ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 23, 2016

விண் செல்லும் மார்க்கத்தை உங்களுக்கு மிகவும் எளிதில் கிடைக்கும்படிச் செய்கிறேன், விட்டுவிடாதீர்கள்

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் எப்படி விண் செலுத்த வேண்டும்?

 அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் ஒரு 48 நாட்களுக்கு காலையில் 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணி தியானிக்க வேண்டும்.

தியானித்துவிட்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் செலுத்தி உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் தியானித்து உந்தித் தள்ளினால் அவர்கள் ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள். பின், அவர்கள் ஒளியான உணர்வுகள் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து எளிதில் பெற ஏதுவாகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் நம் உடலில் இருந்தாலும் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் உணர்வை எளிதில் நுகர்ந்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த உதவும்.

ஆகவே, அந்த உணர்வின் வலுவை நாம் பெற்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். ஏனென்றால் மனிதனின் கடைசி எல்லை.

தேடிய செல்வமும் சொத்தும் எவ்வளவு தான் சேர்த்து வைத்திருந்தாலும் இந்த உடலை விட்டுப் பிரிந்தபின் என்ன கொண்டு போகப் போகிறோம்?

எப்பொழுதுமே உயிருடன் ஒன்றி அந்த அருள் உணர்வைப் பெற்றோம் என்றால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் சென்றடைகின்றோம்.

அதைப் பெறுவதற்காகத்தான் ஞானிகள் அத்தனை வேலையும் செய்தார்கள். உங்களுக்குச் சுலபமாகக் கிடைக்கின்றது என்று விட்டுவிடாதீர்கள்.

ஏனென்றால், மிகவும் கடினமாக்கிக் கொடுத்திருந்தார்கள். நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மிகவும் எளிதில் கிடைக்கும்படிச் செய்கின்றேன்.

அந்த ஞானிகள் காட்டிய அந்த அகஸ்தியன் வழியில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதைப் பின் தொடர்ந்தால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீங்கள் அகற்றலாம்.

இந்த வாழ்க்கையில் தெளிந்த மனதுடன் வாழலாம். இந்த உடலுக்குப் பின் அனைவரும் பிறவியில்லா நிலை அடையலாம். எமது அருளாசிகள்.