவாக மாறுகின்றது. மாடு இறந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. அது மாட்டிற்குப் பரிணாம வளர்ச்சி.

நாயோ கோழியோ ஆட்டையோ வீட்டில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் மனிதனின் உணர்வு அதற்குள் வளரப்படும் பொழுது இறந்தால் மனிதனுக்குள் வருகின்றது. இதுவும் கலி தான். ஆனாலும் அவைகள் எல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

உதாரணமாக… மனிதனாக இருக்கும் நாம் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம் என்றால் அந்த உணர்வை இரக்கத்துடன் நுகர்ந்தால் நமக்குள் அதே நோய் வரத் தொடங்குகிறது. நாம் தேய் பிறையாகின்றோம். இதுவும் கலியாகத் தான் ஆகிறது.

ஆனால் அந்த நேரத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று துவாரகா யுகத்தில் சேர்க்கப்படும் பொழுது
2.நாம் எந்த நல்ல குணத்தால் நோயாளியை உற்றுப் பார்தோமோ அவரின் வேதனை நமக்குள் சேராதபடி
3.அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
5.எந்தக் குணத்தின் மணத்தை உருவாக்கி அந்த எண்ணங்கள் வந்ததோ
6.அதில் அந்த அருள் ஞானத்தின் உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது இது “கல்கி” ஆக மாறுகிறது.
7.இருளை நீக்கும் அணுவின் தன்மையாக ஒளியாகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஏனென்றால் திரேதாயுகம் (உடல்) என்று இருந்தாலும் துவாரகா யுகத்தில் “வேதனை” நமக்குள் வலுவானால் கலியாக மாற்றி நல்ல உடலின் ரூபத்தையே மாற்றி விடுகின்றது.

1.ஆனால் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமென்றால் கல்கி ஆகின்றது
2.உயிர் கல்கி… நாம் நுகரும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் உயிரைப் போன்றே ஒளியாக மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும்.

மனிதன் கனியாக ஆன… துருவ நட்சத்திரமான அந்தக் கல்கியை நாம் பெற வேண்டும் என்று தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு வருவது (ஞானகுரு).

சிறு சிறு திரைகள் நமக்குள் ஒவ்வொன்றிலும் உண்டு. நல்லதை மறைக்கும் அந்தத் திரைகளை நீக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கனியாக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு நாளும் இந்த உணர்வின் தன்மையை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
2.நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொன்றிலும் நாம் இணைத்தால் தான் கல்கி. அதைச் சேர்க்கவில்லை என்றால் கலி தான்.