ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2021

உடலில் உள்ள அணுக்களின் பசிக்கு... நம் உயிர் உணவைக் கொடுத்து அதை வளர்க்கும் விதம்

 

செடி கொடிகள் வெளிப்படுத்தும் சத்தினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு காற்றிலிருந்து தன் இனச் சத்தை எடுத்துத் தன் வித்தாக வளர்க்கும். அதற்கு ஈரப்பதம் இருந்தால் போதும்.

இது போன்று தான் நம் உடலுக்குள் பல குணங்களின் சத்துக்கள் இருக்கின்றது. அதிலே வேதனைப்படும் உணர்வின் அணுவாக வளர்ந்து விட்டால் உடனே அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும். இரத்த நாளங்கள் வழி தன் உணவை எடுக்கும்.

காற்று மண்டலத்தில் எப்படி அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றதோ அதிலிருந்து எடுத்து செடி கொடிகள் எடுத்து வளர்வது போல் தான் நம் உடலில் உருவான அணுவும் வளரும்.

1.அதாவது நம் உடலில் நுகரும் பொழுது (சுவாசிக்கும் போது) வெப்ப மண்டலங்கள் வரும்.
2.பின் 48 நாட்களில் சுவாசித்தது கருவாகி முட்டை ஆகிறது.
3.உடல் முழுவதும் சுற்றும்போது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்ளும்.
4.முட்டை வெடித்து அணுவாக ஆனபின் தன் உணர்ச்சியைத் தூண்டும்
5.இரத்தத்தின் வழி கூடி சிறு மூளைக்கு (அந்த உணர்வு) வரும். ஏனென்றால் அதனுடைய பசிக்கு அந்தச் சாப்பாடு கேட்கும்.

இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்…?

1.நம் கண் காது மூக்கு நிலைகளுக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலில் இருந்தது தீமைகள் வந்ததோ அதை இழுக்கும்.
3.அதைச் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்கு வரும்.

பாவிப்பயல்…! அன்றைக்கு இப்படிச் செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து தீமை விளைவிக்கக் கூடிய சந்தர்ப்பமாக அமையும்.

இதை எல்லாம் நமக்குள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம் இந்த எண்ணங்கள் எப்படிக் கிளர்ந்து எழுகிறது என்று…! ஆக இத்தகைய எண்ணங்கள் வந்து விட்டால் அந்த நேரத்தில் நம் வியாபாரங்கள் கெடும்.

நம் பையனாக இருந்தாலும் கூட… “இப்படிச் செய்கிறானே” என்று வேதனைப்படுகின்றோம். அது வேதனையை உருவாக்கும் அணுக்களாக விளைகின்றது... நம் உடலாக மாறுகிறது.

இப்படி எல்லாம் நினைத்துவிட்டு ஒரு காரியத்திற்குச் சென்றால் நல்லதாகாது. எந்த வேலையைச் செய்தாலும் நிச்சயம் எதிரியாகி விடும். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வு வரும் பொழுது நமக்குள் சரியாக இயங்காது.

தொழில் செய்யும் இடங்களில் பகைமை வந்து விடுகின்றது வியாபாரம் செய்தாலும் வேதனை உணர்வு வந்தபின் நாம் சொல்வதைக் கேட்டால் “சரக்கை வேண்டாம்...” என்று ஒதுக்கி விடுவார்கள்.

இது எல்லாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள். இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

அதற்காகத்தான் துருவ தியானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று காலையில் எண்ண வேண்டும்.

கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போன்று நம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.
2.காலை துருவ தியானத்தில் இதை எல்லாம் அவசியம் செய்ய வேண்டும்.

முன்னோர்கள் முதலில் அங்கே சென்று விட்டால் சப்தரிஷி மண்டலத்தில் இருந்து தன்னிச்சையாக (AUTOMATIC) நாம் அந்தச் சக்திகளைப் பெற முடியும். ஒவ்வொரு நிமிடமும் அதை வளர்க்க வேண்டும்.

அதிகாலையில் இந்தச் சக்திகளை அனுதினமும் எடுத்தோம் என்றால் பின் யாருடைய உதவியும் தேவையில்லை. அருள் உணர்வை வளர்த்த பின் நம்முடைய உயிரான்மா அங்கேதான் செல்லும்.

சகஜ வாழ்க்கையில் யாராவது நமக்குத் தீமை செய்தால் பாவிப்பயல் எனக்கு இப்படிச் செய்தானே…! என்று எண்ணுகின்றோம். அப்போது யாருடைய உதவியுமா கேட்கின்றது…? இல்லையே…!

நேராக அவனுடைய உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்கின்றது இங்கே பட்ட வேதனையை அங்கே உருவாக்குகிறது. பழி தீர்க்கும் நிலையாகச் செயல்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் துருவ தியானத்தின் மூலம் எடுக்கும் துருவ நட்சத்ததிரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டா நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே போய்த் தான் நிற்போம்...!

ஆகவே கணவன் மனைவி அவசியம் இந்த உயர்ந்த சக்திகளை எடுத்தே ஆகவேண்டும்.