ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2021

கார்த்திகை ஜோதி… தீப வணக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்குப் போதனையாக உரைத்து வந்ததில்… மனதின் பக்குவம் பெற முயற்சிக்க வேண்டும்.

உலக வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணங்கள் அலை அலையாக வந்து நம் மீது மோதினாலும்
1.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று சேர வேண்டிய இடம் சேர்வதைப் போல்
2.நம் நிலையிலும் எல்லா உணர்வுகளையும் சமப்படுத்த வேண்டும் என்ற அந்த நல் எண்ணத்தின் உந்துதலாக
3.அதன் வழி முறைகளை நம் சிந்தையில் இருத்திச் “சித்தன் நிலை…” பெற வேண்டும்.

ஏனென்றால் பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல. மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் “எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது….!”

நம் உடல் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர் மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும்…
1.மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.
2.ஆக… நோய் உடலிலா…! எண்ணத்திலா…? அல்லது…
3.நம் சுவாச நிலையின் இயல்புத் தன்மையை மாற்றி விட்டாலே
4.எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்
5.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.

கார்த்திகை ஜோதியைப் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்ததா…? இன்றைய நடை முறைக்கு அது எல்லாம் பெரும் சடங்காக மாறி விட்டது.

அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் என்ன…?

பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் நமக்கு அளித்திடும் செயலை மறைபொருளாகக் காட்டினர்.

அந்த ஜோதியின் உட் பொருளை உணர்த்த… கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் “தீபமேற்றி வணங்கிடும் முறையாகக் காட்டப்பட்டது...!”

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே “கார்த்திகை ஜோதி…” என்று தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

1.இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து
2.தன் மனதை… தன் சிந்தையை ஒருமுகப்படுத்தித் தியானிக்கச் செய்து…
3.பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகளைப் பெற்றிட
4.ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்திய வழி முறைகள் தான் அது…!

தியான நிலையறியாத வாய்மையின் சக்தி கொண்டோரும் இந்தச் சக்தியைப் பெறுகின்றனர்.