ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2016

காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம்

நான் (ஞானகுரு) இந்த இருபது வருடம் காடு மேடெல்லாம் அலைந்து சில மந்திரவாதிகள் என்ற கோட்டைக்குள் நுழைந்தும் அங்கு என்னென்ன நடக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம்.

காசி கங்கைக் கரையிலே எடுத்துக்கொண்டால் எத்தனையோ நிலைகள். என்னையே கொன்று சாப்பிடக் கூட விரும்பினார்கள்.

குருநாதர் காசி கங்கைக் கரைக்குப் போகச் சொன்னார். அதாவது கங்கை அகண்டது. அதன் மேலே ஒரு மணல் திட்டு இருக்கின்றது. அங்கே போய் அமர்ந்து என்னைத் தியானம் எடுக்கச் சொன்னார் குருநாதர்.

அதே சமயத்தில் அங்கே போனவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?

அங்கே சென்றீர்கள் என்றால் அகோரிகள் உங்களைக் கொன்று சாப்பிட்டுவிடுவார்கள். நீ தெய்வத்தைப் பெறப் போகிறாய். ஆனால், அங்கேயே உன்னைக் கொன்று சாப்பிடுவார்கள். வேகவைத்துச் சாப்பிடாமல் பச்சையாகவே உன்னைச் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள்.

சரி, என்னை குருநாதர் அங்கே போகச் சொன்னார். நான் எப்படியோ போகிறேன், என்னமாவது ஆகட்டும். ஆனால் குரு வாக்கை நாம் மீறமுடியாது. அவர் சொன்ன உணர்வை நான் அறியவில்லை என்றால் அவர் சொன்ன நிலைகளிலிருந்து நான் பின்வாங்குவதாக அர்த்தம் என்று சொன்னேன்.

 ராம்ஜி என்று ஒருவன் இருந்தான். அவனிடம் நான் கொஞ்சம் காசைக் கொடுத்து ஒரு டெலெஸ்கோப் ஒன்று வாங்கி வைத்துக் கொள். எவனாவது என்னைத் தின்றுவிட்டான் என்றால் மங்களூர் நாராயணசாமிக்கு நீ போன் பண்ணிவிடு என்று காசு, விலாசம் எல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டேன்.

அவன் சரி என்று சொல்லிவிட்டான்.

ஏனென்றால் மங்களூர் நாராயணசாமி அவர்தான் காசு நிறையக் கொடுப்பார். நான் காசு இல்லை என்று சொன்னால் நான் இருக்குமிடத்திலிருந்து தந்தி அடித்தால் உடனே காசு வந்துவிடும்.

அதனால் எங்கு போனாலும் சாப்பாடுக்குத் தொந்தரவு இல்லாமல் நான் போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது காசி கங்கைக் கரைக்குப் போனேன்.

அங்கே போய்ப் பார்த்தால் கம்பியில் ஜல் ஜல் என்று வளையம் மாதிரிப் போட்டு "ஆஹா.., ஓஹோ.., ஓஹோ..," என்று  பாடிகொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி ஆடுகின்றார்கள்.

ஆனால் நான் தியானத்தில் இருக்கின்றேன். ஆஹா ஓஹோ என்று ஆடிக் கொண்டு அப்படியே வருகிறார்கள். கத்தியை எடுத்துக் குத்துகின்ற மாதிரி வருகிறார்கள்.

குருநாதர் இதைப் பாருடா..., என்றார். நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என்ன ஆகிவிட்டது?

காளியின் ரூபமாக அவர்களுக்குக் காட்சி கிடைக்கின்றது. காளியைக் கண்டவுடனே “மாதாஜி.., மாப்கரோஜி, மாதாஜி.., மாப்கரோஜி..,” என்று காதைப் பிடித்து இழுக்கின்றார்கள்.

ஏனென்றால், அந்த அகோரமான நிலையில் “கல்கத்தா காளி” என்று சொல்வார்கள். பல மண்டை ஓடுகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காட்சியாகக் கொடுத்தவுடனே எல்லாரும் ஓடுகிறார்கள்.

அங்கே டெலெஸ்கோப்பில் இதைப் பார்க்கின்றார்கள். இரவு 12 மணிக்கு இது நடக்கின்றது. வெளிச்சமும் கொண்டு வருகின்றார்கள்.

ஏனென்றால், குருநாதர் இந்த இயற்கையின் உண்மையினுடைய நிலைகளைச் சொல்லப்படும் பொழுது மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்? என்று அங்கே அனுபவபூர்வமாக எனக்குக் காட்டினார்.

இன்றைக்கும் நாம் பார்க்கலாம் மாந்திரீகம் என்ற நிலையில் மந்திரவாதிகள் மனிதனை உயிருடன் கூடக் கொன்று சாப்பிடுகிறார்கள்.

அதே மாதிரி சுடுகாட்டில் வேகவைக்கும்போது நல்ல பிணங்களாக இருந்தால் அங்கே சொல்லிவிட்டு அகோரிகள் உடனே எடுத்துகொண்டு போகின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சவாரி செய்து அதனுடைய உணர்வைச் செயல்படுத்துகின்றார்கள்.

அதே சமயத்தில் அழகான பெண்கள் திடீரென்று மரணமடைந்தால் அந்த பெண்களை உடனே கொடு என்று இந்த அகோரிகள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள். அதைக் கொண்டு போனவுடனே என்ன செய்கின்றார்கள்?

இயற்கையில் ஆண் பெண் சேர்கின்ற மாதிரிச் சேர்ந்து கொள்கின்றார்கள். அது மேல் உட்கார்ந்து சூடத்தை எரிய வைத்து மந்திரங்களைச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றார்கள்.

நான் சொன்னதை முதலில் யாரும் நம்பவேயில்லை. அப்புறம் யாம் சொன்னது வெகு காலம் கழித்துப் பேப்பரில் வந்தது.

“சாமி.., நீங்கள் டூப் விடுகின்றீர்கள்” என்று நினைத்தேன் நிஜமாவே நடக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்த புத்தகத்தை எடுத்து வந்து காட்டினார் KPK அவர்கள்.

ஆனால், நான் நேரடியாகப் பார்த்தது. வெகு காலத்திற்குப் பிறகு இதை புத்தகமாக வெளிவருகின்றது. ஒரு கவர்னருடைய மகன் கூட இந்த மாதிரிச் செய்கின்றான் என்று சொல்லி அதில் எழுதியிருக்கின்றார்கள்.

ஏனென்றால் நான் சொல்லும்போது KPK நம்பவேயில்லை.

அப்புறம் இதையெல்லாம் பார்த்தவுடனே “சாமி..,” எல்லா உண்மைகளையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள் என்று அப்புறம்தான் அவர் நம்புகின்றார்.

அந்த அகோரிகள் கடவுளுக்காக வேண்டி நான் இருக்கின்றேன். அதற்காக நான் இப்படிச் சாப்பிடுகின்றேன். உலக மக்கள் சேமமாக இருக்கச் சாப்பிடுகின்றேன் என்பார்கள்.

இந்த மாதிரிப் பெரும் தவறுகளை இன்று பக்தி என்ற மார்க்கங்களில் கடவுள் இன்று தனக்கு இங்கு தனியாகக் கொடுக்கின்றார் என்ற நிலைகளில் அவனவன் எடுத்துக் கொண்ட விஷ உணர்வுகள் அவர்களை இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதிலே மடிந்து பூதங்களாகவும் கணங்களாகவும் மாறி அதே மந்திரத்தைச் செய்தால் பிறருக்கு ஏவல் செய்து அவன் குடும்பத்தை அழிக்க இது பயன்படுகின்றது.

ஆகவே, அவன் எதன் உணர்வை எடுத்தானோ அதன் வழியேதான் இயக்கப்படக்கூடிய நிலைகள் வருகின்றது. இன்றைய உலகில் நடக்கும் இதைப் போன்ற கொடுமையான தீமைகளிலிருந்து இனி நீங்கள் மீள வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் எடுக்கப் பழகிக் கொள்தல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி ஒரு பாதுகாப்புக் கவசமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். அருள் வழி வாழுங்கள். எமது அருளாசிகள்.