ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2013

.அகஸ்தியன் கண்ட நிலைகளை நமக்குள் எப்படிச் சேர்ப்பது

1. மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் புறத்தில் இருந்துதான் இழுக்க முடியும்
மகரிஷிகளின், மெய்வழியின் தன்மையின் நிலைகளை எடுத்துக் கொண்டால், அந்த உணர்வின் சக்தியைப் பெறும் தகுதியை, நாம் பெறுகின்றோம்.

சில பேர், தெரியாமல் கீதை புத்தகத்தைப் படித்துவிட்டு, கீதா உபதேசத்திற்குள், அன்று மெய்ஞானி வியாசர் எழுதிய தத்துவத்தை, பிற்காலத்தில் இருப்போர் பலவிதமாக மாற்றிவிட்டார்கள். ஆனால், மாறிய நிலைகள் கொண்டுதான், புத்தகத்தில் படித்து, அதில் ஞானத்தை செலுத்தி சில நூல்களை எழுதி, அதன்படி நடக்கின்றார்கள்.

மெய்ஞானி உணர்வு அவ்வாறு அல்ல. எங்கெங்கோ, தொட்டுத் தொட்டு கொடுத்துக் கொண்டு செல்கிறோம் என்று நினைக்காதீர்கள். இதையெல்லாம்,  உங்களுக்கு அந்த ஞானத்தை வளர்ப்பதற்காக வேண்டி,  அன்று அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள்வழியில், அணுவுக்குள் அணு, இந்த மனித உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது  என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். 

முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால் காலம் அதிகமாகும்.
உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென்ற,
இந்தப் பதிவின் வித்தைத் தான்
உங்களுக்குள், இந்த ஆற்றலை நீங்கள் கிரகித்து,
புறத்தில் இருந்துதான், இழுக்க முடியுமே தவிர,
உள்ளுக்குள் உந்திப் பெறுவது கடினம்.
நம் உடலில் எண்ணிய,  அந்த சக்தியைத் தான் சேர்க்க முடியும்.

இன்று, ஒரு மரத்தின் சத்தான நிலைகள் வரப்படும்போது, விஞ்ஞான அறிவைக் கொண்டு என்ன செய்கின்றோம்? பல பொருள்களை உருவாக்கி, மண்ணிலே போட்டு அதற்கு தகுந்த நீரை விட்டவுடன், அது ஆவியாகப் போனவுடன், பூமியின் ஈர்ப்பலைக்குள் அதனுடைய சக்திகள் மாறி, ஆவியாகி, நீருடன் கலந்து மரத்திற்குள் செல்லும்.

அது இணைந்த பின் தான், காற்றிலிருந்து தன் இனத்தைக் கவர்ந்து கொழு கொழு என்று இருக்கும்.
உரம் அதிகமாகப் போட்டால்,  இதை வேக வைத்துவிடும்.
உரம் அதிகமாகப் போட்டால்,  எல்லாவற்றையும் கருக்கி விடும்.
அதை சிறிதளவு போட்டு,
அதற்குத் தகுந்தவாறு ஆவியாக மாறி,
மரத்துடன் ஒட்டி,
தன் இனத்துடன் சக்தியை இழுக்கும்.
இல்லாவிட்டால், இதையும் கொன்றுவிடும்.

எல்லாச் சக்தியையும், நீங்கள் சீக்கிரம் பெறவேண்டுமென்று, மெய்ஞானியரின் அருள் சக்தியை, உரத்தை அதிகமாகப் போட்டோம் என்றால் என்னவாகும்? சொல்வது அர்த்தமாகிறதல்லவா? இது மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தான், சிறுகச் சிறுக கொடுத்துக் கொண்டுள்ளோம்.

அவர்களுக்கெல்லாம் தெரிகின்றது, எனக்கு தெரியவில்லையே சாமி என்று சிலர் சொல்வார்கள். அவரவர்கள், இதைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளவர்களுக்கு, இதைப் பதிவு செய்யும் போது, இந்த ஆற்றலைப் பெறமுடிகிறது.

அவர்களுக்குத் தெரிகிறது, மக்குத் தெரியவில்லையே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். சக்தியைக் கொடுத்தாலும், பிரித்தாலும் சக்தியின் நிலைகள் குறைவாக இருப்பதனால், அது மூடிக் கொண்டே இருக்கின்றது.

நாம் சிறுகச் சிறுக, எடுத்துத்தான் பெறமுடியும். திடீரென்று எடுத்துக் கொண்டால், இந்த மனித உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அதனுடன் கலந்திருப்பதால்,  இது முழுமையாகப் போய்விட்டால், எதனுடன் கலந்து எண்ணத்தைப் பதிவு செய்திருக்கின்றனரோ,  பின் இந்த சிந்தனையை இழக்கச் செய்துவிடும்.

ஆகையினால், அதை நாம் மாற்றாதபடி, இது, சிறுகச் சிறுக சேர்த்து, நாம் எடுக்கும் புது உணர்வுடன், நினைவலைகளைக் கொண்டு வருவதுதான், பொருந்தும். நாம், புறத்திலிருந்து எதையுமே அதை,  திடீரென்று மாற்றிவிடும் சக்தி செய்வது தவறு.

ஆகையினால் தான், அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு, எமது குருநாதர், எமக்கு எப்படித் தாங்கும் சக்தியினுடைய நிலைகள் கொண்டு, அதைப் பக்குவப்படுத்திக் கொடுத்தாரோ, அதைப் போன்று, நாம் ஆயிரம் பேர் இங்கு இருந்தாலும், நீங்கள் அனைவருமே அந்த அருள் சக்தியைப் பெற்று, அறியாது இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்கவல்ல ஆற்றலாக,  நீங்கள் மாற்றவேண்டும்.

2. ஆழமாகப் பதிவு செய்து, மகரிஷிகளின் ஆற்றலை எண்ணத்தின் தன்மை கொண்டு ஊடுருவி எடுக்க வேண்டும்

இப்பொழுது, நாம் சில செடிகளைப் பார்க்கிறோம். இன்று மழையே இல்லையென்றாலும் கூட, ஆகாசத்தில் நீங்கள் கட்டி தொங்கவிட்டால், காற்றிலே இருக்க கூடிய சக்தியின் தன்மையை, எடுத்து வளரும்.


இன்று கருவேல முள் (சீன முள்) என்று பார்க்கின்றோம். அது காற்றிலே இருக்ககூடிய, நீர் சக்தியை வடித்தெடுக்க கூடிய ஆற்றல், அதற்குள் இருப்பதனால்தான், நீர் இல்லையென்றாலும் அதனுடைய தன்மை இருக்கின்றது.

அதைப் போல், பூமியில் அது வேரூன்றினாலும்,
நீரை ஈர்க்கக் கூடிய சக்திக்கு,
ஆழமாக,  துரிதமான நிலைகளில்
அதனுடைய வளர்ச்சியின் தன்மைகள்
தன் இனத்தை ஈர்ப்பதற்கு,
மிக ஆழமாக ஓடுகின்றது.
இது இயற்கையின் சில நியதிகள்.
 
இதைப் போன்றுதான், அந்தப் பாதுகாப்பான நிலைகள் நாம் பெறுவதற்கு, நாம் எங்கிருந்தாலும்  நம் எண்ணத்தின் உணர்வினுடைய தன்மைகள் ஊடுருவி,  அந்த மெய்ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த ஆற்றலை நாம் பெறவேண்டும்.

நாம் அ, ஆ படித்து,
ஏட்டுப் புத்தகத்தில் பார்த்து,
இப்படி பெருக்கிப் பார்த்து
உங்களிடம் சொல்லி,  எடுத்து
அப்படி,  யாரும் பெறுவதற்கு முடியாது.
அதனால் தான்,  உங்களுக்குள் ஞானத்தின் நிலையை,  பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம். அந்த பதிவின் நிலைகளைத் தான், உங்களுக்குள் பதிவு செய்வதற்கு கொண்டு வருகின்றோம். இப்பொழுதும் அதுதான்.

இந்த அர்த்தத்தினுடைய நிலைகளை, நீங்கள் கண்டுணர்ந்து எடுக்க முடியாது. இந்த மெய் உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்யப் போகும்போது, சரியான முறையில் தியானித்தால், உணர்வின் சக்தியினுடைய நிலைகள் உங்களுக்குள் பதிவாகின்றது.

அப்படிப் பதிவான பின்,
உங்களுக்குள், அடிக்கடி நாம் சொன்ன நினைவு,
அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து,
நினைவுக்குக் கொண்டு வந்தால்,
அந்த எண்ண அலைகள்,
உங்களுக்குள் ஞானத்தைப் பேசும்.

அதன் வழி கொண்ட நிலைகளை நீங்கள் சுவாசித்து, உங்களுக்குள் உணர்வினுடைய நிலைகள் துன்பத்தைப் போக்க, உங்கள் உணர்வின் ஞானம் இங்கே தோற்றுவிக்கும். எமது அருளாசிகள்.