ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2023

தீமைகள் புகாது தூய்மைப்படுத்தும் நிலையாக ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்

எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசையில் டி.வி.யில் படக் காட்சிகளை காணுகின்றோம்.

அதைப் போன்று தான் மனிதர்களுடன் நாம் பழகப்படும் பொழுது…
1.பணம் கொடுத்தவரும் கொடுக்காதவர்களையும் பதிவு செய்து இருக்கின்றோம்
2.துன்பப்படுத்துவோரையும் துன்பப்படுத்தாதவரையும் பதிவு செய்தாலும் நமக்குத் துன்பம் செய்தவருடைய உணர்வுகள் வலு கொண்டது.
3.நம்மை அறியாமலே துன்பத்தின் உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை நுகந்ர்த பின்
4.துன்பம் செய்தவருடைய காட்சிகள் அடிக்கடி நமக்கு நினைவுக்கு வருகிறது.
5.துன்பம் நமக்குள் வளர்ச்சியாகிச் சிந்திக்கும் நிலைகளும் இழக்கப்படுகிறது.

இதைப் போன்ற தீமைகள் வராது தடுக்க இந்த காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்தோம் என்றால் நம் சிந்தனைகளை அது தெளிவாக்கும்.

காரணம்… துன்பத்தை நீக்கும் ஆற்றல் கொண்ட அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அதை உபதேசிக்கின்றோம்.

உபதேசத்தின் உணர்வினைப் பதிவாக்கி… பதிவாக்கியதை மீண்டும் நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்கள் எண்ணத்தால் அந்தத் தீமைகளை அகற்ற முடியும்.

தீமைகளை அகற்றிடும் மார்க்கம் தான் விநாயகர் தத்துவம்…!

அதன் வழி நாம் செயல்பட்டோம் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றிவிட்டு… மகரிஷிகள் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து அதையே கணங்களுக்கு அதிபதியாக்கும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் சென்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

அருள் ஞானிகள் காட்டியபடி… ஆலயங்கள் அனைத்தும் நம்மைப் பரிசுத்தப்படுத்தும் இடம் என்று எண்ணினால் அதன் வழிப்படி தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு அது நம்மை அழைத்துச் செல்லும்.

ஞானிகள் உணர்வினை நுகர்ந்தறியப்படும் பொழுது…
1.உயிரான அக்கினியில் இந்த உணர்வுகள் பட்டு
2.உடலுக்குள் பரவி தீமைகளை அகற்றிடும் சக்தியாக வருகின்றது.

இது தான் உண்மையான யாகம்...!

நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணத்தால் இடும் மூச்சலைகள் ஆலயங்கள் முழுவதும் படர்கிறது. இதையே நினைவு கொண்டு நீங்கள் செயல்படும் பொழுது இந்தப் பூமியில் உள்ள தீமைகளும் அகலுகின்றது.

ஆகவே…
1.எல்லாருடைய உயிர்களிலும் மகரிஷிகளின் உணர்வுகளைப் பரவச் செய்வோம்
2.எல்லோருடைய உடல்களிலும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்திகளை உருவாக்குவோம்.

ஆலயம் வருவோர் அனைவரும் அந்த அருள் உணர்வைப் பெற்று அவர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளோ பாவ வினைகளையோ நீக்க நாம் இதை அருள் சேவையாகச் செயல்படுத்துவோம்.

ஆகவே சாஸ்திரப்படி… ஆலயங்களுக்குச் செல்வோர் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி
1.தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
2.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்…
3.அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று எவர் சொல்கின்றனரோ
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதி பெற்று… வரும் தீமைகளை அகற்றி…
5.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் மகரிஷிகளுடன் ஒன்றி... பிறவி இல்லா நிலைகள் அடைய முடியும்.