ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2023

அகஸ்தியன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஜீன்களை நாம் பெற வேண்டும்

விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம்… போல அணு ஜீன்களை எடுத்து அதைப் பல விதமாக மாற்றி அமைக்கின்றனர். ஒரு தாவர இனத்தில் உள்ள ஜீன்களை எடுத்து மற்ற தாவர இனங்களில் இணைத்துப் புதுப்புதுக் காய்கறிகளையும் கனிகளையும் உருவாக்குகின்றனர்.

1.இது போக நாம் அணியும் உடைகளின் நிறங்களுக்கு உண்டான சாயங்களையும் புதிதாக உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள்
2.எந்த வகையான நிறம் வேண்டுமோ அந்த நிறத்தைத் தாவரங்களின் வித்துக்களில் இணைத்து விட்டால்
3.அதிலே உருவாகும் பஞ்சு அந்த நிறத்திற்கு வந்து விடும் என்று…!

இவர்கள் நினைத்தனர்… கெமிக்கல் கலந்த சாயத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… அதில் இருக்கும் விஷத்தன்மைகள் நீரிலும் கலந்து ஆவியாகவும் சென்று காற்று மண்டலமும் நச்சுத்தன்மையாகின்றது… இதை மறைக்க இப்படி நேரடியாக வித்திலிருந்தே மாற்றி விடலாம் என்று…!

எதுவுமே விஷத்தின் தன்மை கொண்டு தான் மற்றதுக்குள் ஊடுருவச் செய்ய முடியும். வித்துக்குள் இந்த ஜீன்களை இணைக்கப்படும் பொழுது இதே விஷத்தின் தன்மை பெருக்கி அதனுடைய மலத்தின் தன்மை பஞ்சின் நிலையும் மாறுகிறது.

ஆனாலும்…
1.இப்படி உற்பத்தி செய்து அந்த உடைகளை நாம் மேலே ஆடையாக அணிந்தால்
2.உடலின் துடிப்பின் வெப்பத்தினால் அதில் துணியிலிருந்து வெளிப்படும் அலைகளால் உடலில் கடும் நோய்களாக வரத் தொடங்கும்.
3.ஆக… அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களாக மாறும் என்பதை விஞ்ஞானிகள் மறந்து விட்டனர்.

எதைச் செயற்கையின் தன்மையில் கொண்டு வருகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் பெரும் மாற்றங்களைத் தான் உண்டாக்கும்.

நிறங்களை மாற்ற வேண்டும்… உருவாக்க வேண்டும்… என்றால் விஷத்தின் தன்மை கொண்டு தான் அவைகள் இயங்குகின்றது. மனிதன் இப்படி எத்தனையோ நிலைகளில் அந்த இயற்கையின் நியதிகளை மாற்றிக்கொண்டு வருகின்றான்.

ஆகவே
1.இப்பொழுது நாம் எதை நுகர வேண்டும் எதை உடலுக்குள் அணுவாக மாற்ற வேண்டும் என்று
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உண்மைகளை உணர வேண்டும்.

அக்காலத்தில்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும்போது பல விஷத்தை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான். எப்படி…?

அவனுடைய தாய் தந்தையரோ காடுகளில் வாழப்படும் போது விஷ ஜந்துக்களும் கோடூர விலங்குகளும் அவர்களைத் தாக்கி விடாமல் இருக்க
1.விஷத்தை ஒடுக்கும் மூலிகைகளை அரைத்து அதை உடலில் முலாமாகப் பூசிக் கொண்டு
2.அந்த மணத்தால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கர்ப்பமுறும் காலத்தில் உடலிலிருந்து வெளிப்பட்ட மூலிகைகளின் மணங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் பரவி இரத்தத்தின் வழியாகக் கருவில் இருக்கக்கூடிய அந்தச் சிசுவிற்கும் அது கலந்து விடுகின்றது.

அதாவது முதலில் சொன்னபடி… வித்துகளில் எப்படி விஞ்ஞானிகள் செயற்கையாக ஜீன்களை இணைக்கின்றனரோ அது போல் அகஸ்தியனுக்கு நஞ்சினை வென்றிடும் சக்தி இயற்கையாகவே இப்படிக் கிடைக்கிறது.

ஆனால் விஞ்ஞானிகள் விஷத்தின் ஆற்றலைக் கலந்து ஒரே நிலையை பல நிலைகளாகப் புதிது புதிதாக மாற்றிக் கொண்டு வரும் போது ஒரே வித்தாக இருந்தாலும் அது கலந்த நிலையில் சாயங்களை (நிறங்களை) மாற்றுகின்றது. இருந்தாலும் அதிலே விஷத்தின் தன்மை ஓங்குகிறது.

இத்தகைய சாயத்தை வடித்துக் கொண்ட அந்த வித்துக்களையோ அந்தச் செடிகளையோ (பருத்திச் செடி) மாடுகள் உட்கொண்டால் அதுவும் விஷத்தன்மையாக மாறுகின்றது.

1.மாட்டின் உடலும் விஷமே இதுவும் விஷமே
2.இருந்தாலும் அதனுடைய குணங்கள் மாறுகின்றது
3.பால் கறக்கும் மாடுகளுக்கு இதை கொடுத்தாலும் பால் பச்சையாகக் கறக்கும்.
4.ஆனால் பின்னாடி தான் இதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்த பின் இதை உரங்களாகக் காட்டுகளுக்கு போட முடியுமே தவிர அதே சமயத்தில் மற்ற உயிரினங்கள் அதை உணவாக உட்கொண்டால் அங்கேயும் வித்தியாசமாக மாறும்.

காளைகளுக்கு இதை கொடுத்தாலும் அதனுடைய உணர்வுகள் அமிலங்களாக மாற்றப்பட்டு அது தன் இனத்தை உருவாக்கும் இணை சேரும் காலங்களில் அது கன்றுகளாக உருவாகும் நிலை வரும் பொழுது “அந்த மாட்டின் கன்றுகளுக்கும் இது மாறத் தொடங்குகின்றது…!”

1.இப்படி ஒரு ஜெனரேஷன் மாற ஆரம்பித்தால்
2.அது மூன்றாவது நிலை நான்காவது நிலை என்று மாடுகளின் உருமாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது நாம் சொல்கிறோம் அல்லவா…! கடந்த காலம் போய் இன்று விஞ்ஞான காலம் வந்துவிட்டது என்று. அது போன்று தான் ரூப மாற்றங்களும்.

விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இயந்திரங்களிலும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே செய்தது பழமை ஆகி விடுகின்றது.

புதிதாகக் கண்டுபிடித்தது வேகத்துடிப்பு அதிகமாகவும் அதனுடைய செயலாக்கங்களும் அதிகமாக வருகிறது. விஷத்தின் சேமிப்பாக இப்படி மாறிக் கொண்டே போகின்றது. இது இன்றைய நிலை.

ஆனால் அக்காலங்களில் நஞ்சினை வென்றிடும் அணு ஜீன்கள் தாய் கருவில் இருக்கும் போது அகஸ்தியன் உடலில் விளைந்தது.

அவன் பிறந்த பின்
1.மற்ற விஷத்தின் தன்மைகள் தனக்குள் நாடாது…
2.அப்படியே வந்தாலும் அதை அடக்கி ஒளியின் உணர்வாக மாற்றும்
3.அறிவின் தெளிவாக இயக்கக்கூடிய சக்தியாக அவனுக்குள் வந்தது.

காரணம் தாய் நுகர்ந்த உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமைந்து நஞ்சை வென்றிடும் சக்தியாக வருகின்றது பிறந்த பின்
1.நஞ்சினைக் காணுகின்றான்… அதனின் இயக்கத்தை அறிகின்றான்
2.நஞ்சினை அடக்கிடும் எண்ணங்கள் உருவாகி… அந்த யுக்தியின் தன்மைகள் பெருகுகின்றது.
3.அதன் வழி அந்த உணர்வை அவன் சுவாசிக்கின்றான் நஞ்சினை வென்றிடும் அணுக்கள் அவன் உடலில் அதிகரிக்கின்றது.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!

தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்தான். விஷத்தின் தன்மை ஒடுக்கினான். சிந்தித்துச் செயல்படும் தன்மையாக அவனுக்குள் வருகின்றது.

பல விதமான தாவர இனங்களின் சக்திகளை எடுக்கும் பொழுது அதனுடைய உணர்வின் இயக்கம் தெளிந்திடும் உணர்வின் அறிவாக அவனுக்குள் வருகிறது. இது எல்லாம் அவன் இளம் வயதில் பெற்ற சக்திகள்.

1.நஞ்சினை வென்றிடும் சக்தியாக உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது
2.அவன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அறிவாக அவனை இயக்குவதும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழி அதன் இனமான உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து
4.அந்த அறிவாகவே அவனை இயக்கத் தொடங்குகிறது.

அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் அகஸ்தியனைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வது.

அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இனி வரக்கூடிய எத்தகைய கடுமையான நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றிட வேண்டும் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).