ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2013

துருவ தியானம் - புத்தகம்

சாமி புத்தகம் – துருவ தியானம்
(பக்கம் 7-9)
27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய பரிமாணம், அதிக சக்தி வாய்ந்தது. நட்சத்திரங்களிலிருந்து, பால் வெளி மண்டலங்களிலிருந்து, சூரியனை நோக்கி வரக்கூடியவைகள் சூரியனிலிருந்து பிரிந்து செல்பவைகளைத் தாக்கியவுடனே, இதனுடைய அழுத்தம் தாங்காது, ஒன்றோடு ஒன்று மோதி, மோதி, பலவிதமான கலவைகளாக மாறுகின்றது. இதுதான் நியூட்ரான்.

ஒவ்வொன்றும் மோதும் பொழுது, புதிதாக மாற்றக்கூடிய திறன் பெற்றது என்பது, விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்பு. நியூட்ரான் என்ற நிலை வரப்படப் போகும் பொழுது, பலவிதமாக மாறுகின்றது. அப்பொழுது, ஒன்றுடன் ஒன்றைச் சேர்ப்பது புரோட்டான்.

ஆக, சூரியனிலிருக்கக் கூடிய பாதரசத்தால், மோதிய நிலைகள் வெப்பமானாலும், விஷம் பிரிந்து சென்றாலும், கடைசி நுனியை எடுத்து, ஒரு இயக்கச் சக்தியாக எலெக்ட்ரான் ஆக மாறுகின்றது.

ஒரு உணர்வின் தன்மையை எடுத்து, உணர்ச்சிகள் இயக்கும் பொழுது எலெக்ட்ரான். ஒரு உணர்வைக் கவரப்படப் போகும் பொழுது, நியூட்ரான், புதுவிதமாக மாற்றிக் கொண்டே உள்ளது.

நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருகின்றீர்கள். நீங்கள் நடந்து செல்லும் பொழுது, சாலையில் திடீரென்று ஒரு விபத்து நடக்கின்றது. இந்த விபத்தைப் பார்த்ததும், உங்களிடம் என்ன மாறுகின்றது?

விபத்தின் உணர்வுகள் உங்களுடைய உடலுக்குள் சென்றவுடனேயே,
உங்களுடைய நல்ல குணங்களை மாற்றி,
“கிடு கிடுவென” உங்களை ஆடச் செய்கின்றது.
இதன் உணர்வின் அழுத்தமாகி, ஆக்சிடென்ட்” ஆன உணர்வுகளை
உங்களிடத்தில் கவரும் தன்மை ஆகின்றது.
நல்ல வழியில் இயக்கிக் கொண்டிருப்பது நியூட்ரான்.
புது உணர்வின் தன்மையைச் சேர்த்து,
அதன் வழி இயக்கச் செய்வது புரோட்டான்.

அந்தச் சத்தின் தன்மை கொண்டு, நாம் பைத்தியக்காரனாகச் சுற்றுவோம். அவன் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகள் நம்முள் வந்தால், நாமும் வேதனைப்படுவோம்.

விஞ்ஞான அறிவு கண்டதைக் காட்டிலும், மெய்ஞானிகள் கண்டுணர்ந்தவைகள் ஏராளம். இவைகளையெல்லாம் விஞ்ஞானிகள் கண்டறிய வெகு காலமாகும். இப்படிப் பல உண்மைகளின் நிலையை மக்களுக்கு உணர்த்தும் நிலையாகத்தான், ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.

ஆலயங்களில் தெய்வச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொழுது, நல்ல உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து,
பாலைப் போல மணம் பெறவேண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லைப் பெறவேண்டும்,
பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெறவேண்டும்,
என் குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்,
இந்த ஆலயம் வருவோரெல்லாம் நல் உணர்வுகள் பெறவேண்டும்
என்று நம்மை எண்ணும்படி செய்தனர் ஞானிகள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் இவ்வாறு எண்ணும் பொழுது, நமக்குள் என்ன செய்கின்றது நியூட்ரான்? நம்மிடத்திலிருந்து கவலை, சஞ்சலங்களை எல்லாம் மாற்றுகின்றது. எனென்றால், அதிர்ச்சி கொண்டு உள் செலுத்துவது ஒருவிதம். ஆனால், ஆலயங்களில் அமைதி கொண்டு நல் உணர்வுகளை நமக்குள் செலுத்தும்படி செய்தனர் ஞானிகள்.

அனைவரின் உணர்வுகளும் நமக்குள் இருக்கின்றது. பயந்திருப்போம், வெறுப்படைந்திருப்போம், கோபப்பட்டிருப்போம், ஆத்திரப்பட்டிருப்போம்,  வேதனையைக் கேட்டறிந்திருப்போம். இப்படி, இத்தனை உணர்வுகளும் நமக்குள் இருக்கும்.

ஆகையால், இந்த ஆலயம் வருவோரெல்லாம் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்றும் இந்த ஆலயத்திற்கு வரும் குடும்பமெல்லாம் பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் உள்ளோர் அனைவரும், இந்த நிலை பெறவேண்டும் என்று என்ணி, நமக்குள் கேட்டறிந்த, பிறருடைய தோஷங்களை நீக்க வேண்டும்.
அப்படி நீக்க வேண்டுமென்றால்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் உணர்ச்சிகளை
நமது உடலில் சேர்த்து, மகிழ்ச்சியாக்க வேண்டும்.

நாம் பண்பும் பரிவும் கொண்டு செயல்படுவோம். ஒருவர் தவறு செய்வதைப் பார்த்து, அவர் தவறு செய்கிறார், தவறு செய்கிறார்என்று சொல்லப்படும் பொழுது, கடைசியில் அவரைக் காட்டிலும் பன்மடங்கு தவறு செய்யத் தொடங்குவோம். யார் செய்தது?
தவறு செய்பவரின் உணர்வை நுகர்ந்தோம்.
தவறின் நிலையைத் துடைக்க மறந்தோம்.
அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ஆகவே, இப்படி நம்மை அறியாமல் வரும் தீமைகளைத் துடைக்கும் நிலையாகத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்து, நம்மைப் பரிசுத்தமாக்க வைத்தார்கள். ஆகவே, நாம் அனைவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம், எமது அருளாசிகள்.
(பக்கம் 10-18)
யாம் ஒரு முறை இமயமலைக்குப் போகும் பொழுது, ரிஷிகேசத்தில் இருந்து கொஞ்ச தூரம் போகச் சொன்னார் குருநாதர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒருவர், காயகல்ப சித்தி என்ற கற்றுணர்ந்த உணர்வின் பாடம் கொண்டு, தவமிருந்து பெறவேண்டும் என்ற நிலையில் இருப்பதைப் பற்றி அறிய வேண்டும் என்பதற்காக, எம்மை அங்கே போகச் சொன்னார் குருநாதர்.
அவர், சிவத்தை வணங்கினால் அவனின் நிலையை நாம் பெறுவோம் என்று, “ஓம் நம சிவாயஎன்ற உணர்வையே ஜெபித்து, கல்லறைக்குள் இறக்கச் செய்து, உணர்வின் ஒலி அலைகளை வெளிப்படுத்தி, தன் உடலுக்குள் சிறைப்பட்டிருந்தார்.  இப்படி ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது, யாம் இதைப் பார்த்தறிய வேண்டும் என்பதற்காக வேண்டி, பேரீச்சம்பழமும், பிஸ்கட்டும் வாங்கிக் கொண்டு சென்றோம். குருநாதர் சொன்ன குறிப்பிட்ட இடத்திற்கு சென்றேன். அங்கு ஒரு சிறிய கோயில் இருந்தது,

அங்கே உட்கார்என்றார், குருநாதர்.

யாம் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்தோம். தியானம் செய்து கொண்டிருந்த பொழுது, எங்கேயோ பெய்த மழை, தண்ணீர் வெள்ளமாக வந்தது. ஒரே அடியில், எம்மை கோயில் சுவரோடு சேர்த்து மோதச் செய்தது. தண்ணீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்தது. தண்ணீரால் குளிர் அதிகமானது. யாம், இடுப்பில் ஒரு வேஷ்டி மட்டும் கட்டியிருந்தோம், அதுவும் நனைந்துவிட்டது.

பையில் வைத்திருந்த பேரீச்சம்பழமும் தண்ணீரோடு போனது, பிஸ்கட்டும் கரைந்து போனது. இதனால், எமது அடுத்தவேளை சாப்பாடும் போனது. தண்ணீர் மட்டம் 7 அல்லது 8 அடி உயரம் இருந்தது. தண்ணீரோடு சேர்ந்து, கோயில் சுவற்றின் மேலே ஏறி நின்று கொண்டோம். அதற்கு மேலும் ஒரு அடி தண்ணீர்.

சரி, இன்று நம்மை குருநாதர் தண்ணீரிலேயே போ, நீர் சமாதி என்று சொல்லுவார்களே, அது போன்று நமக்கு இன்று நீர் சமாதிதான், இந்த உடலில் திரிந்தது போதும், நீர் சமாதி ஆகிவிடுஎன்று குருநாதர் சொல்லிவிட்டார் என்று இந்த உணர்வுகளில் இருந்தோம்.

பிறகு குருநாதர் எமக்கு நினைவுபடுத்தினார், “உன்னை எதை எடுக்கச் சொன்னால், நீ எதை எடுத்துக் கொண்டிருக்கின்றாய், தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு, தண்ணீர் உன்னை இழுக்காத வண்ணம் உன் உணர்வைக் கொண்டுவரச் சொன்னால், சுவற்றின் மேல் ஏறி உன்னை எதை எண்ணச் சொன்னது? வானுலக உணர்வை உனக்குள் எடுத்து, அந்த உணர்வை வலு சேர்த்து, நீ எதிர்த்து நில்  என்று கூறினார், குருநாதர்
பின், குருநாதர் உபதேசித்த உணர்வை எடுத்தோம்.  அதன் பின் தண்ணீர் மேலும் 1.5 அடி உயரம் வந்தது, பிறகு சிறிது நேரத்தில் சர சர என தண்ணீர் மட்டம் குறைந்தது.

இது எப்பொழுது நடந்தது? அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் இருக்கும். அந்த நேரத்தில், வியாசகரைப் போன்று விண்ணின் உணர்வுகளை எடுக்கச் சொல்லுகின்றார்.

குருநாதர் சொன்ன உணர்வை வலிமை ஆக்கிய பின், யாம் நின்றிருந்த கோயில் சுவற்றிலிருந்து இறங்குவதற்கு படிகள் இல்லை. ஆகவே கீழே குதித்தோம்.

குதித்து கீழே வந்து பார்த்தால், கோயிலுக்கு முன் பெரிய விருட்சம் பெரிய விழுதுகளுடன் இருந்தது. விழுதுகளுக்குள் சென்று பார்த்தால், கல் கட்டிடம் தெரிந்தது. அதற்குள்ளிருந்து,
ஓம் நம சிவாய, ஓம் நம சிவாயஎன்று சப்தம் வந்தது.
அந்த சப்தத்துடன், நல்ல மணங்களும் வந்தன.

அப்பொழுது குருநாதர் சொன்னார், பிறவியில்லாத நிலை அடைதல், காயகல்ப சக்தி பெறுதல் என்று சொல்கின்றார்களேஅந்த நிலையில், மற்ற எந்த உடலுக்குள்ளும் செல்லாது, தன்னுடைய உடலுக்குள்ளே சிறைப் பிடித்து வைத்தது போன்ற நிலையில், கடும் தவம் இருக்கின்றார்.

ஆனால், அவரால் தன் உடலில் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளியைத் தெரிய முடியவில்லை.  இங்கே சமாதியாகி, 1000 வருடங்கள் ஆகிவிட்டது. 1000 வருடத்தில் அவருடைய உடலின் நிலையைப் பார்.
உணர்வை ஒளியாக்கி, அதிலேதான் இருக்கின்றது.
ஆனால், பலன் ஏதும் இல்லை.

ஆக, அவர் அழியா ஒளிச் சரீரம் என்ற பாடநிலையை கற்றுக் கொள்ளவில்லை. திருமணம் அவருக்கு ஆகவில்லை.  சிவனை அடைய வேண்டும் என்று நினைத்தார், இந்த உடலான சிவனுக்குள் தான் அடைப்பட்டிருக்கின்றார். இதை நீ எப்படி மாற்றப் போகின்றாய் என்றார், குருநாதர்.

 அதன் பிறகு குருநாதர் சொன்னார். இவர்கள் கடுமையான தவம் பெற்றவர்கள். இந்த உணர்வுகள் உனக்குள் பட்டதனால், ஓதி அவர்களுடைய உணர்வை எடுக்க முடியாது.

அவருடைய ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று, நினைவலைகளை உக்குள் பரப்பு. அவர், தாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியின் சரீரம் பெறவேண்டும், பேரின்பப் பெருநிலை அவர் பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொள், என்று கூறினார்.

 குருநாதர் உரைத்த வண்ம், உணர்வின் ஒலி அலைகளை யாம் எடுத்துக் கொண்ட பின், தவமிருந்த உடலிலிருந்த அந்த ஆன்மா வெளியில் வந்தது.

அப்பொழுது, யாம் எண்ணியபடி விண் சென்றடைந்தது, ஒளியின் சரீரம் பெற்றது. அப்பொழுதுதான் , அவ்வளவு தவமிருந்தவருடைய உணர்வையும், அருளையும் யாம் பெற முடிந்தது.

சாதாரண நிலையில், இன்று நாம் ஒன்றுமே செய்திருக்க முடியாது.  இப்பொழுது உடலை விட்டு பிரிந்தவர்களை, பார்த்தவுடனே விண் செலுத்துகின்றோம் என்றால், என்ன காரணம்? 
1000 வருடம் தவமிருந்த அந்த உயிராத்மாவை
விண் செலுத்திய” அந்த உணர்வின் வலுவை எடுத்துத்தான்,
இவர்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கின்றோம். 

இப்படி இணைக்க வேண்டுமென்றால், முன்னால் அங்கே விண்ணில் பெரியவர்கள் இருக்கவேண்டும். அவர்களின் உணர்வின் தன்மையினைப் பெற்றுத் தான் இங்கே எடுக்க வேண்டும். குருநாதர் காண்பித்த அருள் வழியில், இவைகளை யாம் தெரிந்து கொண்டோம். ஏனென்றால் அவர்கள் சக்திவாய்ந்தவர்கள்.

ஆக, 1000 ஆண்டு தவமிருந்த அவர், தான் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை. வாழ்க்கையின் நிமித்தங்களாலும், அறியாமையினாலும் தான், தன் உயிராத்மாவை உடலுக்குள் சிறைப்பிடித்து வைத்தார்.

ஆனாலும், இப்படிப்பட்ட ஆன்மாக்களையும் ஒளியின் சரீரமாக்க முடியும் என்பதை எமக்கு உணர்த்த, அங்கே காட்டிற்குள் எம்மை அனுப்பி, அதன்வழி பெறும்படி செய்தார் நம் குருநாதர்.

இதைப் போன்று, உடலை விட்டு பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர்களை நினைவு கூர்ந்து, பதிவாக்கி, விண் செலுத்தினால், அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் கரைகின்றன. ஒளியின் சரீரமாகின்றது.

பௌர்ணமி நாட்களன்று, இரவு 7,00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் சப்தரிஷி மண்டலம் அருகில் வருகின்றது.
அது சமயம் நாம் கூட்டமைப்பாக இருந்து,
உடலை விட்டுப் பிரிந்து சென்ற
நம்முடைய முன்னோர்களின் உயிரான்மாக்களை,
விண் செலுத்தும் உணர்வை எடுக்கும் பொழுது, 
துரித நிலை கொண்டு விண் செலுத்தலாம்.
அவர்கள் உடலில் பெற்ற நஞ்சினைக் கரைக்கலாம்.

மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில், அருள்ஞான வித்தை யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம். அதை தியானித்து, உங்கள் உடலுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உரமாக்குங்கள். உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் பெறச் செய்யுங்கள். மெய்வழி செல்லும் பாதையை, அது வகுத்துக் கொடுக்கும். மெய்வழி வாழ்வோம். அருள்வழி வாழ்வோம்.

(பக்கம் 19-20)
கருப்பணசாமிக்கு, மோப்ப நாயை வைத்திருக்கின்றார்கள். காரணம்
ஒருவர் நம்மைப் பார்த்து, பழி தீர்ப்பேன் என்று
சொன்ன உணர்வை நுகர்ந்தபின்,
நமக்குள் என்னவாகின்றது?
நமக்குள் இருள் சூழுகின்றது. வேதனை பெருகுகின்றது.

ஓம் நம சிவாய, சிவாய நம ஓம் எனும் நிலையாக, அவர் நம்மைப் பழி தீர்ப்பதற்கு முன்னால், நாம் அவரைப் பழி தீர்க்க வேண்டும், வெட்ட வேண்டும், குத்த வேண்டும் என்ற நிலை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லை. இதனின் உணர்வின் தன்மை உடலில் விளைகின்றது.
கருப்பணசாமியின் கையில் அரிவாளையும் கொடுத்து, மோப்ப நாயையும் கொடுத்திருக்கிறார்கள். கருப்பணசாமிக்கு என்ன செய்கிறோம்? ஆட்டை வாங்கி உனக்குக் கொடுக்கிறேன். படையல் செய்கிறேன் என்னைக் காப்பாற்று என்று சொல்லி வணங்குகின்றார்கள்.

ஆட்டை அறுத்துக் கொலை பண்ணி சாப்பிட்டு, மிச்சத்தைக் கருப்பணசாமிக்குக் கொடுத்தால், கருப்பணசாமி என்னைக் காப்பாற்றுவான், என் மகனைக் காப்பாற்றுவான், என்று இருக்கின்றார்கள்.

இப்படி ஆட்டைப் பலி கொடுத்து வணங்கினால் என்னவாகும்? இது சமயம், நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது உடலில் “நல்ல குணங்களைக் கொல்லுகின்றது”.
இது என்ன செய்யும் என்றால்,
நாம் தீமையின் நிலைகள் கொண்டு,
பிறரிடம் இதே செயலைச் செயல்படுத்தச் செய்யும்.

புற வாழ்க்கையில் இப்படி என்றால், நமது அக வாழ்க்கையில் நமது நல்ல குணங்களைக் கொல்லுகின்றது. இதற்காகத் தான் கருப்பணசாமியை முச்சந்ததியில் வைத்தார்கள்.

சாலையில் சென்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, யாராவது சைக்கிளில் வந்து மோதி விட்டால், நமது உணர்வுகள் இருள் சூழ்ந்துவிடுகின்றது. “அடித்துவிடுவேன், உதைத்து விடுவேன்” என்று சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.

ஆனால், “சாலையில் கவனமாக வண்டி ஓட்டு” என்று கூறினால், சாந்தமும் அமைதியும் அங்கே நிலவும். அதை விடுத்து, சைக்கிளில் வந்து மோதியவன் சிறுவனாக இருந்தால், “பளார் பளார்” என்று நான்கு அறை விடுவோம்.

இதை உணர்த்தத்தான் கருப்பணசாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏதாவது ஒன்று என்றால் தாக்குவதுதான்.

ஆனால், இது போன்ற சந்தர்ப்பங்களில், நாம் என்ன செய்யவேண்டும்? துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி, அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டு, பின், அவர் அறியாமையிலிருந்து விடுபட்டு, பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எங்கி தியானிக்க வேண்டும்.

ஏனென்றால், துருவ நட்சத்திரம் நஞ்சை வென்றது. உணர்வின் தன்மையை ஒளியாக்கும் திறன் பெற்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்வதால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் உயிரில் பட்டு, இதனின் உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலக்கும் பொழுது, அரங்கநாதன்.

இதனின் உணர்வின் உணர்ச்சிகளை, ஒளி அலைகளாக மாற்றுகின்றது. துருவ நட்சத்திரம், இருண்ட உலகிலிருந்து நம்மை மீட்கின்றது.
நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
(பக்கம் 23-26)
நாம் இரக்கம், ஈகை, அன்பு கொண்டு வாழும் பொழுது, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நமது மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்ற பொழுது, அதற்கு மாறாக, அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், வேதனைப்படுகின்றோம்.
இதனால் வேதனையின் உணர்ச்சியாகி,
“அவன் இப்படி இருக்கிறானே சரியாகப் படிக்கவில்லையே,
அவனின் எதிர்காலம் என்னாவது” என்று எண்ணி
இதனைச் சமைத்து, நமது உடலையும் கெடுத்து,
அவனிடத்திலும் கோபப்பட்டு, வேதனைப்படுகின்றோம்.

அவ்வாறு வேதனைப்பட்டு, அவனிடம் “ஏன்டா இப்படி இருந்தால் என்னாவது” என்று சொல்லும் பொழுது, இதனின் உணர்வுகள் அவனுடைய உடலில் பாயும். இதனால் அவன் இன்னும் அதிகமாக படிப்பிலும், செயலிலும் மந்தமாவான்.

“அவன் படிக்கவில்லையே, இப்படிச் செய்கிறான்” என்று எண்ணும் பொழுது என்ன செய்கின்றது? வாலி என்ற உணர்வுகள் நமக்குள் போய், நமது உடலில் அவன் மீது இருக்கும் பிரியத்தை எல்லாம் கெடுத்துவிடுகின்றது.

பிறகு “அவனை உதைத்தால்தான் சரிப்பட்டு வரும். அவன் தொலைந்தால் பரவாயில்லை” என்ற உணர்வு கொண்டு, நாம் அடிக்கடி இப்படி எண்ணினோம் என்றால், நாம் எண்ணும் அந்த உணர்வுகள், அவனை அங்கே வழிநடத்தச் செய்கின்றது.

தந்தையான நாம் மகனைப் பார்த்து, “டேய் இங்கே வாடா” என்று முறைத்துப் பார்த்துக் கொண்டே அழைப்போம்,

அதற்கு மகன், “அன்று என்னைத் திட்டினாய், இன்று என்னை நீ ஏன் கூப்பிடுகிறாய்” என்பான். இதைத் தடுத்து நிறுத்த, நாம் என்ன செய்ய வேண்டும்?

“துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நான் பெற வேண்டும், என் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள், ஜீவ அணுக்கள் பெற வேண்டும்” என்று எண்ணி, நமது உடலில் எழும் வேதனையின் உணர்வுகளை, முதலில் அடக்க வேண்டும்.

பின், தன் மகன், “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும், அவன் உடல் முழுவதும் படர வேண்டும், அவன் அருள்ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்” என்று
இதனின் உணர்வுகளைச் சமைத்துவிட்டு,
பின் இதன் நிலை கொண்டு
நல் அறிவுரையை அவனுக்குச் சொல்ல வேண்டும்.

இராமாயணத்தில் என்ன சொல்கிறார்கள்? வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, அது நமக்குள் வாலியாகின்றது. நமது உடலிலுள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.

சுக்ரீவன், எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். மனிதரில் அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானவர். எல்லாத் தீமைகளையும், நீக்கும் வல்லமை பெற்றவர். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வுகளைத்தான், சுக்ரீவன் என்று அழைத்தார்கள் ஞானிகள்.
"துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடல் முழுவதும் படர வேண்டும்” என்ற உணர்வை நமக்குள் வலிமையாக்கினால் என்ன ஆகின்றது?
மகனால் வேதனைப்பட்ட உணர்வுகள்,
இங்கே நமக்கு முன்னாடி
நமது ஆன்மாவில் இருக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்
நமக்குள் வலிமையானபின்,
வேதனையால் வந்த தீமையின் உணர்வுகளை,
நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கி விட்டுவிடும்.

இப்படி நமது ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகும் பொழுது, அதனின் உணர்வுகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து கொண்டு, மேலே சென்று விடுகின்றது. இதன் மூலம், நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

இப்படிச் சுத்தப்படுத்திக் கொண்டபின், “அவன் கல்வியில் ஞானம் பெறவேண்டும், அருள் ஞானிகளின் அருள்சக்தி பெறவேண்டும், அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்” என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி, இதனின் உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.

பின் அவனிடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியதைப் பற்றி சொல்லாகச் சொல்லப்படும் பொழுது, சீதா, இதைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும், காந்தமும், கவர்ந்து கொள்கின்றது. ஆகவே இது பரப்பிரம்மம். எந்த சுவை இணைந்ததோ, அதன் மணம் வரும்பொழுது ஞானம்.

அப்பொழுது, தன் மகனைக் கண் கொண்டு பார்த்து “அவன் அருள்ஞானம் பெற வேண்டும்” என்று, சொல்லால் சொல்கின்றோம்.
அவன் இதைக் காதால் கேட்கின்றான்.
அவனின் கண் கவர்கின்றது.
உயிரால் நுகரப்படும் பொழுது,
நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி
அவனை ஆளச் செய்கின்றது. “ஆண்டாள்”.

நாம் இப்படிச் சமைத்து சொல்லக் கூடிய சொல்லை, சூரியன் எடுத்துக் கொண்டால் சீதாராமன். இதனின் சுவைக்கொப்ப, உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

இப்படி, இதனின் உணர்வுகள் அவனுக்குள் பதிவானதால், நாம் வெளியூருக்கு எங்கும் சென்றால், அங்கிருக்கும் பொழுது தன் மகனின் மீதான ஞாபகத்துடன் இருந்தால், அதனின் உணர்ச்சிகள் அவனைத் தூண்டச் செய்கின்றது. சுவையின் உணர்ச்சியை, அறியும் தன்மை வருகின்றது.
இப்படி நாம் சொன்னவுடனே, வாயுபுத்திரன் “ஆஞ்சநேயன்” இராமனின் பக்தன் அவன் ஒரு மந்திரி. ஆக, அவன் இராமனின் தூதுவன்.  நாம் எண்ணிய நல்ல எண்ணங்கள் வாயுவாகச் சென்று, அங்கே இயக்குகின்றது.

இதனால், மகன் சோர்விலிருந்து விடுபட்டு, சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறுகின்றான். குடும்பத்தில் ஒற்றுமையும், பண்பும், மகிழ்ச்சியும் ஏற்படும், எமது அருளாசிகள்.
(பக்கம் 28-30)
பழனி கோவிலுக்குச் சென்றால் அங்கே, “இது அபிஷேக விபூதி” என்று ஏமாற்றுகின்றார்கள். “விபூதி” அபிஷேகத்திற்கு போகவில்லை என்று தெரிகின்றது. ஆனாலும், பரவாயில்லை பழனியாண்டவர் சன்னதிக்கு வந்து விட்டோம் என்று, விளம்பரத்தைப் பார்த்து வாங்குகின்றோம்.
பழனில் முருகனின் அருளைப் பெறலாம் என்று வருபவர்களை ஏமாற்றிக் கொண்டுதான் உள்ளார்கள். நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

நாம் முருகன் ஆலயத்தில், நேரடியாகச் சென்று வணங்க தடை ஏதும் இல்லை. ஆனால், பழனி ஆலயத்திற்குச் சென்று, தன் கண் திருஷ்டி தீரவேண்டும் என்று, சிதறு தேங்காய் போடுவார்கள். இதில், சிதறு தேங்காய் எடுக்கும் உரிமை பெற்ற காண்ட்ராக்டர்கள் என்ன செய்வார்கள்?

தேங்காய் உடைக்க வருபவர்களிடம், இங்கேதான் உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில், வேறு ஒரு இடத்தில் உடைத்தால், வேறு காண்ட்ராக்டருக்குத்தான் போகும் என்று, அப்படிச் சொல்கின்றார்கள்.

சிதறு தேங்காய் உடைக்க வருபவர்கள், “நான் சாமிக்கு முன்னாடிதான் உடைப்பேன்” என்று சொன்னால் கூட, இந்தக் காண்ட்ராக்டர்கள் விடுவதில்லை. அவரை மறித்து, “இங்கே தேங்காயை உடை” என்று கட்டாயப்படுத்துவார்கள்.

“நம்மை தெய்வம் காக்கும்” என்று நினைக்கின்றோம் அல்லவா!
நாம் தெய்வத்தை வணங்கி வந்தோம் அல்லவா!
அந்த தெய்வம், இங்கே அவர்களுக்கு
நல்ல வழியைக் காட்ட வேண்டும் அல்லவா?
ஆசையின் நிலைகொண்டுதான் இதையெல்லாம் செய்கின்றனர்.

இதைத்தான், இராமாயணத்தில் என்ன சொல்கின்றார்கள்? வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்கு பிரம்மகுரு, என்று அதில் உணர்த்தியுள்ளார்கள்.

நாம் என்ன செய்கிறோம்? சிதறு தேங்காய் போட்டால், கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்று நம்புகின்றோம். அப்பொழுது, இது வசியம். அதைக் கவர்ந்து கொள்ளுகின்றோம்.

நுகர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் பிரம்மமாகின்றது.
நாம் எண்ணிய எண்ணம் அருந்ததி,
நமக்குள் பதிவாகிவிடுகின்றது.
எப்படியும், கஷ்டப்பட்டாவது செய்தால்தான் நன்றாக இருக்கும். செய்யவில்லை என்றால், சாமி கோபித்துக் கொள்ளும் என்ற நிலைகளில் தான் போகின்றார்கள்.

சிதறு தேங்காயைப் போட்டால், காண்ட்ராக்டர் எடுத்து விற்றுக் கொள்கிறார். இதே போன்று, பக்தர்கள் கோவிலுக்கு சேவலையும் நேர்த்திக்கடனாகக் கொண்டு போய் விடுகின்றார்கள். கோவிலில் கொண்டு போய் கோழியையோ, சேவலையோ விட்டால், அவைகள் பத்து நாளைக்கு பட்டினி இருக்கும்.
            
“சேவற்கொடியோனே” என்று சொன்னால், நாளை வரக்கூடிய நிலைகளை, தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது. ஆறாவது அறிவு.

இதற்குத்தான், முருகனை “சேவற்கொடியோனே” என்று ஞானிகள் அழைத்தார்கள். காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப்போன்று, ஆறாவது அறிவு பெற்றவர்கள், உண்மையின் உணர்வை அறியக்கூடியவர் என்று, “சேவற்கொடியோனே” என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

ஆனால், சேவலை நேர்த்திக்கடன் கொடுக்கிறேன் என்று சொல்லி, தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, காண்ட்ராக்டர் எடுத்துச் சென்று, சேவல் கொல்லப்படும் வரையிலும், அது இரண வேதனை அடைகின்றது.

சேவலை சாமிக்கு அர்ப்பணித்து, காண்ட்ராக்டர் கையில் கொண்டு போய்க் கொடுத்து, சேவலைப் பத்து நாளைக்கு பட்டினியாகப் போடும்பொழுது, சேவல் இவருடைய உணர்வை நினைத்தால், சேவலின் ஜீவன் என்ன பண்ணும்? “பாவி, என்னைப் பட்டினி போட்டுக் கொல்கிறானே? என்று எண்ணும்.

சேவல்களை ஏலம் போடுவதற்கு முன்னால், அவைகள் படும் அவஸ்தையைப் பார்த்தால், நமக்கு மிகவும் வேதனையாக இருக்கும். சேவலை முருகனுக்கு வேண்டி, சும்மா பறக்க விட்டு விட்டுச் சென்றால் கூட, யாராவது பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். தொந்தரவு இல்லை.

சேவல் கொடி கட்டியிருக்கும் இடத்திலேயே, சேவலைப் போட வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
நம்முடைய ஆசையின் நிமித்தம்
நம்முடைய அறிவை இழந்து, என்ன செய்கின்றோம்?
அருள் ஒளியை நமக்குள் கூட்டி,
இருளை நீக்கி உண்மையின் உணர்வை ஊட்டும்,
நமது ஆறாவது அறிவைத் தெளிவாக்கும் ஞானஸ்தானத்தையே, சூனியமாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

மனிதரை அறியாமையிலிருந்து விடுபடச் செய்து, உண்மையை அறிந்துணர்ந்து, தெளிந்து வாழச் செய்யும் நிலைக்கே ஆலயங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டன.

ஆகவே, இதனின் உண்மைளை அறிந்த நாம் ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது, கனியின் சுவையின் இனிமை, என் சொல்லிலும், செயலிலும் நான் பெற வேண்டும், மலரைப் போன்ற மணம் நாம் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும்.

தெய்வச் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளைக் காணும் பொழுது, “தங்கம் போன்று மனம் மங்காத நிலை” நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும், இதன் நிலைகள் பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரது குடும்பங்களிலும், அருள் சக்தி படரவேண்டும். அவர்களது குடும்பங்களில் உள்ள அனைவரும் தெளிந்த ஞானமும், மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும், என்று எண்ணுதல் வேண்டும்.

இதன் நிலைகள் கொண்டு, நம்முள்ளும் அருள் ஞான சக்தி பெருகுகின்றது. நமது வாழ்க்கையும், அருள் ஞான வாழ்க்கையாக அமைகின்றது.

ஆலயங்களுக்குச் சென்றால், இப்படித்தான் ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும். எமது அருளாசிகள்.
(பக்கம் 33-38)
தியானம் செய்யக் கற்றுக் கொண்டவர்கள், கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், “ஓம் ஈஸ்வரா என்று, புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி. அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று. நன்றாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு, கருவிலே இருக்கும் அந்தக் குழந்தைக்கு,
மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று
அந்தக் கருவிலே இருக்கும் குழந்தையை
சிறிது நேரம் நினைத்து, அதை தியானியுங்கள்.

கருவிலே இருக்கும் குழந்தைக்கு, அந்தத் தாய் தான், ஞானப் பாலை ஊட்ட வேண்டும். அப்படி ஞானப் பாலை ஊட்டி, அந்தக் குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.

உலகிற்கு, அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சொல்லும், மிளிரும் தன்மையாக, அது பெற்ற உணர்வின் சக்தி பேரண்டத்தின் பேருண்மைகளைச் சுலபமாகப் பெற்று, தனக்குள் விளைய வைத்து, அந்த மூச்சுஅம்மாஎன்ற மழலைச் சொல்லின் நிலைகள் உங்களுக்குள் இனிமையூட்டும். அந்த மெய் ஒளியின் தன்மைகள், உங்களுக்குள்ளும் வளரச் செய்யும். அதுவும் வளரும்.

அந்தக் குழந்தை இடும் மூச்சலைகள், இந்த நாட்டுக்கும் உதவும், மற்றவர்களுக்கும் உதவும். ஆகவே, எதிர்கால சிசுக்களை இப்படி உருவாக்குங்கள். அதற்காக வேண்டி, வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் கர்ப்பமுற்றபின், அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும், தெய்வீகக் குடும்பமாக மாற்ற வேண்டும். அது சமயம், ரோஜாப்பூவும், குங்குமப்பூவும், கல்கண்டும், தேனும் கலந்து, ஒரு பாட்டிலில் ஊற வைக்க வேண்டும். அதைப் பத்து மாதமும், கர்ப்பமுற்ற தாய்க்குக் கொடுத்து பழகுதல் வேண்டும்.

அதிகாலையில், குடும்பத்துடன் துருவ தியானத்தை எடுத்து, அகத்தியர் துருவனாகி, அணுவின் இயயக்கத்தை அறிந்து, துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ மகரிஷியாகி, கணவனும், மனைவியும் ஒன்றென இணைந்து, ஒளியின் சரீரமான அவர்களின் பேரருளை, கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும், என்று தியானிக்க வேண்டும்.

கருவிலிருக்கும் அந்தக் குழந்தை, உலக ஞானம் பெற்று, உலகைக் காத்திடும் அருள்ஞானியாக உருவாகிட வேண்டும். உலகைக் காத்திடும் பேரருள் ஞானியாக ஆக வேண்டும் என்று, குடும்பத்துடன் அனைவரும் சொல்லப்படும் பொழுது, இதனின் உணர்வுகளை கருவுற்றிருக்கும் தாய் தன் செவி வழி கவர்ந்து, தன் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது, இதனின் உணர்வுகள், கருவினில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கின்றது. இப்படிச் செய்தோமென்றால்,
நமது குடும்பத்தில் சாப அலைகள் இருப்பினும்,
தீய அலைகள் இருப்பினும்,
பாவ அலைகள் இருப்பினும்,
பூர்வ ஜென்ம அலைகள் இருப்பினும்,
இதையெல்லாம் தகர்த்தெறியும் பெரிய ஞானியாக அவன் உருவாகுகின்றான்.

அவன் வளர வளர, குடும்பத்திலுள்ள சர்வ தோஷங்களையும், சர்வ ரோகங்களையும் நீக்கிடும் தன்மையும், பேரருள் என்ற உணர்வை வளர்க்கும் தன்மையும், பெறுகின்றான். இதனால், அந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, அவர்களுடைய ஊரிலும், தெருவிலும், அருள்ஞானியின் உணர்வுகள் படர்கின்றன.

இப்படி இதன் வழியில் குழந்தைகளை உருவாக்கினால், அவர்கள் பிறந்தபின், இருளை அகற்றி, மெய்யுணர்வை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.
நாமும் இந்த நிலை பெற்றால், அந்தக் குழந்தைகள்
நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வதும்,
நமக்குள் இருக்கும் சாப அலைகளை மாற்றிடும்,
அருள் ஞானியாகவும் ஆகின்றான்.

பண்டைய காலங்களில், அரசர்களின் மனைவிமார்கள் கர்ப்பமுற்றால், அரசர்கள் கர்ப்பமுற்ற தங்கள் மனைவிமார்களை அமர வைத்து, தங்களுடைய நாட்டின் பெருமைகளையும், பிற நாடுகளை எப்படி வெல்ல வேண்டும் என்றும், எதிரிகளை வெல்ல எந்த நிலை பெற வேண்டும் என்றும், மற்ற பிற நிலைகளையும் குருகுலமாக வைத்து ஓதி, கருவில் வளரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள்.

ஆக மிக பலசாலியாகவும், அதே சமயத்தில் தன் தாய்நாட்டைக் காக்கும் நிலைகளிலும், அந்தக் குழந்தை வளரும். இப்படி, அரசர்கள் தங்கள் நாட்டைக் காப்பதற்காக வேண்டி, தங்கள் குழந்தைகளை இது போன்று உருவாக்குவார்கள்.

அன்று அரசர்கள் எடுத்துப் பயன்படுத்திய கத்தி, வாள் போன்ற ஆயுதங்களை, நாம் இரண்டு கையாலும் தூக்க முடியாது ஆனால், அவைகளை அரசர்கள் ஒரு கையாலே தூக்கி, விளையாடுவார்கள். ஏனென்றால், மிருக தசைகளை அதிகமாகக் கொடுத்து, மிருகங்களுக்கு உண்டான வலுவை, உடலிலே ஏற்றியிருப்பார்கள்.

ஆனால், நீங்கள் குடும்பத்துடன் துருவ தியானத்தில் அமர்ந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை, இல்லம் முழுவதும் படரச் செய்து, குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த சக்தியைக் கிடைக்கச் செய்து, தெய்வீகக் குடும்பமாக, சஞ்சலங்களும், குறைகளும் இல்லாது நிறை கொண்டவர்களாக வாழ்ந்து, துருவ தியானத்தின் பொழுது கர்ப்பமுற்ற பெண்ணிற்கு, குங்குமப்பூவும், தேனும், கலகண்டும், ரோஜாவும் கலந்த பாகை, குடும்பத்துள் உள்ளோர் அனைவரும், கொடுங்கள்.

இது சமயம், கருவில் வளரும் குழந்தை, மலரைப் போன்ற மணமும், மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று, அருள் மகரிஷியாக வளர வேண்டும். அவனுடைய பார்வையில், சர்வ தோஷங்களையும் நீக்கிடும், சர்வ நோய்களைப் போக்கிடும் அருள் சக்தியும் அவன் பெற வேண்டும்.

விஞ்ஞான உலகால் வரும், அஞ்ஞானத்தை அகற்றி, மெய்ஞானத்தைப் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தியும், அவன் பெற வேண்டும் என்று எண்ணி, தேன் கலந்த பாகை கருவுற்ற பெண்ணிற்குக் கொடுங்கள்.

இதைப்போன்று 10 மாதமும் கொடுத்து உருவாக்கிவிட்டால்,
இன்று விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞானத்தை அகற்றிடும்,
உங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப அலைகளை நீக்கிடும்,
பாவ அலைகளைப் போக்கிடும்,
எத்தகைய நிலைகளையும் மாற்றும்
அரும்பெரும் சக்தி கொண்ட ஞானியாக,
அந்தக் குழந்தை வளரும்.

நாம் ஒருவருடன், அன்புடன் பண்புடன் பழகியிருந்தால், அவர் இறந்தபின் அவருடைய ஆன்மா, பற்றுக்கொண்ட நமது உடலுக்குள் வந்துவிடுகின்றது. பின், அந்த ஆவியின் உணர்வே உங்களுக்குள் இயக்கச் செய்கின்றது.

இப்படி, குடும்பத்தில் அறியாது தீய வினைகளைச் சேர்த்த ஒருவர் சாபம் விடும்பொழுது, உற்று நோக்கினால் அந்தச் சாப அலைகள் உங்களுக்குள் வந்து, உங்களுடைய குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

யாரும் உங்களுக்கு சாபம் விடவேண்டாம். வேறு யாருக்கோ விடும் சாபம் கூட, உங்களில் இணைந்து உங்களைச் சீரழிக்கும்.

இதைப் போன்று, சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே, நமது குடும்பத்திலும், உடலிலும், ஆட்டிப்படைக்கும் நிலை வருகின்றது.

இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால், உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை, அருள்ஞான நூல்களைப் படிக்கச் செய்யுங்கள். அருள்ஞானவழி, வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

தபோவனத்தில் வெளியிடப்பட்ட நூல்களையும், வாங்கிப் படிக்கச் செய்யுங்கள். பிறரைப் படிக்கச் சொல்லி, செவி கொடுத்து கேட்கச் செய்யுங்கள். இதனால், பிறக்கும் குழந்தை அருள்ஞானக்  குழந்தையாகப் பிறக்கும்.

குடும்பத்தில், சாப அலைகளை நீக்கும் அருள் சக்தியும், உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும், குடும்பத்தில் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும், கருவில் உள்ள குழந்தைப் பெற்று அருள் ஞானியாக உருவாவான்.

ஆயுத உனர்வுகள் பெருகி, உலக அரசியலில் ஆயுதங்கள் பெருகி உலகமே சீர் குலையும் தன்மை வருகின்து. நான்கு வருடங்களுக்கு (2004) மேல், இத்தகைய தீவிரவாத தன்மை பெருக இருப்பதனால்,
14 வருடத்திற்குள் (2014க்குள்)
ஞானிகளின் உணர்வுகளை உருவாக்கி,
அவர்களுடைய உணர்வுகளை பரவச் செய்து,
உலகில் பரவி வரும் தீவிரவாதத்தை அடக்கிடும்
அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்குதல் வேண்டும்.

ஏனென்றால், பேரருளின் உனர்வுகள் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பெறச் செய்யப்படும் பொழுது, அவனின் உணர்ச்சிகள் உலகில் பரவிப் படரும் நிலை வரும்.

அனைத்து மக்களும், தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை, பேரொளியைப் பெற்று, தம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றி, நஞ்சினை வென்று, பேரருள் உணர்வுகளை தம்முள் பெருக்கி, மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று, இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்ஞானம் பெற்று, பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்சக்தி பெற்று, பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்ஞான வாழ்க்கை அமைந்து, இவ்வாழ்க்கையில் பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.
(பக்கம் 54-63)
தியான வாசகங்களும், விளக்கமும்
அம்மா, அப்பா அருளால், ஞானகுரு அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால், அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை, பேரொளியை, நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…… என்று கண்ணின் நினைவை புருவ மத்தியில் செலுத்தி, உங்கள் உயிரான ஈசனை வேண்டி, ஏங்கி தியானிக்கவும்.

சப்தரிஷிகள் உபதேசித்து, உணர்த்திய அருள்வழி, எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா……

இருளை அகற்றி, ஒளியின் உணர்வினை தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் சப்தரிஷிகள். ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, ஏழாவது நிலைகள் பெற்று, உணர்வின் ஒளியின் சரீரமாக வாழ்பவர்கள் ரிஷிகள்.

அவர்கள் மனித சரீரத்தில் வாழ்ந்த காலத்தில், தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி, அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய,
அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று,
அந்த அருள் ஞான வழியினை எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனை வேண்டி ஏங்கி இருக்கவும்.

எங்கள் சொல்லும் செயலும், புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா…

நாம் நுகர்ந்த உணர்வுகளை, சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது,
நமது சொல்லின் உணர்வுகளானது
நமது சொல்லைக் கேட்போரின் உணர்வுகளை,
புனிதம் பெறச் செய்யக்கூடிய அருள்சக்தியாகவும்,
அவர்களது உடல்களில் தெளிந்த மனத்தைக் கொடுத்து,
மகிழ்ந்து வாழச் செய்யக்கூடிய அருள்சக்தியாக,
அமைய வேண்டும் என்றும்,
எங்கள் செயலை யார் பார்த்தாலும்,
அவர்கள் வாழ்க்கையில் புனிதம் பெற வேண்டும்
என்றும் எண்ணினால், நமது உயிர் அதையே நம்முள் ஜீவ அணுவின் கருவாக உருவாக்குகின்றது.

நாங்கள் பார்க்கும் அனைவரும், நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா….

நாம் யாரைப் பார்க்கிறோமோ, “அவர்கள் நலம் பெற வேண்டும், வாழ்க்கையில் வளம் பெற வேண்டும்” என்ற உணர்வை நாம் நமக்குள் எடுத்துக் கொண்டால், அவர்கள் செய்யும் தவறான உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. நமது நல் உணர்வின் தன்மையே நமக்குள் வளர்கின்றது.

நம் எண்ணத்தின் நிலைகள் கொண்டு, அவர்களை நலம்பெறச் செய்யும் சொல்லாக வருகின்றது. அவர்கள் அதைக் கேட்கும் பொழுது, நலம் பெறும் சக்தியும் பெற முடிகின்றது.

எங்கள் பேச்சும், மூச்சும், உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா….

உலகில் உள்ள, அனைவருடைய உணர்வுகளையும் நாம் கேட்டு அறிந்துள்ளோம். “நமக்குள்” உலக மக்களின் உணர்வுகள், அணுத்தன்மை அடைந்துள்ளது.

நமக்குள் பகைமை உணர்வுகளோ, மற்ற உணர்வுகளோ இருப்பினும், நாம் உலக மக்கள் அனைவரும் அமைதி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி தியானிக்கப்படும் பொழுது, நமக்குள் இருக்கும் அணுக்கள், நாம் எண்ணிய வழிப்படி அமைதி பெறுகின்றது.
அமைதியாக இயங்கத் தொடங்குகின்றது.
நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாற்றுகின்றது.
அவ்வாறு மாற்றுவதற்கே துருவ தியானம்.
“ஓம்…” என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை, எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்.

நமது உயிர், “ஓ” என்று இயங்கிக்கொண்டே உள்ளது. நாம் எதைப் பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, எண்ணுகின்றோமோ, நுகர்கின்றோமோ, இவை அனைத்தையும் நமது உயிர்
“ஓ” என்று பிரணவமாக்கி
“ம்” என்று ஜீவ அணுவை உருவாக்கும் அணுக்கருவாக
விளையச் செய்கின்றது.

நாம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, இதுவரை தியானித்த உணர்வுகள் அனைத்தையும் நாம் நுகரப்படும் பொழுது, நமது உயிர், நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைகளை நாதங்களாக இயக்கி, (அரங்கநாதன்) நுகர்ந்த உணர்வின் தன்மையை வைத்து, நம்மை ஆளுகின்றது, ஆண்டவனாக இயக்குகின்றது.

உடல் ஒரு அரங்கம், நமது உயிர், “அரங்கநாதனாக” அரங்கத்திலிருந்து, நுகரும் உணர்வுகளை நாதங்களாக அனுப்புகின்றது. நாதத்தின் இயக்கமே உணர்ச்சிகள். “ஆண்டாள்”.
ஆகவே, “அனைவரும் நலம் பெற வேண்டும், மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற வேண்டும்” என்று, தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நாம் நுகர்ந்தால், அது அரங்கநாதனாகி, நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, தீமைகளை அகற்றும் நாதமாக நம் உயிர் இயக்குகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ, அதை வைத்து ஆள்கின்றது, நம் உயிர். நாம் எதை நுகர்கின்றோமோ, அதனின் தொடர் கொண்டு நமது உடலை இயக்கச் செய்கின்றது. உணர்வின் தன்மையினை உடலாக மாற்றுகின்றது. இருளை அகற்றி ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.

நற்குணங்களின் உணர்வை சுவாசமாக்கி, நல்ல மணமாக, நம்மை ஆளும் ஆண்டவனுக்கு, ஆராதனை செய்வோம்.

நாம் அனைவரும் நலம் பெறவேண்டும் என்றும், பண்புகள் வளரவேண்டும் என்றும், தெளிந்த மணம் பெறவேண்டும் என்றும், மலரைப் போல மணமும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்றும், நாம் எண்ணத்தால் எண்ண வேண்டும். அப்படி எண்ணும் பொழுது,
நுகர்ந்த உணர்வுகள் நுகரப்பட்டு, உயிரிலே படும் பொழுது,
உயிரான ஈசனுக்கு ஆராதனை மட்டுமல்ல,
அபிஷேகமும் செய்கின்றோம்.
நாம் நுகரும் உணர்வுகள்தான் உணர்வின் மணமாக”, உணர்வின் அலையாக உடல் முழுவதும் படரப்பட்டு, உயிரால் அமைக்கப்பட்ட, இந்த உடலான ஆலயம் பரிசுத்தமாகின்றது. உடலில் உள்ள நல்ல குணங்களுக்கு அமுதாகவும் அமைகின்றது. நமது உடலான சிவத்துக்கும் மகிழ்ச்சியான சக்தியாக கிடைக்கின்றது.

எனவே, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால், நமது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த, தீமைகளை மாற்றிடும் அரும் பெரும் சக்தியாக, நம்முள் உருவாக்கும். மகிழ்ச்சி என்ற உணர்வினை நமக்குள் தோற்றுவிக்கும்.

அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் நுகர்ந்து, உணர்வை ஒளியாக மாற்றி, உயிரான ஆண்டவனுக்கு ஆராதனை செய்வோம்.

ஆலயங்களில் தீப ஆராதனை காட்டும் பொழுது, அங்கே இருள் அகன்று, அங்கிருக்கும் பொருள் தெரிகின்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகரும் பொழுது, அது நமக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி,
மெய்ப் பொருளைக் காணச் செய்யும்,
பிரகாசமான நிலைகளை நமக்குள் உருவாக்க உதவுகின்றது.

நாம் எண்ணும் நல்ல உணர்வை, இறைவனாகத் துதிப்போம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரில் மோதி, நம்மில் கலந்து இறையாகின்றது. இறையான உணர்வுகளின் தொடர் கொண்டு, நமது உயிர் அதன்வழி இயக்குகின்றது. ஆகவே, நாம் நமக்குள் நல் உணர்வுகளை இறையாக்குவோம்.

நாம் எண்ணும் நல்ல குணங்களை, நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்.

நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ, அவை அனைத்தும் நம் உடலுக்குள் தெய்வமாக நின்று, நல்ல உணர்வுகளையும், நல்ல உணர்ச்சிகளையும் தூண்டி, நம்மைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மலருகின்றது.
நாம் ஒவ்வொரு நல்ல குணத்தையும்
நமக்குள் நம்மைக் காக்கும் சக்தியாக
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
எண்ணி ஏங்கி தியானிப்போம்.

நன்மைகள் பல செய்யத் துணிவோம்.

நன்மைகள் செய்யத் துணிவு வேண்டும். நாம் பலருக்கு நன்மைகள் செய்தாலும், எதிர்மறையான உணர்வுகளைச் சந்திக்க நேர்ந்தால், துணிவை இழக்காது, “அவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வுகளை” நமக்குள் வளர்த்திட வேண்டும் என்பதே இதன் பொருள்.

நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள், உடல் ஆலயம். மனிதராக உருவாக்கிய அரும்பெரும் சக்தி, சர்வத்தையும் காத்திடும் அருள் சக்தி கொண்ட உடல் என்ற நிலைகளில், நாம் அனைவரையும் மதித்தல் வேண்டும்.
உங்களை யாம் மதித்தால்,
எமக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும்
யாம் மதித்தவராவோம்
என்று நமது குரு எமக்கு உணர்த்தினார். குரு காண்பித்த அருள்வழியில், நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்.

உடலைக் கோவில் என மதிப்போம்.
          
ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதித்து, அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம். சந்தர்ப்பத்தால் தீய உணர்வுகள் உடலான கோவிலுக்குள் சேர்ந்திருந்தால், ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம், பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அங்கே படர்ந்து, அந்த ஆன்மா தூய்மை அடைய வேண்டும் என்று நாம் எண்ணினால், நாம் நுகரும் உணர்வுகள், நமது ஆன்மாவைப் புனிதம் அடையச் செய்கின்றது. நமது உடலான ஆலயம் தூய்மைப் படுத்தப்படுகின்றது. அதன்வழி நமக்குள் மகிழ்ச்சி பெறும் தன்மை உருவாகின்றது.

அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் எனத் துதிப்போம்.
நாம் எதையெல்ல்லாம் எண்ணுகின்றோமோ, அவை அனைத்தையும் ஈசனாக இருந்து உருவாக்குவது நமது உயிர். உருவாக்கிய உணர்வுகள் அனைத்திற்கும், குருவாக இருப்பதும் நமது உயிர். நாம் எண்ணியதை நம்முள் இயக்குவதும், இறையாக்குவதும் (இறைவன்), இறையின் உணர்வுகளைச் செயலாக்குவதும் (தெய்வம்) நமது உயிரே.
எண்ணிய உணர்வை உடலில் வளர்த்து,
உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை
தன்னுடன் எடுத்துச் சென்று,
மறு உடலை உருவாக்குவதும் உயிரே.
நாம் நல் உணர்வுகளைக் கவர்ந்து கொள்ளும் பொழுது, நம்முள் சொர்க்கலோகத்தை உருவாக்கி, நம்மை மகிழச் செய்வதும் நமது உயிரே.

தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம்.

நம் உயிர் கடவுளானாலும், நம்மை மனித உருவாக உருவாக்கிய கடவுள், நம் தாயே, தந்தையே. தெய்வகுணம் கொண்டு உருவாக்கிய, தாயின் உயிரே கடவுள். தெய்வமாக நம்மைக் காத்தருளியதும் தாயே.

நாம் எதும் அறியாத குழந்தையாக இருக்கும் பருவத்தில், நாம் ஒரு சிறு நெருப்பைக் கண்டாலும், உடனே அங்கே தாவிச் சென்று அதைத் தொட முயல்வோம். அப்பொழுது நம்மை ஈன்ற தாய், உடனே அங்கே வந்து, “இது நெருப்பு, சுட்டுவிடும்” என்று அந்த இடத்தில் குருவாக இருந்து, நமக்கு நல் அறிவை ஊட்டி, நாம் நெருப்பைத் தொட்டு விடாதவாறு பாதுகாக்கின்றார்கள்.

இப்பொழுது, ஞானிகள் கொடுத்த அருள்ஞானத் தத்துவங்களை நாம் அறிந்து கொள்கிறோம் என்றால், அதுவும் நம் தாய் தந்தையர் கொடுத்த, பூர்வ ஜென்ம வினைகளே.

ஆகவே, நாம் நம் தீமைகளை நீக்கி, அருள் ஞான சக்தியை வளர்ப்பதற்கு, நல் பாதையைக் காண்பித்த முதல் தெய்வமாக, நமது தாய் தந்தையை மதித்திடல் வேண்டும்.

நல் வழி காட்டும் குருவை அடைவோம்

நமக்கு, எப்பொழுதும் நல் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும், நமது தாயை குருவாக மதித்து எண்ணினால், நமது வாழ்க்கையில் நல்வழியில் வாழ நமக்கு இது உதவும்.

தன் இனம் தழைய வேண்டும், தழைத்தோங்க வேண்டும்,
அருள்ஞானம் பெறவேண்டும், என் குழந்தை மகிழ வேண்டும்,
உலகையே வென்றிடும் நிலையும்,
அனைவரும் போற்றும் நிலையும் பெறவேண்டும் என்று
தாய் கற்பனையினைக் கூட்டுகின்றது.
தாய் தன் உணர்வினை நமக்குள் பாய்ச்சுகின்றது.

அதன் வழியில், இளமைப் பருவத்தில் தாய் உற்று நோக்கும் உணர்வையும், தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் கொண்டு, தாயின் எண்ணத்தை நமக்குள் வளர்க்கின்றது.

வளர்ச்சியின் பருவத்தில், தன் குழந்தை திசை மாறினாலும், தன் குழந்தைக்கு நல்வழி காட்டுகின்றது, ஞானப்பாலை ஊட்டுகின்றது. நம்மைக் காக்கின்றது, நல்வழி புகட்டுகின்றது. அப்பொழுது நமது குரு யார்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நம்மைக் காத்தது,
நம்மை உருவாக்கியது,
நம்மை நல்வழி காட்டிய குரு, நமது தாயே.
நமது உடலில் “தாயின் காத்திடும் உணர்வின் பதிவுகள்” உண்டு. அதன் பேச்சும், மூச்சும், சூரியனின் காந்தசக்தி கவர்ந்து வைத்துள்ளது.

ஒரு செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால், அதனை அலைகளாக மாற்றி, நமது பூமியில் பரவச் செய்கின்றது. அந்தச் செடியில் விளைந்த வித்தை, பல நாள் கழித்து, மண்ணில் அந்த வித்தினை ஊன்றினால், புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு, தாய்ச் செடியின் சத்தினை நுகர்ந்து, அதே செடியாக வளர்ந்து, அது தன் வித்தினைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

இதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில் தாய் ஊன்றிய உணர்வின் சத்து, நாம் மறந்திருப்பினும் காற்றிலே அது உண்டு. அறிந்தபின், தாயின் உணர்வை நுகர்ந்து, அன்னையின் அருளைப் பெறவும், அதன் வழியில் வளரும் தனமையைக் கொண்டு சென்றால்,
நமது வாழ்க்கையில் அதுவே குருவாகி,
நமது வாழ்க்கையை வழி நடத்தும்.

குரு காட்டும் வழியை மதிப்போம்

அன்னை தந்தை உணர்வுகள் தான், நமது உடல். நம்மைக் காக்க வேண்டும் என்ற, தாய் தந்தையின் உணர்வு நமக்குள் பதிவு கொண்டு, அவர் அருள் பெற்று, விண்ணின் ஆற்றலை நம்முள் ஏங்கிப் பெறும் சக்தியைப் பெறுதல் வேண்டும். அதுவே குருவழி. அன்னை தந்தை இல்லையென்றால், அருள் உணர்வு நமக்கு இல்லை.

அன்னை தந்தையின் உணர்வை எண்ணி, ஏங்கி நுகரும் பொழுது, அவர்கள் உடலிலிருந்து வரும் உணர்வுகள், நமக்குள் இயக்குகின்றது. ஆகவே, நமது அன்னைதான் நமக்கு முதல் இடம், இரண்டாவது தந்தை.

குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம்

அன்னையின் உணர்வின் தன்மையை நாம் எண்ணி, அன்னை தந்தை அருளால், அன்னையின் கருவிலே அகஸ்தியர் பெற்ற அருள் சக்தியைப் பெறுவோம்.

சந்தர்ப்பத்தால் தன்னைக் காக்க, நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அகஸ்தியரின் தாய் தந்தை நுகர்ந்தனர். இதனால் கருவிலிருக்கும் குழந்தை, நஞ்சினை வென்றிடும் தன்மை பெறுகின்றது.
தாய் தான் நுகர்ந்த உணர்வுகளை,
நஞ்சினை வென்றிடும் சக்தியை,
தன் கருவிலுள்ள சிசிவினிடத்தில் உருப்பெறச் செய்கின்றது.
இதைப் போன்றுதான், நமது தாயும் உருவாக்கினார்கள்.
        
ஆகவே, அகஸ்தியர் நஞ்சினை வென்றிடும் உணர்வைப் பெற்றார். நாமும் நஞ்சினை வென்றிடும் உணர்வைப் பெறவேண்டும் என்றால், நமது தாயின் உணர்வுகள், எப்பொழுதுமே நம் உடலுக்குள்ளே இணைந்தே வருகின்றது.

விபத்துக் காலங்களில் “அம்மா” என்று கூவினால் தாயின் உணர்வுகள் உடனடியாக உங்களைப் பாதுகாக்கின்றது. ஆகவே, நமது தாயின் உணர்வுகளை குருவாக ஏற்று, அதன்வழி கடைப்பிடிப்போம்.

குருவின் துணையால், அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை, பேரொளியை, நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்படி நாம் எண்ணி ஏங்கும் பொழுது, நமது தாயின் அருளே, நமக்கு இவைகளின் சக்தியை ஊட்டுகின்றது. தாய் நம்மைக் காத்த உணர்வும், நாம் இன்னல்படும் நேரத்தில் விழித்திருந்த உணர்வும், நம்மிடம் பதிவு உண்டு.

அதன் துணையுடன், நாம் அன்னை தந்தை அருளால், “அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை, நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனை எண்ணி ஏங்கும் பொழுது, நம் உயிரும் குருவாகின்றது. நாம் எண்ணுவது நமக்குள் அருள் சக்தியாக மாறுகின்றது.

ஆகவே, இதனை நமக்குள் உருவாக்க, நமது குருவழி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வழி நாம் இதனைப் பின்பற்றி, அருள்வழியினைக் கடைப்பிடித்து, இருளை அகற்றி, அருள்ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்கி,
பிறவியில்லா நிலையை அடைவதே
அகஸ்தியர் காண்பித்த அருள்வழி.

ஏனெனில், சந்தர்ப்பத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும், கணவன் மனைவிக்குள்ளும், நம் மக்களுக்குள்ளும் எத்தனையோ தீமையின் உணர்வுகள் வருகின்றது. அதையெல்லாம் உணர்வாக நாம் நுகர்ந்தால், பகைமையூட்டும் குருவாக நம்மை இயக்கிவிடும்.

ஆகவே, அருள்ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கும், நல்வழி காட்டும் குருவை அடைவோம். குரு காட்டும் வழியை மதிப்போம். நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும், நம் உயிரே குருவாக இருக்கின்றது.

நம் உயிரான குருவின் துணை கொண்டு, அகஸ்தியர் தம் வாழ்க்கையில் பெற்ற, நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றிய, பேரருள் உணர்வினை நாம் பெறுவோம்.

அகஸ்தியர் துருவனாகி, திருமணமானபின் துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றெனெ இணைந்து, வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி ஒன்றி வளர்ந்தனரோ, இதே போல இல்லற வாழ்க்கையில் கணவனும், மனைவியும், ஒருவரை ஒருவர் மதித்து நடப்போம் என்ற உணர்வினை நுகரப்படும் பொழுது, அதுவே குருவாகின்றது. அதுவே நம்மை இயக்குகின்றது.

இல்லற வாழ்க்கையில், கணவனும் மனைவியும் வெறுப்பு அடையும் பொழுது, அவர்கள் நரகத்தை அடைகின்றனர்.

ஆகவே, நமக்குள் இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டுமென்றால், தீமைகளை அகற்றிய, துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறுதல் வேண்டும்.

இப்படி, நமக்குள் பேரருள் உணர்வுகளை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது, நமக்குள் எத்தகைய தீமைகளும் வராமல் தடுக்கலாம். நமது உணர்வுகளை பேரொளியின் உணர்வுகளாக, நமக்குள் உருவாக்கலாம். எமது அருளாசிகள்.
(பக்கம் 64-69)
நமது பூமியில், உண்மையின் தன்மைகளைக் கண்டுணர்ந்த முதல் மனிதர் அகஸ்தியர். அகஸ்தியர் தம் வாழ்நாளில், தமது தாயின் கருவில் பெற்ற  பேரருள் துணை கொண்டு, மலைப் பகுதிகளில் உள்ள தாவர இனங்களின் உணர்வுகளை நுகர்ந்து அறிவதற்காக, பல பகுதிகளுக்குச் சென்றார்.

இந்திய எல்லைக்குள் எத்தனை மலைப் பகுதிகள் இருந்ததனவோ, அத்தனை மலைப் பகுதிகளிலும் அலைந்து திரிந்து ஒவ்வொரு தாவர இனத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறிந்தார்.
காவிரி என்று சொல்லும் பகுதியில்,  "பாகமண்டலம்"  என்ற ஒரு இடம் உண்டு. அந்த பாகமண்டலத்தில், அகஸ்தியர் அமர்ந்து, தம்முள் விளைந்த சத்தினை அங்கே பரப்பப்படும்பொழுது, மேகக் கூட்டங்கள் வருவதை அங்கே அடக்கி, தமக்கு வேண்டிய நீர் நிலைகளை உற்பத்தி செய்து கொண்டவர் அகஸ்தியர்.

வறண்ட பிரதேசமாக இருந்த இடங்களுக்கு, அகஸ்தியர் சென்று அமர்ந்து தியானம் செய்ததன் காரணமாக, அங்கே மேற்பரப்பில் நீர் ஊற்றுக்கள் தோன்றின.

இப்படி,  அகஸ்தியர் சென்ற இடமெல்லாம், அவர் பாதம் பட்ட இடமெல்லாம், அகஸ்தியருடைய அருள் சக்தி மண்ணில் படரப்படும் பொழுது, நீரினைக் கவரும் ஆற்றல் பெற்றன.

ஏனென்றால் அகஸ்தியர், வேண்டிய நீரை, ஜீவ சக்தியைக் கவரும் சக்தி பெற்றவராக இருந்தார். இதனால் அவர் சென்ற இடமெல்லாம் நீர் நிலை பெருகி, செழிப்பின் தன்மையைப் பெற்றன. 

அது சமயம், மனிதர்களுக்குத் தேவையான பற்பல சஞ்சீவிகளையும், தாவர இனப் பொருள்களையும் உற்பத்தி செய்தவர், அகஸ்தியர்தான்.
அகஸ்தியர் அக்காலத்தில் தாம் கற்றுணர்ந்த உணர்வின் தன்மையை, தமது உடலில் விளைவித்த நிலைகள் கொண்டு, மனிதர்கள் உண்பதற்கு ஏற்ற கனிவர்க்கச் செடிகளை, தாவர இனங்களை உருவாக்கினார். நாவற்பழம் போன்று இருக்கும். அது அந்த காலத்தில், மனிதருக்கு உணவாக உட்கொள்ள உதவியது.

கொய்யாப்பழத் தாவர இனங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது என்று கூறுகின்றார்கள். காட்டுப் பகுதியில், கொய்யா மரத்தை ஆதியில் உருவாக்கியவர் அகஸ்தியர் தான். கொய்யா மரம், நம் நாட்டுச் சரக்குதான்.

காட்டுப் பகுதியில் விளைந்த கொய்யாப் பழங்கள், மலைவாசிகளுக்கு உணவுப் பொருளாக இருந்தது. வரகு என்று சொல்கின்றோமே, அந்த தானியமும் அகஸ்தியரால் உருவாக்கப்பட்டது தான்.

இன்னொன்று அரிசி போன்றே இருக்கும், ருசியாகவும் இருக்கும். அதை எடுத்து தேய்த்துச் சாப்பிட்டால், ரொம்ப ருசியாக இருக்கும்.  இவைகளை அகஸ்தியர் மனித வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று செயல்படுத்திய நிலைகள்.

இது போன்ற நிலைகளை, எமக்குக் காண்பித்து உணர்த்தியவர் குருநாதர் தான். யாம் உண்மையின் உணர்வை அறிவதற்காக, இத்தனையும் கொடுத்தார்.

எமக்கு படிப்பு அதிகமில்லை. எமக்கு பல சக்திகள் கொடுக்கின்றீர்களே, யாம் தவறாகப் பயன்டுத்திவிட்டால், பல தொல்லைகள் வந்துவிடுமே என்று குருநாதரிடம் சொன்னோம்.

தொல்லைகள் செய்துவிட்டால், அந்த பாவத்தை யாம் தானே சுமக்க வேண்டும். ஆகவே, எம்மை அறியாது தவறுகள் வந்தாலும், எம்மைக் காத்தருளச் செய்வது உங்களுடைய பொறுப்பு என்று கூறினோம்”.
சந்தர்ப்பத்தால், பிறரை வெறுக்கும் தன்மை வந்தால்,
தவறான உணர்வுகளைப் பாய்ச்சி அவரைத் துன்புறுத்தினால்,
துன்புறுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால்,
எமது உடலில் துன்புறுத்தும் உணர்வுகள் உருவாகும்.
அப்படித் துன்புறுத்தும் அணுக்கள் உருவானால்,
நீங்கள் எனக்கு எத்தனை வித்தைகள் கொடுத்தாலும். எம்முள் துன்புறுத்தும் அணுக்கள் பெருகி, இந்த மனித உடலையே சீர்குலைத்துவிடும்.

இப்படி உடல் உறுப்புகள் சீர்கெட்டு, எதன் உணர்வின் தன்மை வளர்ச்சியடைகின்றதோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, உயிர் வெளியே சென்றபின், நான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் மறு உடலை உருவாக்கிவிடுமே என்று, குருநாதரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.

இது போன்ற சில நேரங்களில், பச்சிலை ஒன்றை எமது கையில் தடவி, மின்னலைப் பார்என்று குருநாதர் கூறுவார்.

கண் கேட்டுவிடும், “யாம் பார்க்க மாட்டோம்”, என்று கூறுவோம். இதனால் இருவருக்கும் சண்டை வரும். 

நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாயே, நான் அருகில் இருக்கின்றேன்என்று கூறுவார்.  இப்படி, முடியாததைச் செய்யச் சொல்வார். நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாயே, செய்என்று குருநாதர் கூறுவார்.

செய்துதான் ஆகவேண்டும், செய்ய வைத்தும் விடுவார்.  இப்படி பல உண்மையின் உணர்வுகளை எமக்குக் காண்பித்தார் குருநாதர்.
ஆக, நாம் எந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொள்கின்றோமோ, அதன் கலவைக்கொப்ப நமது உணர்வுகளையும், உடலையும் மாற்றிக் கொண்டே இருக்கும் நமது உயிர்.

அகஸ்தியர் இருண்ட உலகத்தை வென்று,
ஒளியின் சரீரமாக உணர்வை ஒன்றச் செய்து,
இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைத்து, நம்மிடத்தில் பெருக்கும் பொழுது, நாம் பிறவி இல்லா நிலையை அடைகின்றோம்.

நந்தீஸ்வரன் சிவனுக்கு கணக்குப் பிள்ளை என்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள். இருளை அகற்றிய அருள்ஞானிகளின் உணர்வை, நமக்குள் அதிகமாகச் சேர்க்க, சேர்க்க, அந்த கணக்கின் பிரகாரம் நாம் புவியின் ஈர்ப்பைக் கடந்து, அருள் ஒளியை நமக்குள் பெருக்கி,  நமது உடலை விட்டுச் செல்லும் உயிர், எதன் வலு பெற்றதோ, அங்கே அழைத்துச் செல்லும்.

அங்கே அழைத்துச் சென்று,  தொக்கியுள்ள இருளை, உடல் பெறும் உணர்வினைக் கரைக்கின்றது.  அங்கே கரைத்தால்தான் இந்த பிரபஞ்சத்தில் பரவப்பட்டு, பிரபஞ்சத்தில் வரும் இருளை ஒளியாக மாற்றுகின்றது.

அகஸ்தியர் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாக இந்த பிரபஞ்சத்திலிருந்து விஷத்தின் தன்மையை தம்முள் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும், அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர வேண்டும்.

அதை நுகர்ந்து, அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால், நமது ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுகின்றது. நாமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து, விண்ணில் ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ முடியும். சூரியனே ஒரு காலம் அழிந்தாலும், நமது ஒளியின் சரீரம் மாறாது.

இன்று சூரியன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.  கார்த்திகை நட்சத்திரம், சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து,  ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது. 
ரேவதி நட்சத்திரமும், விசாக நட்சத்திரமும், இப்படி ஐந்தாறு நட்சத்திரங்கள், பெண்பால் கொண்ட நட்சத்திரங்களும், ஆண்பால் கொண்ட நட்சத்திரங்களும்,  தங்களுக்கென்று உபகோள்களை உருவாக்கி, ஒரு பிரபஞ்சமாக தன் வளர்ச்சிக்குச் செல்கின்றன.

அப்பொழுது, நம் பிரபஞ்சத்திற்கு உணவு கிடைக்காது. நமது பிரபஞ்சம் நாளடைவில் பலவீனமடையும்.  27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால், நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும்.

ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது. குறுகிய காலமே வாழும் சூரியனும் செயலிழந்து விடும். பின், அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும், கோள்களும் செயலிழந்து விடும்.

ஆக, ஈர்ப்பு வட்டத்தைக் கடந்தால், 2000 சூரியக் குடும்பத்தில் அவைகள் தன் வளர்ச்சிக்கு ஈர்க்கப்பட்டு, அதில் சுக்குநூறாகி, மற்ற கோள்களுடன் மோதி, ல்லது அடுத்த பிரபஞ்சத்தில் நுழையும் போதே ஆவியாக மாறி, அதற்கு உணவாக சேரும் தன்மைதான் பிறக்கின்றது.

நமது பிரபஞ்சத்தில் உருவான உயிரணுக்கள், மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்து, மற்ற பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்று, மற்ற கோள்களில் சென்று சேர்கின்றது.

அந்தக் கோள்களானது நமது பூமியைப் போன்றே, தாவர இனங்களையும் மற்ற நிலைகளையும் பெற்றிருந்தால், அங்கு ஈர்க்கப்பட்டு, உணர்வுக்கொப்ப உடல் அமைந்து, மனிதராக உருப்பெறும் தன்மை உண்டு.

அப்படி இல்லையென்றால் கிருமிகளாக, விஷத்தின் தன்மையைக் கொண்ட உணர்வின் தன்மை வளர்ச்சியற்ற நிலையில் தான் இருக்கும். நட்சத்திரத்தில் கிருமிகள் இல்லை, கோள்களில் இருக்கும்.

இது போன்று, கால சூழ்நிலைகள் மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் இந்த மனித உடலில் இருக்கும் போதே, துருவ  நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை, நம்முள் பெற்றிட வேண்டும். 

துருவ ட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நம்முள் பெறுவது, எளிதான காரியம்.  கடினமான காரியமில்லை. வருடம் முழுவதும் நாம் தவம் இருக்க வேண்டியதில்லை.

தினமும் காலை 4.00 மணியில் இருந்து 6.00 மணிக்குள், ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளில் ஏங்கியிருங்கள்.
இப்படி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைக் கவர்ந்து, உங்களுடைய இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு வீரியச் சத்தைக் கொடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை ஏங்கிப் பெற்றோம் என்றால், நமது உடலில் உள்ள தீய அணுக்களை மாற்றி, நல்ல உணர்வுடன் வாழ்ந்திடவும், நோய்களில் இருந்து நாம் தப்பவும், மனபலம் கொண்டு நல்வாழ்க்கை வாழவும் இது உதவும். 

அகஸ்தியருக்கு முன், நஞ்சுகள் வலுவை இழந்தது  போன்று, நம்முள் சேர்ந்த நஞ்சுகளும் வலு ழக்கின்றன.

பேரருள் பேரொளியின் தன்மை நம்முள் பெருகி, பிறவியில்லா நிலையினை, பெருவீடு பெருநிலையினைப் பெறும் தகுதியினை, நாம் அனைவரும் பெறுகின்றோம். எமது அருளாசிகள்.