ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 4, 2022

அறியாது புகுந்த ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தும் முறை

கூட்டுத் தியானம் இருந்து முடிந்த பின் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.பின் மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர் உடலில் உள்ள அந்த ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அது பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
3.அந்த உடலிலேயே நன்மை தரும் சக்தியாக அது மாற வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அனைவரும் இதைப் போன்று கூட்டாகச் செய்தோம் என்றால் ஆவி ஒரு உடலில் ஆட்டிப் படைக்கும் நிலையிலிருந்து அவர்களை மீட்டலாம்.

உடலுக்குள் ஒரு ஆவி வந்துவிட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளோருக்கும் அதனால் பல தொல்லைகள் வரும்.
1.தொல்லைகள் வரப்படும் போது இப்படி இருக்கின்றதே…! என்று
2.ஆவி அல்லது பேய் ஓட்டுபவரிடம் சென்றால் அதை ஓட்ட முடியாது.

உள்ளுக்குள் இருந்து அதன் வீரியத் தன்மையைத் தடுத்தல் வேண்டும். அதாவது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை அந்த உடலுக்குள் பெருக்கப்படும் போது
1.அது இதை உணவாக உட்கொண்டு அதனுடைய வீரியத்தைக் குறைக்கும்
2.அப்போது அந்த ஆன்மாவிற்கும் ஒரு நன்மையாகின்றது. நமக்கும் நன்மையாகின்றது.

மாறாக ஆவியை விரட்ட வேண்டும் என்று
1.”அதிகாரத்தில் நாம் செயல்படுத்தினோம்…” என்றால் எதிர்மறைகள் அதிகமாகி
2.அது எதன் வேகத்தில் அந்த அணுக்கள் (ஆன்மாவின் இயக்கம்) இருந்ததோ அதன் வழி தான் பெருக்கும்.

பிறிதொரு ஆவியின் நிலைகள் இருந்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானங்கள் இருந்து
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் இரத்தநாளங்களில் படர வேண்டும்
2.அவர் உடலிலிருக்கும் ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சாந்த நிலை அடைந்து
3.அதுவும் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலைகள் எண்ணி நீங்கள் இதைச் செய்வீர்கள் என்றால் அது ஒடுங்கும்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமைகளை அகற்றக்கூடிய வல்லவர்களாக மாற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும்.
1.மகரிஷிகள் தம் பார்வையில் எப்படிப் பிணிகளைப் போக்கினார்களோ இதைப் போல்
2.உங்கள் பார்வையில் தீமைகளைப் போக்கும் சக்தி பெற வேண்டும்.

தீமை என்று எப்படிக் கேட்டறிந்தாலும் அது உங்களுக்குள் புகாது தடுத்துக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அன்றாட வாழ்க்கையில் தினசரி பத்திரிக்கையைப் பார்க்கும் போது அரசியல் வாழ்க்கையிலோ அல்லது மற்ற நிலைகளிலோ கடும் தீமைகளைப் பார்க்க நேரும் போது மத பேதம் இன பேதம் என்ற பல போர் முறைகளைப் பற்றிக் கேட்ட பின் அங்கே ஒருவருக்கொருவர் வெறுப்பின் தன்மை தான் வருகிறது.

அந்த நேரத்தில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து ஒன்றுபட்டு வாழும் அருள் சக்தி வர வேண்டும் என்று எண்ண வேண்டும். ஒவ்வொரு உடலில் இருக்கும் உயிரை ஆண்டவன் என்றும் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அமைதி பெறும் உணர்வுகள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் மதத்திற்குள் இனம் என்று இனத்திற்குள் இனம் என்று இனத்திற்குள் இனம் என்று பிரிந்து வாழும் நிலையே ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு வாழும் நிலைகள் தான் வருகின்றது.

என் இனத்தைப் பற்றித் தாழ்த்திப் பேசுகின்றான்…! என்ற இந்த உணர்வுகள் வளரப்படும் போது பகைமைகளை வளர்த்து மனிதனின் நல்ல பண்புகளை மாற்றிவிடுகின்றது.

1.பிறிதொரு தீமை நம்மை ஆட்டிப்படைக்காதபடி நம் நல்ல குணங்களை மறைத்திடும் இது போன்ற நிலைகளை நாம் நீக்கிடல் வேண்டும்.
2.கணவனும் மனைவியும் இந்தத் தியானத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று சேர்த்து வாழக் கூடிய பக்குவத்தை உருவாக்க வேண்டும்.