ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2021

பிரம்ம முகூர்த்தம்

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணுகின்றார்கள்.
1.பல இரசாயண மருந்துகளைக் கொண்டு அதை இஞ்செக்சன் மூலம் மனிதனுக்குள் செலுத்தி இரத்தத்தில் கலக்கப்பட்டு
2.உடலில் இருக்கும் அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
3.மனிதனை 1500 ஆண்டுகள் வாழ வைக்க முடியும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.
 
ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தின் மூலம் எடுத்து அந்த உணர்வை நுகர்ந்து இரத்தத்தில் கலக்கச் செய்து நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதைச் சேர்ப்போம் என்றால் அந்த ஒளியின் உணர்வாக வளர்ச்சி அடைகின்றது.
 
அது முழுமையடைந்த பின்...
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்
2.என்றுமே அழியாத நிலைகள் கொண்டு ஒளி உடல் பெறுகின்றோம்.
 
அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையை எப்படி ஒளியாக மாற்றினானோ... அதே உணர்வு “துருவ நட்சத்திரமாக இருக்கும்” அந்த உணர்வினை நாம் கவர்ந்தால் நாமும் ஒளி உடல் பெறலாம்.
 
உயிருடன் ஒன்றி ஏகாந்த நிலையாக இருளை மாற்றிப் பேரருள் என்ற ஒளியாக மாற்ற முடியும். அந்தத் திறனை நாம் எல்லோரும் பெற வேண்டும்.
 
அத்தகைய சக்திகளைத் தான் அதிகாலை துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
 
எந்த ஆலயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிகாலை நான்கிலிருந்து ஆறு மணிக்குள் தான் மணிகளை ஒலிப்பார்கள். ஆலய வழிபாடு என்று சட்டத்தை ஏற்றுவார்கள். எல்லா ஆலயங்களிலும் அந்த நேரத்தில் தான் பூஜைகள் எல்லாம் செயல்படுத்துகின்றனர்.
 
அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை “பிரம்ம முகூர்த்தம்...” என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது பேரருள் பேரொளியாக நமக்குள் வளர்கின்றது. இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.
 
ஆனால் தீமைகளைச் செயல்படுத்தும் நேரம் இரவு பணிரெண்டு மணி என்று அந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் செய்கின்றனர்.
 
மற்றொருவருக்குத் தீய நிலைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அந்த இரவு 12 மணிக்குத் தீய தெய்வங்களை வணங்கி மந்திரவாதிகள் அதைச் செயல்படுத்துவார்கள்.
 
ஆனால் அதிகாலை நான்கு மணிக்கு அருள் உணர்வுகளை நல்வழிப்படுத்தும் நேரமாக இருக்கின்றது. அந்த நேரத்தை நல்லதை உருவாக்கும் காலமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.ஆகவே உங்கள் உயிரைத் தயவு செய்து கடவுளாக மதியுங்கள்.
2.அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்று...!
 
அனைத்தையும் தெரிந்து கொள்ளும் உணர்வினை உயிர் ஈசனாக இருந்து நமக்குள் வெளிப்படுத்துகின்றான்.
1.அவன் நம்முள் இருக்கும் பொழுது அவனைப் போன்று நாம் ஆகவேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் அருள் ஒளியாக மாற்ற வேண்டும்
3.இனி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று எண்ணுங்கள்.