ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2021

சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்...!

 

நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அதில் உள்ள சத்துகள் எல்லாம் நம் உடலிலே முதலில் அமிலமாகத்தான் மாறும்.

விஷத்தன்மை கொண்ட நம் பித்த சுரபி...
1.அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு சாப்பிடும் ஆகாரத்திற்குள் கலந்து
2.அந்த அமிலத்தன்மையை குளுக்கோஸாக மாற்றுகிறது.

குளுக்கோசாக மாற்றி வரப்படும் பொழுது இரத்தங்களிலே இருக்கக்கூடிய செல்கள்
1.இந்த உணர்வின் தன்மையைச் சுழலச் செய்து சுழலச் செய்து
2.அதைச் சிவப்பணுக்களாக மாற்றி விடுகின்றது.

அப்படி மாற்றும் தன்மை அங்கே இல்லை என்றால் விஷத்தின் தன்மையால் அந்தக் குளுக்கோஸ் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது. இப்படி அந்தக் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து இரத்தத்திலே அதிகமாகிவிடும்.

காரணம்... அடிக்கடி வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது அல்லது வேதனையான உணர்வுகளை எடுக்கும் போது உடலில் விஷத் தன்மைகள் அதிகமாகிறது.

உதாரணமாக ஒருவர் செய்யும் தவறான செயலைப் பார்த்து நம்மால் அதைத் தாங்க முடியவில்லை என்றால் சோர்வான உணர்வைத்தான் நுகர்கின்றோம். அதை நுகரப்படும் பொழுது கோபமான உணர்வுகளைக் கலந்து நாம் சுவாசிக்க நேருகின்றது.

இது நமக்குள் கூடியபின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோஸை சிவப்பணுக்களாக மாற்றும் தன்மைக்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பு நோயாக மாறும்.

1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பும் வரும்.
2.காரணம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (சோர்வு வேதனை கோபம்) அணுக்களின் தன்மை வீரியம் அடைகின்றது.

வைத்திய ரீதியில் எடுத்துக் கொண்டாலும் கூட இரத்தத்தைப் பரிசோதித்துத் தான் இரத்தக் கொதிப்பு இருக்கிறது... சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்பார்கள்.

அதே சமயத்தில் இந்த இரண்டும் மோதும் பொழுது சலிப்புத் தன்மை அடைந்து பிரிக்கப்படும் பொழுது... ஆஸ்த்மா போன்ற சளித் தன்மையும் அதிகமாகின்றது.

சர்க்கரை அதிகமாகும் போது சளி உருவாகி எல்லா இடத்திலும் அது உறைந்து அந்த அமிலங்கள் மாறுகின்றது. உடலுக்குள் ஒவ்வொன்றையும் இப்படி மாற்றுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ காலமாகப் பல சரீரங்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும்...
1.நாம் இன்று சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மூலம் உடலில் அணுத் தன்மைகள் மாறி
2.கடைசியில் வேதனை என்ற உணர்வே மிஞ்சுகின்றது...
3.மனிதனின் ரூபத்தையே மாற்றும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

ஆக அந்த வேதனை எதில் உருவாகிறது என்றால் சந்தர்ப்பத்தால் இணைத்த உணர்வு கொண்டு தான் நமக்குள் அது வருகின்றது.

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தையே நல்லதாக மாற்றும் நிலைக்குத்தான் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கும் தன்மையாக இங்கே செயல்படுத்திக் கொண்டுள்ளோம் (ஞானகுரு).