ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2021

நன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து... சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன...? (HEART ATTACK KIDNEY FAILIURE)

 

வான் வீதியில் உருவானது “உயிரணு...” என்னென்ன குணங்களை நாம் எண்ணுகின்றோமோ அந்த “அணுக்களை...” நம் உடலில் சேர்த்துக் கொள்கிறோம்.

அது நம்முடன் சேர்ந்து வளர்ச்சி ஆகி அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது “ஜீவ அணுவாக...” மாறுகின்றது.

வான் வீதியில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தங்கள் கோள்களின் சத்தினை எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு தான்.
1.அந்த அணுவை நாம் சுவாசித்து நுகர்ந்த பின் உயிர் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
2.ஜீவ அணுவாக மாறிய பின் ஜீவ ஆன்மாவாக ஆகின்றது.

ஒரு மனித உடலில் நோய்வாய்ப்பட்டது என்றால் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலில் விளைந்ததை நாம் கூர்மையாக உற்றுப் பார்த்தால் நோய்க்குக் காரணமான அணுக்களை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்… நம் உடலில் விஷத் தன்மையாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அண்ட நோய்வாய்ப்பட்டவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அந்த உடலில் விளைந்த சக்தி நமக்குள் வந்து அந்த ஆன்மாவும் நமக்குள் வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்தவுடனே ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது. நமக்குள் வட்டமிடுகின்றது. நம் இரத்தத்தில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.

ஆவி பிடித்தவர்களைப் பார்த்தோமென்றால் ஒரு வித வேகமான துடிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கலாம்.

1.இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது சிறு மூளை பாகம் வந்தால்
2.அந்த இறந்தவருடைய எண்ணங்களை வைத்து நம்மை இயக்கும்.
3.அங்கிருந்து (சிறு மூளை) விலகிச் சென்றால் மறுபடியும் சாந்தமாகி விடும்.

ஆனால் அது சிறு மூளையில் பட்டு இயக்கத் தொடங்கும் போது எண்ணங்கள் அது என்னென்ன எடுத்திருக்கின்றதோ அதை எல்லாம் பேசும். அதனுடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.

ஆக இரத்த நாளங்களில் செயல்படுவது ஜீவான்மா. நமக்குள் இருந்து அதற்கு வேண்டியதை உற்பத்தி செய்து அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோற்றுவிக்கப்படும் பொழுது தான் அதை நாம் சுவாசிக்கின்றோம்... உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

ஆனால் ஜீவ அணுக்கள் என்பது நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை நம் தசைகளில் ஒரு சேர்கின்றது. அப்பொழுது ஒவ்வொன்றும் அடங்கி எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அந்த உணர்வை உடலில் இருந்து எடுக்கும்... வெளியிலிருந்து...!

செடிகளிலே வித்து விளைகின்றது. அதே மாதிரித் தான் மனித உடலில் அந்த எண்ணங்கள் உருவானால்... பதிவாகும் போது ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. பின் இந்த மனித உடலிலிருந்து அலைகளாகப் பாய்கின்றது.

நான் உபதேசிக்கிறேன் என்றால் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றுகின்றது. அதை நீங்கள் சுவாசித்து உங்களுக்குள் வரும் பொழுது விளைந்து ஜீவ அணுக்களாகிறது.

என்னுடைய ஜீவ அணுக்கள் அதிகமான பிற்பாடு நான் இறந்து விட்டால் உடலுக்குள் வந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது. அது இரத்தத்தில் தான் இருக்கும். இரத்தத்தில் சில மாற்றங்கள் எடுத்துத் தன் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்தும்.

இது போல் வருவதைத் தான் பேய் பிடித்தது... ஆவி பிடித்தது... ராட்சஸ உணர்வு போல் வருகிறது... என்றெல்லாம் சொல்வார்கள்.

சில கொடூரமான தெய்வங்களை உருவாக்கிப் கொடூரமான பல்லுடன் காட்டியிருப்பார்கள். அது போன்ற தெய்வத்தையே வாழ் நாள் முழுவதும் வணங்கி அந்த அந்த அலைகளைப் பதிவாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அடுத்த உடலுக்குள் சென்றால் அதே நினைவுடன் தான் வரும்.

அடுத்த உடலை அடக்கி ஆட்சி புரியும் தன்மை வரும். வாய் பேச விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது போன்று எத்தனையோ உண்டு.

ஆனால் அந்த ஆன்மா அது நம் இரத்தத்தில் தான் இருக்கும். அணுக்கள் நம் உடலோடு ஒட்டி வரும். தீமையின் உணர்வுகளுக்கு வரப்படும் பொழுது இரத்தத்தில் தான் இந்த அணுக்கள் பெருகும்.

1.இரத்தத்தில் இத்தகைய அணுக்கள் பரவும் பொழுது தான்
2.சில நேரம் இருதயத்திற்கு வரும்பொழுது இருதயத் துடிப்பு குறைகிறது... அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
3.அதே சமயத்தில் இரத்தத்தின் வழி அந்த அணுக்கள் கிட்னிக்கு வந்தால் விஷத் தன்மை பாய்ந்து கிட்னி பழுதாகி விடும்.

பார்க்கலாம் சிலருக்குத் திடீரென்று அட்டாக் வந்தது... சிறுநீரகம் செயலிழந்து விட்டது மரணம் அடைந்தார் என்று...! அது எல்லாம் இத்தகைய ஆன்மாக்களின் நிலைகளால் தான்.