ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2016

மனதை மாற்றியமைக்கும் மணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

மலைப் பகுதியில் 20 வருடம் குருநாதர் அனுபவத்தைக் கொடுத்தார். செடிகள் எப்படி உருவாகின்றது? விஷத்தின் தன்மை எப்படி மாறுகின்றது? ஒன்றை ஒன்று எப்படி மாற்றிக் கொண்டுள்ளது? இதையெல்லாம் காட்டுகின்றார்.

புலியின் சத்தை மணத்தால் இரத்தத்தை உறிஞ்சும் நிலை வரும் பொழுது ஒன்றோடு ஒன்று மோதி மற்ற செடிகளுடன் சேர்த்து ஒரு புதுவிதமான செடியாகின்றது.

அந்தச் செடி என்ன செய்கின்றது? முளைத்து வளர்ந்து விட்டது என்றால் செடி நன்றாக இருக்கின்றது மனிதன் அருகில் உட்கார்ந்தால் போதும்.

ஒரு மரம் கூட இதே மாதிரி இருக்கும். நன்றாக அமைதியாக இருக்கும். அந்த மரத்தின் நிழலில் உட்கார்ந்தால் அந்தக் கொப்பு அப்படியே அலுங்காமல் நெளிந்து வரும்.

மேலே பட்டால் போதும். கரண்ட் பட்டால் எப்படி இருக்கும்? அதே மாதிரி இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டேயிருக்கும். மேலே பட்டால் அதிலிருந்து தப்ப முடியாது.

இதே மாதிரிச் சில கொடிகள் அப்படியே நகர்ந்து வரும். சில செடிகள் இரத்தம் உள்ள உயிரினங்கள் பட்டது என்றால் இரத்தத்தை உறிஞ்சிச் சாப்பிடும்.

இதிலெல்லாம் உயிரணுக்கள் உண்டாகி அது மற்ற கலவையாகின்றது. இதைப் போலத் தான் உயிரணுக்களாகி எதிர்நிலையாகி மற்ற தாவர இனங்கள் ஏராளமான செடிகள் புதிதாக உருவானது.

அத்தகைய செடிகள் தான் ஒவ்வொன்றும் யானை மிரட்டி, புலி மிரட்டி நரி மிரட்டி, நாய் மிரட்டி இதைப் போன்று உருவானது. ஆகவே, இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் உதாரணத்தைச் சொல்லி இந்தச் செடிகள் உருவானது எப்படி என்று குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டுகின்றார்.

அதுதான் ரிக், சாம, அதர்வண, யஜூர். ஒன்றுடன் ஒன்று சேர்த்து உணர்வின் தன்மை ஆனபின் அது இணைந்து கொண்டபின் மணமும் அந்த மணம் உணர்ச்சிகளை எப்படி ஊட்டுகின்றது? அதிலிருந்து எப்படித் தப்புகின்றது?

இதை யாம் உபதேசிக்கும் பொழுது உங்களுக்கு அர்த்தமாகாமல்  இருக்கலாம். தயவு செய்து உங்களுக்குள் பதிவு செய்துவிடுகின்றேன். இது உங்களுக்கு ஒரு சமயம் ஞானத்தைக் கொடுக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிற்பாடு எதிர்ப்பு நிலைகள் எப்படியோ அதிலிருந்து தப்பும். உடனே அதனின் அழுத்தத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டும்.

இதே மாதிரி இப்பொழுது உங்கள் உடலுக்குள் இதைப் பதிவு செய்துவிட்டோம். எதிர்பாராது ஒரு காட்டுக்குள்ளோ அல்லது நாட்டுக்குள்ளோ போகும்போது தீமைகளைச் சந்திக்கும் பொழுது இது அந்த ஞாபகப்படுத்தி  ரிமோட் செய்யும்.

அப்பொழுது உங்களுக்குள் நினைவாகும். ஒன்று அதிலிருந்து தப்பச் செய்யும். உங்கள் உணர்வுகளைக் கண்டு அதை அஞ்சி ஓடச் செய்யும். இந்த நிலையாவது உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால், பதிவு செய்தால் அந்தப் பதிவு தான் நினைவு. இந்தப் பதிவை வைத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எலெக்ட்ரிக் எலெக்ட்ரான்,  நம் உயிர் எலெக்ட்ரிக், நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக். எதன் உணர்வு கொண்டதோ அதற்குத்தக்க நம் இயக்கமாகும்.

அதனால் விஞ்ஞான அறிவு கொண்டு உங்களுக்குத் தெளிவாகக் கூறுகின்றேன்.  நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற சக்தியால் நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றியது போல உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராக மாற்றுங்கள். பேரருள் பேரொளி என்ற நிலை அடையுங்கள்.