ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2016

உடல் மண்ணுக்குத் தான் போகின்றது, உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நாம் விண்ணுக்குச் செல்தல் வேண்டும்

உடலுடன் இருக்கும் பொழுது பத்துத் தலை இராவணன். சீதாவைச் சிறைப்பிடித்தான். வெறுப்பு, வேதனை, கோபம், ஆத்திரம் வரும்போது உங்களிடம் என்ன நடக்கின்றது?

நல்லது செய்ய முடியவில்லை என்றால் - கலக்கமாக இருக்கின்றது. எங்கே பார்த்தாலும் சிரமமாக இருக்கின்றது, தொழில் செய்ய முடியவில்லை, ஒரே வேதனையாக இருக்கின்றது என்ற சொற்கள் தான் வருகின்றது.

நல்ல சொல்லைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆக, நல்ல குணத்தை நீங்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கின்றீர்கள். அப்பொழுது சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துத் தீமைகளிலிருந்து விடுபட்டு விஷ்ணுவோடு (உயிருடன்) ஐக்கியமாக வேண்டும்.

ஏனென்றால், கடைசியில் சீதா எங்கே போகின்றது? “பட்டது போதும்..,” என்ற நிலையில் மண்ணுக்குள் போகின்றது.

மகாலட்சுமி விஷ்ணுவிடம் வந்து “உலகைப் பார்க்க வேண்டும்” என்று ஆசைப்பட்டார்.

அப்பொழுது விஷ்ணு சொல்கிறார். “நீ ஆசைப்பட்டாய்..,  அதில் எத்தனை தொல்லைகள் இருக்கிறது என்று பார்..,” இராமாயாணத்தில் கடைசியில் இப்படி முடிப்பார்கள். இந்த வாழ்க்கையில் “நீ எத்தனை தொல்லைகள் படுகிறாய்..., என்று பார்..,” என்கிறார்கள்.

இந்த மண்ணிலே பிறந்த சீதா என்ற நிலைகள் பூமா தேவிக்குத் தாங்க முடியவில்லை. இந்தச் சந்தோஷமான நிலைகளிலிருந்து “இப்படி ஆகின்றதே...,” என்று சொல்லி இந்த உடலான சத்து பூமியைப் பிளந்து பூமிக்குள் போகின்றது.

இந்த உடலுக்கு என்னென்ன ஆசைப்பட்டீர்களோ எதிலிருந்து தோன்றியதோ மீண்டும் இந்தச் சத்து மண்ணுக்குள் தான் போகின்றது.

தெளிவாகக் காட்டுகின்றார்கள் இராமாயாணத்தில்.

மண்ணுக்குள் போனவுடன் என்ன ஆகின்றது? இந்த உணர்வுகள் சேர்த்து விஷ்ணுவிடம் ஐக்கியமாகின்றது, சொர்க்கமடைகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் அறிந்து கொண்ட பின் அந்த விஷ்ணுவை நோக்கித்தான் தவமிருக்கின்றது. அந்தத் தவத்தில் பலன் என்ன செய்கின்றது? உயிருடன் சேர்த்து ஐக்கியமாகின்றது.

நமக்குள் இருக்கக்கூடிய சத்து நாம் இதை மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டேயிருந்தால் உயிருடன் சேர்த்து ஒளியின் தன்மை பெறுகின்றோம். சொர்க்கம் என்ற நிலை அடைகிறது.

இந்த உடல் ஆசை கொண்டால் என்ன நடக்கும்? மீண்டும் மீண்டும் ஆசைப்பட்டு இப்பொழுது எத்தனை அலங்காரம் செய்தாலும் சரி எவ்வளவு சுகத்தைச் சாப்பாடு கொடுத்து வளர்த்தாலும் சரி விஷத்தின் தன்மை அடைந்த பின் கடைசி எல்லை எங்கே கொண்டு செல்கிறது?

நல்ல உடலாக வைத்திருக்கின்றோம். கொழுப்புச் சத்து அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்தால் எல்லாம் தீர்ந்தது. அப்புறம் தேடி வைத்த செல்வம் கூட வருகின்றதா?

மண்ணுக்குத் தான் போகின்றோம்.

ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மேல் யாராவது ரொம்பப் பிரியமாக இருந்தால் என்ன ஆகின்றது?

அவரை நினைத்து இந்த மாதிரிப் போய்விட்டாரே, எனக்குப் பலவிதமான உதவிகள் எல்லாம் செய்தாரே என்று எண்ணினால் அவர் எங்கும் போகவில்லை.

அவர் உணர்வு இங்கே இருக்கின்றது. இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது. சிறிது நாள் கழித்துப் பார்த்தால் இவருக்கும் ஹார்ட் அட்டாக் வந்துவிடும்.

இதுதான் நடக்கும். சொர்க்கம் அடைவதில்லை.

ஆகையினால் நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் தெரிந்து கொள்ளுங்கள். பூரண நிலாவாகச் சுத்தப்படுத்தும் முறையைச் சொல்லிக் கொடுத்துவிட்டோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் ஒளியின் சுடர் ஆக முடியும்.

இந்தச் சூரியன் ஒரு காலம் அழியலாம். விஷத்தன்மைகள் நம் பிரபஞ்சத்தில் அதிகமாகப் பரவிவிட்டது, பிரபஞ்சமே நாளடைவில் மடியப் போகின்றது. ஆக, சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக மனிதனின் நிலை மாறப் போகின்றது.

மனிதனுக்குண்டான யுக்தியில் இப்பொழுது என்ன செய்கின்றான்?

விஞ்ஞானத்தில் விஷத்தின் தன்மை ஆற்றலைப் பெருக்கும் தன்மையைப் பெற்றான். விஷத்தின் வழியிலே தான் இன்று உலத்தில் எல்லாமே இயங்குகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நினைவிருக்கும் பொழுதே நாம் இந்த உடலுக்குப்பின் கல்கி என்ற நிலையை உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அடைதல் வேண்டும்.

இன்னொரு உடல் பெறக் கூடாது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இந்த வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்தல் வேண்டும்.

முதல் மனிதன் அகஸ்தியன் அந்த ஒளி ஆனான். அந்த ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து அவன் வழியில் நாமும் எளிதில் ஒளியாக முடியும். இதில் ஒன்றும் கடினமில்லை.