ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2021

அகஸ்தியன் அவன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான அகஸ்தியனை அவன் தாய் தந்தையர் “கடவுள் பிள்ளை” என்றே எண்ணுகின்றனர்.

ஏனென்றால் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் போனால் மற்ற துஷ்ட மிருகங்கள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றது. “அந்தக் குழந்தையினால் இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது...”

ஆனால் மிருகங்களிடமிருந்தும் நஞ்சு கொண்ட விஷ ஜெந்துக்களிலிருந்தும் தப்ப
1.முதலில் பச்சிலையைத் தான் இவர்கள் நுகர்ந்தார்கள்... பல பல மூலிகைகளைத் தான் உபயோகப்படுத்தினார்கள்.
2.அதன் வழி அகஸ்தியன் என்ற அந்தக் கருவின் தன்மை விளைந்தது.

அந்தக் குழந்தையை கையில் எடுத்துச் செல்லப்படும் போது மற்ற மிருகங்கள் அருகில் வருவதில்லை என்று கண்டுணர்ந்த பின் அவன் கடவுள் பிள்ளை என்று போற்றுகின்றனர்.

அந்தக் குறுகிய காலத்தில் அங்கே வாழும் ஒரு ஐம்பது குடும்பங்களில்... ஒரு நூறு பேர் இருக்கும் இடங்களில் அவனைப் போற்றித் துதிக்கும் நிலை வருகின்றது.

உதாரணமாக பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் துகள்களால் “மின்னல்கள்” வருகிறதென்றால் அது எல்லாம் விஷத் தன்மை கொண்டது.

1.ஆனால் அந்தக் குழந்தை அதை உற்றுப் பார்த்து அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதும் மகிழ்வதும் போன்ற தன்மைக்கு வருகின்றது.
2.இதே போல் சூரியனையௌம் கண் கூசாது உற்றுப் பர்க்கின்றான்,

இன்று நாம் தீபாவளிக் காலங்களில் மத்தாப்புக்களைக் கொளுத்தினால் அவைகளிலிருந்து பொறிகள் எப்படி வருகிறதோ அது போல் சூரியன் மற்ற கோள்கள் நட்சத்திரங்கள் இவை வெளிப்படுத்தும் கதிர்கள் மோதி வான்வீதியில் பல வர்ணங்களில் எப்படி வருகின்றது...? என்று அவன் வேடிக்கை பார்க்கின்றான்.

சூரியனும் மற்ற கோள்களும் அதனின் உணர்வுகளின் மோதலினால் ஏற்படும் இந்த மின் பொறிகளைப் பார்த்து அவன் அறியாமலே அதைக் கண்டு சிரிக்கின்றான்.

1.அங்கே வானிலே நடக்கும் நிகழ்ச்சிகளில்
2.அதில் வரும் விஷத்தின் தன்மை அவனுக்க்ள் ஒடுங்கும் பொழுது
3.சாந்தமான நிலை கொண்டு அகஸ்தியன் பார்க்கின்றான்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களும் சூரியனைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கென்ற கண்ணாடிகளில் விஷத் தன்மைகளை அடக்கும் அந்தச் சக்திகளைப் பூசி அதனைக் கலக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் பார்க்கின்றனர்.

சூரியனை நேரடியாக இவர்கள் பார்ப்பதில்லை. அந்தக் கண்ணாடிகள் மூலம் பார்க்கும் போது அதிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் என்ற விஷம் இவர்களைத் தாக்குவதில்லை.

அதே போலத் தான் நட்சத்திரங்கள் பல வகைகளில் ஒன்றுக்கொன்று உராயப்படும் போது தூசிகள் வருகின்றது. அவைகள் மோதினால் மின்னல்களாக மாறுகின்றது.

அந்த மின்னல்களையும் இந்தக் கண்ணாடி வழி தான் விஞ்ஞானிகள் கண்டு அதனுடைய கலர்களையும் அதனுடைய இயக்கத் தன்மைகளையும் காணுகின்றார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியனோ இத்தகைய தன்மைகளை நேரடியாக உற்றுப் பார்க்கின்றான்.
1.அவன் கருவிழி அதைப் பதிவாக்குகிறது.
2.அதிலிருந்து வெளி வரும் ஆற்றல்களை அவன் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் நுகரச் செய்கின்றது.

அப்படி அவன் நுகர்ந்த உணர்வோ உயிரான ஈஸ்வரலோகத்தில் இணைந்து
1.அந்த விஷத்தின் தன்மையை அவன் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
2.வீரிய சக்தியாக ஊட்டும் சக்திகளாக மாறுகின்றது.

இது எல்லாம் அகஸ்தியனின் சந்தர்ப்பம்...! அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்ற ஆற்றல்மிக்க மெய் ஞானியாக ஆகலாம்.