ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2021

வேதனைப்பட்டே வாழ்வது நல்லதா… அல்லது அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி வாழ்வது நல்லதா…? - ஈஸ்வரபட்டர்

           

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் “உயர்வு… தாழ்வு…” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அதையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்த நிலையில் நம் உயிரணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். அதையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு… இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இதையெல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெற ஈஸ்வர தியானங்கள் பெற்று அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைக்க வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!